நாள் 27: தன்னையே ஏமாற்றாத சீஷத்துவம் மத்தேயு 8:14-22
இயேசுவின் குணப்படுத்தும் அற்புதங்கள் மனித ஆத்மாவில் அவர் செய்ய விரும்புவதைப் பிரதிபலித்துக் காட்டின. ஜனங்கள் பாவத்தை உண்டாக்கும் கிருமிகளால் பாதிக்கப்பட்டுதுமல்லாமல், மரணத்தைக் கொண்டுவரும் “பாவத்தினால் மரித்தார்கள்”. அவர் ஆத்துமாவில் விடுதலையையும் குணப்படுத்துதலையும் கொண்டு வந்தார்.
நோய்வாய்ப்பட்ட மாமியார் (மத்.8:14-15)
குணப்படுத்தும் இந்த மூன்றாவது அற்புதம் ஓய்வுநாளன்று நடந்தது, தேவை மற்றும் வேதனைகள் இருந்தவர்கள் மத்தியில் ஊழியம் செய்து இயேசு முடித்திருந்தார். இந்த நேரத்தில் பிசாசு பிடித்திருந்ததவர்களை விடுதலையாக்கினார். (மாற்.1:23-26). பேதுருவின் விருந்தோம்பும் வீட்டிற்கு இயேசு சோர்வாக வந்தார். அவர் அமைதிக்காகவும் தனிமையாக இருக்கவும் ஏங்கினார். ஆனால் அங்கு அவர் ஒரு புதிய, அவசர நோயை சந்திக்கவேண்டியிருந்தது. பேதுருவின் மாமியார் ஜுரத்தினால் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாள், அநேகமாக மலேரியாவாக இருக்கலாம். அவளுக்கு அவசரமாக அவரது குணப்படுத்தும் வல்லமை தேவைப்பட்டது. இயேசு அவள் கையைத் தொட்டார். யூதசமுதாயத்தில் பெண்கள் முன்னணியில் இல்லாததால் மிகவும் அசாதாரணமான ஒன்றாகக் காணப்பட்டது. இயேசு தமது அதிகாரத்தின் சான்றுகளை வெளியரங்கமான தேவைகளுக்குப் பயன்படுத்தவில்லை. சில தலைவர்கள் மாறாக பொதுவில் தங்கள் சிறந்ததைச் செய்ய முனைவார்கள், ஆனால் அவரோ தனிப்பட்ட விதத்தில் மக்களின் தேவைகளைக் கவனித்துக் கொண்டார். இந்த அற்புதம் இயேசுவைப் போலவே வெளியரங்கமில்லாமலும் அமைதியானதாகவும் இருந்தது. விசேஷமாக குஷ்டரோகி தன்னை குணப்படுத்தக் கேட்டது குறிப்பிடத்தக்கது, நூற்றுக்கதிபதி தனது வேலைக்காரனுக்காக வந்தான். இங்கே நண்பர்கள்தான் இயேசுவிடம் நோயுற்ற மாமியாரை குணப்படுத்தக் கேட்டார்கள் (மாற்.1:30).
ஆன்மீகத்திலும் உணர்ச்சியின் காய்ச்சலிலிருந்தும் நம்மை விடுவிக்க இயேசு பொறுப்புள்ளவராயிருக்கிறார். அற்புதம் உடனடியாகவும் முழுமையாகவும் நடந்தது. உடனே அவள் பணிவிடை செய்து அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தாள்.
நோய்வாய்ப்பட்ட பிற மக்கள் (மத்.8:16-17)
இயேசுவால் ஓய்வெடுக்க முடியவில்லை. அவர் நோயுற்றவர்களாலும் பிசாசுபிடித்திருந்தவர்களாலும் சூழப்பட்டிருந்தார். அவரது ஒவ்வொரு அற்புதத்திலும் “அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டது” மற்றும் அவர் பொறுமையோ கோபமோ காட்டாமல் அவர்கள் அனைவரையும் குணப்படுத்தினது ஒரு சவாலாக இருந்தது.
அவரது வார்த்தையில் எவ்வளவு வல்லமை இருந்தது ” அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தினார்”. டாக்டர் ஜி.சி. மோர்கன் வசனம் 17ல் கூறப்பட்ட ஏசாயா தீர்க்கதரிசனத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார். “நோயிலிருந்து விடுதலையும் மரணத்தில் வெற்றியும் சிலுவையின் வழியால் எங்களுக்கு மெய்ப்பித்துவிட்டது, ஆனால் தகுதிகாணும் காலத்திற்குத் தேவன் நம் வாழ்க்கையில் நோயை அனுமதிக்கிறார். அதன் பின்னால் எப்போதும் தெய்வீக குறிக்கோள்களும் நோக்கங்களும் உள்ளன, அவற்றை நாம் இப்பொழுதில் உணராமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கலாம்”.
சீஷத்துவத்தின் விலைக்கிரயம் (மத்.8:18-22)
நம்முடைய இரட்சிப்பின் குறிக்கோள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகும். இயேசுவுடன் முதல் சேர விரும்பிய நபர் தானாக முன்வந்து அதைக் கேட்டான், ஆனால் அவனது முடிவு தீவிரமானதாக இல்லாமல் உணர்வால் எடுக்கப்பட்டது. இயேசு அதன் இழப்பீடுகளை மதிப்பிடுமாறு அவனிடம் கேட்டார். சீஷர்கள் தனிமையாகவும், வீடற்றவர்களாகவும் இருப்பார்கள், அவர்கள் வானத்தின் பறவைகள் மற்றும் வயலின் விலங்குகள் போல நிச்சயமற்ற தன்மையுடன் வாழ வேண்டும் என்றார். (மத்.8.20). இயேசு சீஷத்துவத்திற்கு அழைத்தார், ஆனால் அவருடைய சீஷர்கள் கண்களைத் திறந்து அவரைப் பின்பற்ற வேண்டும்.
இரண்டாவதாக இயேசுவுடன் சேர விரும்பியவன் குடும்பப் பொறுப்புகளை சீஷத்துவத்திற்கு முன்பதாக வைத்தான். (மத்.8:21). ஆனால் இயேசு சீரான சீஷராக்குதலுக்கு அழைப்பு விடுத்தார். எனவே இயேசு மக்களை கவனமாக அவரது ஊழியத்தில் சேர்ப்பதற்கு முன் தேர்வு செய்கிறார்.
சுய பரிசோதனைக்கு:
நான் சந்திக்கும் சிரமங்களில் விரும்பத்தகாத குறைபாட்டை நான் காண்கிறேனா, அல்லது அதன் பின்னால் தேவன் என்னைக் காப்பாற்றும் வழிகாட்டுதல் உள்ளதை அடையாளம் காண்கின்றேனா?