Thursday, January 15, 2026
Tamil Bible Blog
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home இயேசுவுடன் நூறு நாட்கள்

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 25

Webmaster by Webmaster
December 11, 2022
in இயேசுவுடன் நூறு நாட்கள்
0
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36
74
SHARES
1.2k
VIEWS

நாள் 25: ஒரு குஷ்டரோகியைக் குணப்படுத்துதல் மத்தேயு 8:1-4

இந்த அதிகாரத்திருந்து நமது சுவிசேஷத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் செயல்கள் முந்தைய அதிகாரங்களில் அவரது உரையைவிட அதிகமாகின்றன. மூன்று குணப்படுத்தும் செயல்கள் ஏசாயா 53-ன் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக பார்க்கப்படுகிறது. முதல் நிகழ்வு இயேசுவின் மிகவும் சுவாரஸ்யமான மலைப்பிரசங்கத்திற்குப் பின்பு அவருடைய வல்லமையை நீரூபிக்கிறதாகவும், துன்பகரமான விளைவுகளின் மூலம் பாவம் வெளியேற்றப்படுவதுமாகும். இது சுருக்கமான பகுதியாயினும், மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. மாற்கு 1:40-45, லூக்கா 5:12-14 ஐயும் சேர்த்து கூடுதலாகப் படியுங்கள். (மாற்கு 1:40-45, லூக்.5:12-14).

You might also like

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

குஷ்டரோகம் காரணமாக பரிதாபமான நிலைமை

முந்தைய காலங்களில் இந்த பயங்கரமான மற்றும் தள்ளிவைத்தலுக்குரிய நோய் குணப்படுத்த முடியாததாக இருந்தது. வரலாற்றாசிரியர் ஜோசபஸ் “குஷ்டரோகிகளை இறந்தவர்களைப் போலவே மதிக்கப்பட்டார்கள்” என்று கூறுகிறார். இடைக்காலத்தில் கூட இந்த பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி ஆசாரியர்கள் இறுதி சடங்கைப் போல நடத்தினார்கள். யூதர்கள் குஷ்டரோகத்தை ஒரு பயங்கரமான தொற்றுநோயாக மட்டுமல்லாமல் தேவனின் நியாயத்தீர்ப்பாகப் பார்த்தார்கள்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மிஷனறி ஸ்தாபனங்கள்; இந்த நோயைத் தடுத்து நிறத்த அளப்பரிய சேவைகளைச் செய்தார்கள், ஆனால் இன்றுவரை அவர்களின் நோயினால் சமூகத்திலிருந்து தள்ளப்பட்டு கடுமையான நெருக்கடிக்குள் உள்ளாகுகின்றனர். அது போல தொழுநோயான பாவமும் நமக்குள்ளும், நம் இரத்தத்திலுமிருந்து பல அருவருப்பான வழிகளில் வெளியேற்றப்படுகிறது.

குஷ்டரோகியின் விசுவாசம் (மத்.8:2)

அவன் ஒரு யூதனாக இருந்தான் (மத்.8.4), நியாயப்பிரமாணத்தின் சட்டம் அவனுக்கு உதவ முடியாது என்பதை அறிந்திருந்தான், ஆனால் அவன் இந்த பயங்கரமான நோயிலிருந்து மீட்கும் இயேசுவின் வல்லமையை விசுவாசித்தான். (ரோ.8:3). அவன் தனது கடுமையான பரிதாப நிலையை அறிந்திருந்தான், ஆனால் இயேசுவின் வல்லமைமீது ஒரு சீஷனுக்கு நன்றாகப் பொருந்தக்கூடிய பயத்தோடும் பணிவோடும் வந்தான். அவன் அனுபவித்த துன்பத்தின் அளவு அதிகமானதால், இயேசு மெய்யாகவே அவனைக் குணமாக்க விரும்புகிறாரா என்று அறிய “ஆண்டவரே, உமக்கு சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் கூடும்” என்றான்.

கர்த்தருடைய பதில் (மத்.8:3-4)

இயேசு அவனை ஒரே வார்த்தையில் குணப்படுத்தியிருக்க முடியும், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, அவர் கையை நீட்டி அவனைத் தொட்டார். இந்த செயலில் என்ன வியத்தகு இரக்கமும் கிருபையும் பேசுகின்றன. எந்த யூதனும் இந்த மனிதனைக் தொட்டிருக்கமாட்டான். எல்லோரும் அவனைத் பிரித்தும், தனிமையிலும் விட்டுவிட்டார்கள். ஆனால் இந்த நோய்வாய்ப்பட்ட மனிதனுக்காக இயேசு வருந்தினார் (மாற்.1:41), அவனை அனுதாபத்துடனும் அன்புடனும் நோக்கினார். இயேசு மனிதர்களுடைய பாவத்தை ஏற்றுக்கொண்டது போலவே அவர் இந்த மனிதனின் குஷ்டரோகத்தையும் அடையாளப்படுத்தினார். இது அவரது இரக்கத்தையும் அன்பையும் பல நூற்றாண்டுகளாக எதிரொலிக்கும் ஒரு நல்ல வார்த்தை: “எனக்கு சித்தமுண்டு, சுத்தமாகு!”. உறுதியளிக்கும், வாக்களிக்கும் அதிகார வார்த்தையாகும். அவனது குணமாக்கல் உடனடியாகவும் பரிபூரணமாகவும் நடந்தது. எனவே இயேசுவிடம் வருவதற்கு யாரும் பயமடையத் தேவைiயில்லை, எவ்வளவு அசுத்தமான பாவமாகவும் இருந்தாலும் அவரால் சுத்தம் செய்யப்படுவோம்.

யூதர்களின் சுத்திகரிப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கவும், தன்னை ஆசாரியனுக்குக் காட்டவும் இயேசு கட்டளையிட்டார். ஏனெனில் அவருடைய பலி இன்னும் பரிபூரணமாகவில்லை, குணமடைந்த குஷ்டரோகி தானே ஒரு பலியினால் சுத்தகரிப்பைச் செய்யவேண்டியவனாயிருந்தான், இது இயேசு கிறிஸ்துவின் (லேவியராகம் 3) பரிபூரண பலியின் முன்னோட்டமாகும். குணமடைந்த மனிதன் குணப்படுத்துதல் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கர்த்தராகிய இயேசுவின் அறிவுறுத்தல்களை கைக்கொள்ளவில்லை. ஆகையால் இயேசுவால் வெளியே பட்டணத்தில் தன்னைக் காட்ட முடியவில்லை. (மாற்.1:5).

ஜெபம்:

தேவனே, கைவிடப்பட்ட மற்றும் தள்ளப்பட்ட ஒருவனாக இருந்த எனக்கு அன்பும் இரக்கமும் நிறைந்த இருதயத்தை கொடுங்கள், சமுதாயத்தில் என்னால் முடிந்த இடங்களில் தாழ்மையோடு அவர்களுக்கு உதவிசெய்வதற்கு.

Webmaster

Webmaster

Recommended For You

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 38: யார் முதலிடம் ? மத்தேயு 10:34-42 சீஷத்துவத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றித் தம்முடைய சீஷர்களுக்கு அவர் தொடர்ந்து போதிக்கும் விதத்தில் நம்முடைய கர்த்தரின் நேர்மையும் நீதியும் காட்டப்படுகிறது. தவிர்க்க முடியாத விரோதம் (மத்.10:34-36) அவநம்பிக்கையின் பகை...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 37: பயத்திலும் அச்சத்திலும் ஆறுதல் மத்தேயு 10:24-33 பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள்! (மத்.10:26,28,31). இந்தக் கட்டளைதான் இப் பகுதிக்கான முக்கிய சொல். இந்த நாட்களில் பயம் ஒரு அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. இது அனைத்து...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 36: அப்போஸ்தலராக இருப்பது சிரமமில்லாத ஊழியம் அல்ல மத்தேயு 10:16-23 தம்முடைய இராஜ்யத்தில் சேவையாற்றுவதற்கான முயற்சியை இயேசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த சீஷனும் எப்போதும் அவர் தவறான ஆசைக்காட்டி ஊழியத்திற்கு அழைத்தார் என்ற கூறமுடியாது. இந்தப்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 35

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 35: முதலாவது அனுப்புதல் மத்தேயு 10:5-15 அப்போஸ்தலர்களின் ஊழியத்திற்கு இயேசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் பலரைக் குழப்பிவிட்டன, ஆனால் இதற்கு சில விளக்கங்கள் உள்ளன. வரையறுக்கப்பட்ட கட்டளை (மத்.10:5-6) எல்லா தேசங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது தேவனின் குறிக்கோள்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 34

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 34: அறுவடைக்கு ஆயத்தம் (A) மத்தேயு 9:35-10:4 இந்தப் பகுதி கர்த்தருடைய ஊழியத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. கலிலேயா பட்டணங்கள் வழியாக அவரது பயணம் ஜனங்கள்மேல் இருந்த ஆழ்ந்த தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளைப்...

Read moreDetails
Next Post

நாள் 345 - தெசலோனிக்கேயர் 1-3

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • மத்தேயு
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?