நாள் 21: உபவாசம், பொருளாசை, கவலை மத்தேயு 6:16-34
சீஷன் தனது எஜமானரிடம் காட்டும் மூன்றாவது அறிகுறி அர்ப்பணிப்பாகும்:
உபவாசம் – சுய ஒழுக்கம் (மத்.6:.16-18)
இயேசு இங்கே உபவாசத்தைக் கண்டிக்கவில்லை, மாறாக நயவஞ்சகர்களின் உபவாசத்தின் நியாயமற்ற தன்மைக்கும், விளம்பரத்திற்கும் எதிராக கண்டனம்செய்தார். உபவாசத்தின் மூலம் எங்கள் பக்தியை ஜனங்கள்முன் காண்பிப்பதற்குத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. மாறாக, அதை மறைக்க வேண்டும். துக்ககரமான ஒரு முகம் சீஷருக்கு நல்ல அறிகுறி அல்ல. எனவே உபவாசத்தின் மூலம் நம்முடைய மகிழ்ச்சியை இயேசுவில் வெளிப்படுத்தவேண்டும். எல்லா பகுதிகளையும் போல, இதன் நோக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தேவனுடனான ஜக்கியத்திற்கு இது அதிக நேரம் கொடுத்தால் மட்டுமே அது அங்கீகரிக்கத்தக்க வெற்றிபெறும்.
உபவாசம் என்பது விசுவாசிகள் மீது சுமத்தப்பட்ட பிரமாணசட்டம் அல்ல. ஆனால் நம்முடைய கர்த்தரும் அவருடைய சீஷர்களும் அதைக் கடைப்பிடித்தார்கள். புதிய ஏற்பாட்டில் உள்ள பகுதிகளை பார்த்து அவற்றைப் படித்தால், அது ஆரம்பத்தில் இருந்தே கட்டுப்பாடுகளோடு அல்லாமல், மிகுந்த விடுதலையுடனும் சுதந்திரத்துடன் செய்யப்பட்டது. இது பெரும்பாலும் திடீரென்றும், ஆழ்ந்த உள்உணர்ச்சியிலிருந்தும் தன்னிச்சையான நிகழ்வாகவும் இருந்தது. அப்போது உணவு அருந்துவது இரண்டாம் நிலையாயிருந்தது. அல்லது தேவனோடு ஐக்கியமாவும் நெருக்கமாகவும் வாழ வேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வந்தது.
தடைசெய்யப்பட்ட பொருளாசை (மத்.6:19-24)
இந்தப் பகுதியில் இயேசு உலக உடைமைகளுக்கும் ஆரோக்கியமான ஆன்மீகத்திற்கும் இடையிலான வேறுபாட்டை விவரித்தார். 19வது வசனத்தில் ” உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்” என்ற முக்கிய வார்த்தையை நாம் காண்கிறோம். இதில் “நீங்கள்” என்பது வலியுறுத்தப்படுகிறது. இந்த பூமியில் பொக்கஷத்தைச் சேர்ப்பதை அவர் தடைசெய்யவில்லை. மாறாக, இயேசு இந்தப் பொருட்களை ஒரு கொள்ளைப்பொருளைப்போலப் பிடித்துக்கொண்டு, எங்கள் இன்பத்துக்காகவும், நம்முடைய சொந்த நலனுக்காகவும் மட்டுமே பயன்படுத்தி, மற்றவர்களின் தேவையை மறந்து விட்டுவிடுதலைக் காணப்பிக்கின்றார்.
பொக்கிஷங்கள் என்பது நம் எண்ணங்களை ஈர்க்கிறது. “ஒரு நபர் நேசிப்பது அவருக்குத் தேவனாகிறது”. பேராசைக்காரன் செல்வத்தின் மீது செல்வத்தை தன் சொந்த நலனுக்காக மட்டுமே குவிக்கிறான். ஆனால் இவை அனைத்தும் அவனை கவலைப்படுத்தி, தனிமைக்கு இட்டுச் செல்கிறது.
கிழக்கத்தேய நாடுகளில் செல்வம் விலையுயர்ந்த உடைகள், தானியங்கள், தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் ஆகியவற்றால் குவிக்கப்பட்டது. ஆனால் இயேசு இந்த செல்வங்களின் அழிவையும் மற்றும் சிதைவையும் காட்டினார். பூச்சிகள் உடைகளை அரித்து, எலிகள் தானியத்தையும், திருடர்கள் தங்கத்தைத் திருடுகிறார்கள். இந்த பூமியில் செல்வம் ஆபத்திற்குரியது. இந்த பொக்கிஷ்களை இயேசு கிறிஸ்துவின் ராஜ்யம் மற்றும் மனித ஆத்மாக்களில் முதலீடு செய்வதால் அவை அழியாமையை அடைகிறது. நாம் நம் ஆத்மாக்களைக் கெடுக்கும் பேராசையின் நயவஞ்சக ஆபத்துக்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
தடைசெய்யப்பட்ட கவலைகள் (மத்.6:25-34)
ஞானமான திட்டமிடுதலை இயேசு தடை செய்யவில்லை, ஆனால் நம்முடைய எண்ணங்களைச் சித்திரவதை செய்து, பயமுறுத்தி நசுக்குகின்ற கேள்விகளை தடைசெய்கின்றார். “நாளை எதைக் கொண்டு வரும்?” ஆனால் ஒன்று எளிதில் மற்றொன்றுக்கு மாறுகிறது. பரிசுத்த ஆவியானவர் ஆவிக்குரிய வாழ்க்கை குறித்த சரியான அணுகுமுறையை நம்மில் செயல்ப்படுத்தி, எல்லா பயமான கவலைகளிலிருந்து, போராட்டங்களிலிருந்தும் நம்மை விடுவிக்கின்றார்.
கவலை தேவையற்றது என்பதை இயேசு தனது கேட்பவர்களுக்கு தெளிவுபடுத்தினார். எங்கள் பரலோகப்பிதா விலங்குகளைக் கவனித்துக்கொள்கிறார் (மத்.6:26). மனிதனின் கவனிப்பை அவர் எவ்வாறு மறுக்கமுடியும் ? கவலைப்படுவது பயனற்றது (மத்.6:27-29). ” உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” (மத்.6:27). கவலைகள் விசுவாசத்தைக் கேள்விக்குரியதாக்கும் (மத்.6:30-31). நம்பிக்கையும் கவலையும் ஒரே படுக்கையில் ஒன்றாகத் தூங்கமுடியாது. நாம் தேவனை நம்பினால், கனமான, தீய எண்ணங்களால் நம்மைத் தாழ்த்திக் கொள்ள மாட்டோம். கவலைப்படுவது அஞ்ஞானிகள் (மத்.6:32). நாம் தேவையில்லாமல் கவலைப்பட்டால், நாம் புறஜாதியாரைப் போன்றவர்கள். நாங்கள் தேவன்மீது குழந்தைகள் போன்ற நம்பிக்கை வைக்காவிடில், பின்னர் கவலைகள் மற்றும் அச்சங்கள் நம் இதயங்களில் நுழைந்து செல்லும். நாம் முதலாவது தேவனுடைய இராஜ்யத்தைத் தேடுகிறோமா, எங்களுடைய தேடலும் முயற்சியும் அதைத் தீர்மானித்தால், பயமும் கவலையும் எங்கள் வாழ்க்கையை விட்டு ஓடிவிடும் (மத்.6:33).
சுய பரிசோதனைக்கு:
நான் பரலோகத்திலா அல்லது பூமியிலா சொத்துக்களைச் சேர்த்துவைக்கின்றேன் ?