Thursday, January 15, 2026
Tamil Bible Blog
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home இயேசுவுடன் நூறு நாட்கள்

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 20

Webmaster by Webmaster
December 4, 2022
in இயேசுவுடன் நூறு நாட்கள்
0
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36
74
SHARES
1.2k
VIEWS

நாள் 20: கர்த்தருடைய ஜெபம் மத்தேயு 6:9-15

கர்த்தருடைய ஜெபத்திற்கு முந்தைய வசனங்களில், வெற்று மற்றும் பயனற்ற ஜெபிப்பதால் ஏற்படக்கூடிய இரண்டு ஆபத்துக்களைப் பற்றி இயேசு எச்சரித்தார். நயவஞ்சகர்கள் ஜெபத்தைப் பயன்படுத்தி வெளிரயங்களமான விளம்பரத்தைப் பெறமுயன்றனர் (மத்.6:5), புறவினத்தவர் வெற்று, அர்த்தமற்ற வாக்கியங்களை மட்டுமே இணைத்திருந்தனர். (மத்.6:2). நம்முடைய கர்த்தருடைய ஜெபமும் ஆராதனைகளில் வீணாகப் பயன்படுத்தப்பட்டு அதன் செயல்திறனை இழந்துவிட்டதல்லவா? இந்த வார்த்தைகள் பெரும்பாலும் சிந்தனையின்றி அதன் பொருளை உணர்ந்து வாய்ப்பேச்சாகவே பயன்படுத்தப்படுகிறது.

You might also like

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

இயேசு இங்கு வெறும் மாதிரியை மட்டும் கொடுக்காமல், நம்முடைய முன்மாதிரியான ஜெபம் எப்படியாகக் காணப்படவேண்டும் என்று கூறினார். சேவை செய்ய வேண்டும். அதனால்தான் ” நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது” என்று இயேசு கூறினார். இந்த மெய்யான வார்த்தைகள் மாறினாலும், ஜெபத்தின் உள்ளடக்கம் மாறாமல் இருக்கவேண்டும். இந்த ஜெபத்தில் இயேசு முன்னுரிமைகள் அல்லது வரிசைக்கிரமங்களை அமைத்தார். தேவனும் அவருடைய இராஜ்யமும் மனிதர்களின் தேவைகளுக்கு முன்பாகக் காணப்படவேண்டும். ஜெபம் செய்வது தன்னலமற்றது. நாங்கள் எங்கள் பரலோகப் பிதாவுடன் பேசுகின்றோம். “பரலோகத்தில்” என்று தேவனின் முகவரியைக் குறிப்பதற்காக அல்லாமல், தேவனைப் பற்றிய மேன்மையை மனிதனுக்கு தெளிவுபடுத்த இயேசு விரும்பினார்.

தேவனுடைய இராஜ்யம் மகிமைப்படும்படியாக ஜெபம் செய்தல் (மத்.6:9-10)

தேவனுடைய பெயர் சீஷர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவருடைய பெயர் அவருடைய இயல்புடன் ஒத்திருக்கிறது. நாம் அதை மரியாதைக்குரியதாக அழைத்து, மேலும் அது மக்களால் தவறாகப் பயன்படுத்தப்படாமல் கவனிக்கவேண்டும். மனிதர்களால் அவருடைய நாமம் பரிசுத்தக் குலைச்சல் ஆகும்போதும் அல்லது புறக்கணிக்கப்படும்போதும் உள்ளான மனிதனில் எங்களைக் காயப்படுத்த வேண்டும்.

தேவனுடைய இராஜ்யம் சீஷர்களால் மேன்மைப்படுத்தப்பட்டு, மதிக்கப்பட வேண்டும். மனிதர்களால் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்தப்படுத்த முடியாது, ஏனெனில் அவர்கள் எதிரியின் சாம்ராஜ்யத்திற்கு சொந்தமானவர்கள். ஆகவே இயேசுவின் உண்மையுள்ள சீஷன் ஜனங்களின் இருதயங்களில் தேவனுடைய இராஜ்யத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற பெரும் ஆசை உடையவனாயிருக்கவேண்டும். “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று மகிமையில் இயேசு கிறிஸ்து வருவதை சுட்டிக்காட்டுகின்றது.

தேவனுடைய சித்தம் பரலோகத்தைப் போலவே பூமியிலும் நிறைவேற்றப்படுவதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் நடைமுறைப்படுத்த செயற்பட வேண்டும். ஜெபம் எங்கள் விருப்பத்தை செயற்படுத்தக்கூடிய வழிமுறையல்ல. தேவனுடைய சித்தம் கட்டாயப்படுத்தப்படாமல் நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை நாம் தேவனிடம் செய்தால், அவற்றை நம் சொந்த வாழ்க்கையில் செயற்படுத்த கவனமாக இருக்க வேண்டும்.

மனிதனுடைய தேவகைள் சம்பந்தப்பட்ட ஜெபம் (மத்.6:11-15)

கர்த்தருடைய ஜெபத்தின் இந்தப் பகுதி, நாம் மனிதனின் சிறப்புத் தேவைகளையும் கவலைகளையும் தேவனுக்கு முன்பாகத் தைரியமாகக் கொண்டுவருதல் ஆகும்.

அன்றன்றுள்ள ஆகாரத்திற்கான வேண்டுகோள் நாம் தேவனின் தயவை நம்பியிருப்பதைக் குறிக்கிறது. “அன்றன்று” என்றால் ஒவ்வொரு நாளின் நமது தேவை. இன்று நமக்குத் தேவையான அனைத்தையும் எங்களுக்கு வழங்கும்படி தேவனிடம் கேட்டுக்கொள்கின்றோம். “எங்களை மன்னியும்“ என்ற வேண்டுகோளுடன், நாம் தேவனின் கிருபையையும் இரக்கத்தையும் சார்ந்து இருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இந்த ஜெபத்தில் மன்னிப்பு என்பது பிதாவின் இரக்கத்திலிருந்து வருகிறதேயல்லாமல், மனித நீதியிலிருந்து அல்ல. நாங்கள் மற்றவர்களை மன்னிப்பதால் எங்களுக்கு மன்னிக்கப்படுவதில்லை, நாம் மற்றவர்களை மன்னிக்கிறோம் என்று விண்ணப்பிப்பதால் மாத்திரமே நாம் மன்னிக்கப்படுகின்றோம். இந்த வேண்டுகோளின் தீவிரத்தை நாம் கருத்தில் கொள்வோம், உண்மையில் அது நமக்கு ஏற்படக்கூடிய ஆபத்து!

வேண்டுகோள்: ” எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” என்பது நாம் தேவனின் வல்லமையைச் சார்ந்து நிற்பதை வெளிப்படுத்துகிறது. இது சோதனையின் பயத்தை வெளிப்படுத்தி, நாம் வெட்கப்படவேண்டிய நிலையை காட்டுகிறது. ஆனால் நம்முடைய சர்வவல்லமையுள்ள பிதா நம்மைத் தீமையிலிருந்து விடுதலையாக்குவார்.

சுய பரிசோதனைக்கு:

இந்த ஜெபத்தில் தேவனுடனான உறவு எப்படி வெளிப்படுகிறது, எந்த ஆவிக்குள் நமது ஜெபம் இருக்க வேண்டும் ?

Webmaster

Webmaster

Recommended For You

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 38: யார் முதலிடம் ? மத்தேயு 10:34-42 சீஷத்துவத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றித் தம்முடைய சீஷர்களுக்கு அவர் தொடர்ந்து போதிக்கும் விதத்தில் நம்முடைய கர்த்தரின் நேர்மையும் நீதியும் காட்டப்படுகிறது. தவிர்க்க முடியாத விரோதம் (மத்.10:34-36) அவநம்பிக்கையின் பகை...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 37: பயத்திலும் அச்சத்திலும் ஆறுதல் மத்தேயு 10:24-33 பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள்! (மத்.10:26,28,31). இந்தக் கட்டளைதான் இப் பகுதிக்கான முக்கிய சொல். இந்த நாட்களில் பயம் ஒரு அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. இது அனைத்து...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 36: அப்போஸ்தலராக இருப்பது சிரமமில்லாத ஊழியம் அல்ல மத்தேயு 10:16-23 தம்முடைய இராஜ்யத்தில் சேவையாற்றுவதற்கான முயற்சியை இயேசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த சீஷனும் எப்போதும் அவர் தவறான ஆசைக்காட்டி ஊழியத்திற்கு அழைத்தார் என்ற கூறமுடியாது. இந்தப்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 35

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 35: முதலாவது அனுப்புதல் மத்தேயு 10:5-15 அப்போஸ்தலர்களின் ஊழியத்திற்கு இயேசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் பலரைக் குழப்பிவிட்டன, ஆனால் இதற்கு சில விளக்கங்கள் உள்ளன. வரையறுக்கப்பட்ட கட்டளை (மத்.10:5-6) எல்லா தேசங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது தேவனின் குறிக்கோள்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 34

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 34: அறுவடைக்கு ஆயத்தம் (A) மத்தேயு 9:35-10:4 இந்தப் பகுதி கர்த்தருடைய ஊழியத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. கலிலேயா பட்டணங்கள் வழியாக அவரது பயணம் ஜனங்கள்மேல் இருந்த ஆழ்ந்த தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளைப்...

Read moreDetails
Next Post

நாள் 338 - கலாத்தியர் 1-3

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • மத்தேயு
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?