நாள் 19: சீடர்களின் நேர்மை மத்தேயு 6:1-8
எல்லா நேரங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய சிந்தனையை நம்முடைய கர்த்தராகிய இயேசு முதலாவது வசனத்தில் கூறுகிறார்: ” மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.” இயேசு மூன்று எடுத்துக்காட்டுகளில் நமது கொடுத்தலாகிய தர்மம் செய்தல், ஜெபம், உபவாசம் ஆகியவைகளைத் தெளிவாக காட்டுகிறார். அவர் தனது எச்சரிக்கையில் இரண்டு ஆபத்துக்களைக் கேட்பவர்களுக்குக் கூறி, ஒருவரால் செய்யப்படும் தர்மத்தினால் வரும் ஆபத்து, மக்களால் புகழப்படும் வாழ்கையை மறதலித்தல் என்பன ஆகும். இந்த சோதனைகளை நாம் அனைவரும் வெவ்வேறு வடிவங்களில் சந்திக்க முடியும். இங்கு மூன்றுமுறை மீண்டும் கூறப்பட்ட “மெய்யாகவே, அவர்கள் தங்களை பலனை அடைந்து தீர்ந்தது” என்பது இந்த மூன்று பக்திநற்கிரியை வடிவங்களுக்கும் பயன்படுத்தலாம்.
அனைத்து மனுஷர் முன்பாக இரகசியமாக அல்லது வெளியரங்கமாக செயற்படுதல் (மத்:6:1)
தர்மம், ஜெபம், உபவாசம் அகிய இந்த மூன்று வகையான பக்தியான கிரியைகள்கூட வெட்கக்கேடான நோக்கங்களிலிருந்து விலகியிருக்கவில்லை. ;து உதாரணத்திற்கு ஒரு மனிதனை தர்மர் செய்வதன் மூலம் கௌவரத்தை அடைவதற்குப் பயன்படுத்தப்பட முடியும். இதன் மதிப்பு அத்தகைய ஒரு மோசமான நோக்கத்தால் பாதிக்கப்பட்டு பயனற்றதாகிவிடுகிறது.
பிறருக்குத் தாராளமாய் கொடுக்கும் மனப்பான்மை (மத்.6:2-4)
தேவையுள்ள அயலவருக்கு தர்மம் அல்லது கொடுத்தல் மனப்பான்மை இயேசுவால் வரவேற்கப்பட்டது. அவர் கூறவில்லை “நீங்கள் ஏதாவது தர்மம் செய்ய விரும்பினால்” என்று, அதாவது “நீங்கள் தர்மம் செய்யம்போது” என்று கூறுகின்றார். இது மறைவாகப் செய்யப்படும் காரியம். இந்த பகுதியில் இது குறிப்பாக ஆறு முறை வலியுறுத்தப்படுகிறது. இது உண்மையான பக்தியைக் காட்டுகிறது. ” உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது” (மத்.6:3), என்பதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் மத்தேயு 5:16ல் இயேசு கூறியபடி: ” மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” இருக்கவேணடும். „அந்தரங்கம்“ என்பதன் பொருள் இங்கே என்ன? நம்முடைய தாராள மனப்பான்மையை ஜனங்களுக்கு முன்பாக தாரை ஊதக்கூடாது.
தேவனிடத்தில் பக்தி (மத்.6:5-6)
சீஷர்களின் வாழ்க்கையில் ஜெபம் ஒரு முக்கியமான அங்கமாக இருப்பதால், இயேசு அதை குறிப்பாக தீவிரமாகக் கையாண்டார். நயவஞ்சகர்களைப் போல, நம்முடைய ஜெபத்தை மக்கள் முன் காட்சிக்கு வைக்கக்கூடாது. தேவனுக்கு பிரியமான ஒருவரின் ஜெபத்தின் இரகசியம் ஜெபிப்பவரின் நேரர்மையில் உள்ளது. ஜெபம் என்பது வெளிரயரங்கமானதாக அல்லாமல், மாறாக அந்தரங்கத்தில் நடைபெறுகிறது. ஜெபத்தில் தேவனுக்கு முன்பாக தனித்து நிற்கிறோம் (மத்.6:6). அந்தரங்கத்தில் செய்யப்படும் ஜெபத்திற்கு தேவன் வெளியரங்கமாக வெகுமதி தருவதாக வாக்களிக்காமல், ஜெபம் வெளியரங்கமாகும் என்பதாக கூறுகின்றார்.
புறமதத்தினரின் பிரார்த்தனைகள் மறுபடியும் மறுபடியும் கூறும் வெறும் வெற்று வார்த்தைகளாக உள்ளன. அர்த்தமில்லாத வார்த்தைகளை கோர்வையாக சேர்க்கப்பட்டன. திபெத்திய பிரார்த்தனை சக்கரம் அதற்கு வாக்கியங்களை இழுப்பதற்கு காணப்படும் வெளியரங்மான அடையாளமாகும். நம்முடைய ஜெபங்கள் ஜெபிப்பவரின் பக்தி மற்றும் விசுவாசத்தால் அளவிடப்படுகின்றன, அதன் நீளத்திலும் சொற்பொழிவிலும் இல்லை.
நம்முடைய எல்லா தேவைகளையும் தேவன் அறிந்திருப்பதால், நம்முடைய ஜெபத்தின் மூலம் தகவல் தெரிவிக்கத் தேவையில்லை. ஆனால் அவர் எங்கள் பிதா என்பதால் நாம் அவருடன் பேச விரும்புகின்றார். அதனால்தான் தேவன் நம்மோடு பேச முற்படுகிறார்.
சுய பரிசோதனைக்கு:
நம்முடைய செயல்களில் தேவனின் மகிமையை மற்றவர்கள் காணக்கூடிய வழிகளை நாம் தேட வேண்டும்.