நாள் 17: பழிவாங்கலைத் துறத்தல் மத்தேயு 5:38-42
நான்காவது உதாரணம், இயேசு தனது இராஜ்யத்தின் புதிய விதிமுறையில் பழிவாங்கி, பதிலடி கொடுத்தலின் காரியத்தைப் பற்றியதாகும். இது பிரமாணத்தின் பதிலடி, யாத்திராகமம் 21:23-25 இல் கூறப்பட்டுள்ளபடி கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல். இது நீதியின் கடுமையான மற்றும் பொருத்தமற்ற பார்வையான, ஒருவர் அனுபவித்த அநீதிகள் அதே அளவிற்கு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
பழிவாங்குதலுக்கு பதிலாக உரிமைகளை விட்டுவிடுதல் (மத்.5:38-39)
யூத சட்டம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பதிலடி கொடுக்க அனுமதித்தது, ஆனால் அநுபவித்த காயங்களுக்கு நியாயமான இழப்பீடு ஒன்றை வழங்குவதன் மூலம் அதை மட்டுப்படுத்தியது. ஆனால் இயேசு பதிலடி கொடுப்பதற்கு பதிலாக நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு அன்புகாட்டும்படி கோரினார் (மத்.5:43-44). பழைய ஏற்பாடு பழிவாங்க கட்டளையிட்டது, இயேசு அதை தடை செய்தார். பரிசேயர்கள் இந்தச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக அவரது வார்த்தைகள் இருந்தது, ஏனெனில் அவர்கள் தமது சொந்த காரியங்களுக்காக அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்கள். இந்த சட்டம் அதிகாரிகளால் நிறைவேற்றப்பட வேண்டியதேயல்லாமல் தனியொருவர் பதிலடி கொடுபது தொடர்பானது அல்ல. “தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்“ என்பதன் கருத்து ஒரு கிறிஸ்தவர் எந்த விதமான தீமையையும் ஒருபோதும் எதிர்க்கக்கூடாது என்று அர்த்தமல்ல. இயேசுவும் அவ்வாறு செயற்படவில்லை. எங்களிடம் ஜனங்களுக்கு எந்த உத்தரவும் இல்லை, ஆனால் அவருடைய ராஜ்யத்தின் குடிமக்களுக்கு உண்டு.
தொடர்ந்து வரும் மூன்று விளக்க உதாரணங்களிலிருந்து இது தெளிவாகிறது. இயேசு சமூக நீதியின் நலனுக்கு எதிராக பொல்லாத மக்கள் செய்யும் எல்லா செயல்களையும் நியாயம்தீர்க்கவேண்டாம் என்று கூறவில்லை. இந்தக் கட்டளை முற்றிலும் புரியாவிடினும், தனிப்பட்ட முறையில் நமக்கு ஏதேனும் மோசமான செயல்கள் செய்யப்படும்போது பழிவாங்குதலை விட்டுவிடுவதாகும்.
மேலான அதிகாரத்தின் எடுத்துக்காட்டுகள் (மத்.5:40-42)
அன்றாட சூழ்நிலைகளின் அடிப்படையில் பதிலடி கொடுப்பதைத் தவிர்ப்பதற்கான இந்த கொள்கையை இயேசு விளக்கினார், மற்றவர்களை விட அவருடைய சீஷர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது என்பதைக் காட்டியது (மத்.5:47-48).
இயேசு கிறிஸ்துவின் ஆவி தெளிவாக்க விரும்புவது:
a) ஒரு அவமானத்திற்கு பதிலளிக்கும் விதம் (மத்.5:39). முகத்தில் அறைவது கீழைத்தேய நாடுகளில் ஒருவரின் முகத்தில் துப்பவதுபோன்று ஒரு பெரியதான அவமானத்தின் வடிவமாகும். சீஷர்கள் அவமானத்திற்கு பதிற்செய்யாமல், அதைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.
b) ஒரு அநீதிக்கு பதிலளிக்கும் விதம் (மத்.5:40). அங்கி ஒரு மிகவும் மதிப்புமிக்க ஆடை. சீஷர்கள் இராஜ்யத்தின் நலனுக்காக சட்ட உரிமைகளை விட்டு, ஏமாறத் தயாராக இருக்கவேண்டும். தேவனே தேவைகளை கவனித்துக்கொள்வார்.
c) நியாயமற்ற ஒன்றுக்கு பதிலளிக்கும் விதம் (மத்.5:41). ஒரு அரசாங்க அதிகாரி நீங்கள் ஒரு மைல் தூரல் தன்னுடன் கடந்துசெல்லவேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க முடியும். ஆனால் சீஷர்கள் அந்த அந்நியனை ஆச்சரியப்படுத்தும்படி இரண்டு மைல் தூரம் தானாக முன்வந்து செல்லவேண்டும். அவர் பொதுவான கோரிக்கைகளான நிதி உதவி அல்லது நேரம் குறித்து எரிச்சலூட்டும் காரியங்களையும் மறுக்கக்கூடாது.
d) வறுமைக்கு விடையளிக்கும் விதம் (மத்.5:42). இந்த வசனம் கண்மூடித்தனமாக காணிக்கைகளை விநியோகிப்பதை ஊக்குவிப்பதற்காக அல்ல. துரதிர்ஷ்டவசமாக, இந்த பகுதியில் நிறைய தவறுகள் செய்யப்பட்டுள்ளன. மாறாக, சீடரை உதவி தேவைப்படும் இடத்தில் பிசினித்தனமாகச் செய்யாமல், தாராளமாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றார். எங்கள் காணிக்கைகள் நமது சூழ்நிலைக்கு எற்கவும், தேவையான உதவியைப்பெறுபவரின் சூழ்நிலையைப் பொறுத்தும் காணப்படவேண்டும். தேவைநிலை காணப்படுகிறதா என்று கண்டறிந்து அதற்கேற்ப செயற்படுவது முறையானது.
சுய பரிசோதனைக்கு:
நான் என் இதயத்தின் ஆழத்திலிருந்து தயவாக இருக்கிறேனா, அல்லது நான் எனக்கு ஏற்பட்ட அநீதிக்கு பதிலடி செய்கிறேனா?