நாள் 16: விவாகரத்து மற்றும் தவறான ஆணை (மத்தேயு 5:31-37)
தூய்மையற்ற நடைமுறைகளைப்; பற்றி இயேசு கூறும்போது, இச்சையினால் குடும்ப வாழ்க்கை சீர்கெட்டு, விவாகரத்து வரை செல்வதை எதிர்க்கின்றார்.
விவாகரத்து மூலம் திருமணச் சட்டத்தை ரத்து செய்தல் (மத்.5:31-32)
இயேசுவின் காலத்தில் யூதர்கள் மோசேயின் பிரமாணத்தைப் பற்றி முரண்பாடான பார்வையைக் கொண்டிருந்தனர் (உபா.24:1). இது தொடர்பாக அடிப்படையில் இரண்டு காரணங்கள் இருந்தன. ஓன்று விபசாரத்தின் காரணத்தால் விவாகரத்து, மற்றையது ஒரு ஸ்திரி புருஷனுக்குப் பிரியமில்லாமல் போனால் தள்ளிவிடும் காரணமாகும்.
இயேசு இப்படியான சாதாரண காரணங்களை எதிர்த்தார், ஏனென்றால் அன்றைய காலத்தில் ஒரு ஸ்திரி உணவு சமைக்கும்போது அதை சரியாக செய்யாவிட்டால் அந்த பெண்ணைத் தள்ளிவிடலாம். இந்த காரணத்திற்காக திருமணம் முக்கியத்துவம் இல்லாததாகக் காணப்பட்டது. இன்றும் ஒரு சில முஸ்லீம் தேசங்களில் இது நடைமுறையில் உள்ளன. இயேசு குடும்ப உறவிற்கு ஒரு மதிப்பையும் நிரந்தரத்தையும் நெறிமுறைப்படுத்த விரும்பினார். அவரது கிறிஸ்தவ குடும்பத்தின் பார்வை மாறாததாயிருந்தது. அவர் போதித்தார்:
A) விவாகரத்து ஒருபோதும் தேவனின் விருப்பம் அல்ல, ஆனால் இருதய கடினம் காரணமாக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது (மத்.19:8)
B) பாலியல் பாவம்தான் விவாகரத்திற்கு ஒரு முக்கிய காரணம்
ஊ) மற்ற எல்லா நிகழ்வுகளிலும், திருமணம் மரணத்தால் மட்டுமே பிரிக்கமுடியும்.
C) குற்றமிழைக்காத மற்றையவர் மறுபடியும் திருமணம் செய்துகொள்ளலாம்.
D) குற்றமில்லாது இருக்கும்போது மற்றவர் அவரைத் தள்ளிவிட்டால், பெரும் பாவம் செய்கிறார்.
E) குற்றமிழைத்தவர் மறுபடியும் திருமணம் செய்தால், அதாவது தனது முந்தைய கணவனோ மனைவியோ உயிரோடிருக்கும்பட்சத்தில், அவர் விபசாரம் செய்கின்றார். வீட்டையும் குடும்பத்தைப் புனிதமாக வைத்திருக்கம்படி இந்த வரையறை வகுக்கப்பட்டது.
„தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும்“ என்ற வார்த்தை கருத்து இல்லாததாக தோன்றுகிறது. இந்த விஷயத்தில் புருஷனே குற்றவாளி என்பதை இங்கே வலியுறுத்த வேண்டும்.
மெய்யான நம்பிக்கைக்கு பதிலாக பொய்யான ஆணை (மத்.5:33-37)
மூன்றாவதாக இயேசு வலியுறுத்த விரும்பும் உதாரணம், சத்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தலாகும். அவர் மூன்றாவது நியாயப்பிரமாணத்தை இங்கே சுட்டிக்காட்டுகின்றார்: „உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக“.
ஆணை என்பது தேவன் பேரில் செய்யம் ஒரு பரிசுத்த அறிக்கையாகும். இயேசுவின் காலத்தில் ஆணை என்பது முன்யோசனையின்றி எளிதாக செய்யப்பட்ட நிகழ்வாகும். இந்தக் கட்டளையின் உள்ளான முக்கியத்துவத்தை இயேசு வலியுறுத்தும்போது, சத்தியம் சாதாரண முறையற்ற பேச்சுக்களினால் கனவீனப்படுகிறதுபோல, பொய்யினாலும் காயப்படுகிறது.
பரிசேயர்கள் இரண்டு வகையான ஆணையை அறிந்திருந்தார்கள். ஓன்று தேவனுடைய பெயரில் செய்யப்படுவது, மற்றையது அவரது பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் செய்வதாம். இதன் காரணத்தால் அவர்களுக்கு சரியானவற்றை மறைக்க போதுமான காரணங்கள் இருந்தது. ஆனால் இயேசு சத்தியத்தில் எந்தவித படிகளும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். ஒரு வலியுறுத்தல் உண்மை அல்லது தவறு என்பதாகும். அவரது வார்த்தைகளை இப்படியாக புரிந்துகொள்ளலாம்: „தேவன் எங்கும் நிறைந்தவர், வானத்திலும் பூமியிலும், எருசலேமிலும்“ இப்படி மூன்று காரியங்களில் செய்யப்படுகின்ற ஆணை, தேவனிடம் செய்யப்பட்டது, „அங்கு தேவன் வசிக்கின்றார்“. சில வியாக்கியானர்கள் கூறுவதுபோல இது நீதிமன்றங்களில் சத்தியம் செய்யும்போது கூறப்படும் வலிறுத்தல் அல்ல. இயேசுவும் தாமே ஆணையிட மறுத்தார் (மத்.26:63-64). அநேக ஆணைகள் முக்கியத்துவம் அல்லாதவை. இயேசுவின் சீஷர்களின் வார்த்தைகள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கவேண்டும், அது ஆணையினால் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதில்லை (மத்.5:37)
சுய பரிசோதனைக்கு:
என் வார்த்தைகளை ஆணை போன்று நம்ப முடியுமா?