நாள் 15: கொலை மற்றும் விபச்சாரம் (மத்தேயு 5:21-30)
மீதமுள்ள அத்தியாயத்தில், ஐந்து தெளிவான உதாரணங்கள் மூலம் பரிசேயர் எவ்வாறு பிரமாணத்தை விளக்கங்கள் மற்றும் மரபுகளினால் மாற்றியமைத்தார்கள் என்பதை தெளிவுபடுத்துகின்றார். முதலில் அவர் கொலையைப் பற்றிப் பேசுகிறார்.
அடக்கப்பட்ட கோபத்தின்மேல் வெற்றிகொள்வது (மத்.5:21-22)
ஆறாவது பிரமாணத்தின்படி இயேசுவின் விளக்கத்திலும் விரிவாக்கத்திலும் கொலை என்பது அந்தச் செயலை நடப்பிப்பதால் ஆரம்பிக்கவில்லை என்று கூறுகின்றார். கொலை என்பது கையின் குற்றம் அல்ல, இதயத்தின் குற்றமே. இயேசு இங்கே கோபத்தை இருதயத்திலோ அல்லது அவமதிப்பு மற்றும் உணர்ச்சிவசப்பட்ட வார்த்தைகளில் வெளிப்படுத்தினால் அதை கொலை என்ற நிலைiயில் வைத்துப் பார்க்கின்றார். கோபம் திட்டவட்டமாக தடைசெய்யப்பட்டுள்ளது. கோபத்தை அர்த்தப்படுத்துவதானால் கொதிப்பு, நமது உள்ளத்தில் தங்கும் காரியம். இயேசு கொலையின் அர்த்தத்தை சிந்தனையினாலும் வார்த்தையினாலும் நாம் செய்யத் தூண்டுகின்றோம் என்பதாக விரிவாக்குகின்றார். இதயத்திலுள்ள நயவஞ்சகமான, மறைவான கோபங்கள் (மத்.5:23) ஆலோசனைச் சங்கத்தீர்ப்பு முன் பதிலளிக்கும் நிலைக்குகொண்டுவரும். குழப்பான பேச்சுங்கள், மற்றவர்களை இழிவுபடுத்துகின்ற காரியங்கள் சபைமுன் கொண்டுவரப்படும். கட்டுப்பாடற்ற சீற்றங்கள் பாதாள அக்கினியினால் கூட தண்டிக்கப்பட்டது. அதுதான் நிரந்தரமான ஆக்கினையும் தீர்ப்புமாகும். இப்படியாக கோபத்தை இயேசு நியாயம்தீர்த்தார்.
எங்கள் நடவடிக்கைகள் கோபம், எரிச்சல் கசப்பின் மூலமாக அல்லாமல், மாறாக நல்லிணக்க மூலம் காட்டப்படவேண்டும். அது பாதித்த சேதங்களை எங்கே அவசியமோ, அங்கே ஈடுசெய்ய முயற்சிக்கவேண்டும் (மத்.5:23-26).
யாராவது நம்மீது ஒரு குற்றத்தைக் கண்டுபிடித்தால், நாம் ஆராதனையில் கலந்துகொள்வதற்கு முன்பாக அவருடன் ஒப்புரவாகவேண்டும். மத்தேயு 5:24ல் „போய்“ பின்பு „வந்து“ என்று கூறப்படுகிறது.
இரண்டாவது உதாரணம் விபச்சாரத்துடன் தொடர்புடையது.
தடைசெய்யப்பட்ட இச்சைகளுக்குப் பதிலாக தூய்மையான ஒழுக்கம் (மத்.5:27-30)
இந்த சூழலில், விபச்சாரம் பொதுவாக மனிதர்கள் புரிந்துகொள்வதை விட பரந்ததாக தெரிகிறது. திருமணமானவரோ இல்லையோ இதன் தன்மை யாவரையும் தூய்மையற்ற செயல்களைச் செய்ய தூண்டிவிடுகிறது.
இச்சையினால் ஏற்படும் திருமணத்தின் பேரழிவிற்கு எதிராக இயேசு திரும்பினார். பரிசேயர்கள் இந்த விபசார செயலைக் கண்டித்தனர், ஆனால் இயேசு மனிதனின் பாவத்தின் நோயை அவருடைய இதயத்தில் ஏற்படும் இச்சை என்று காண்பிக்கிறார். ஏழாவது கட்டளை இச்சையினால் பார்ப்பதின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு செயல் இழந்து உடைகிறது. இதில் “பார்க்கிற” என்ற சொல் மீண்டும் மீண்டும் இச்சையோடு நோக்குகிற செயற்பாட்டைக் குறிக்கிறதேயல்லாமல், ஒருமுறை பார்ப்பதையல்ல. பக்டீரியாக்கள் எங்கு பெருகுவதற்கு வாய்ப்புள்ளதோ அங்கே அடைகாக்கும்.
வசனம் 25 மற்றும் 30 (மத்.5:29-30) நேரடியான அறிவுறுத்தல் அல்ல. ஒரு மனிதன் வலது கண்ணைப் பிடுங்கி எறிந்தாலும், இடது கண்ணின் மூலமாகவும் இன்னும் சோதனையானது தொடர்ந்து நுழைய முடியும். இந்த வசனங்களின் பொருள், பாவத்தைச் செய்யத் தூண்டு அல்லது வழிநடத்தும் அனைத்துக் காரியங்களிலிருந்தும் தீவிரமாக நாம் துண்டிக்கப்படவேண்டும். பிடுங்கி எறிதல் என்னும் காரியம் நமக்கு சொல்வது, அதை கொஞ்சம் கொஞ்சமாகவோ, பகுதி பகுதியாகவோ நீக்குதலைப்பற்றி கூறாமல், முற்றாக அழித்தலைக் குறிக்கிறது. பவுல் நமக்கு நடைமுறைப் பரிசுத்தத்தைப் பற்றி அறிவுரை கூறுகையில், „பரிசுத்தமானது எதுவோ அதையே சிந்தித்துக்கொண்டிருங்கள்“ என்று கூறுகிறார். நமது சிந்தனை ஒரேநேரத்தில் இரண்டு நினைவுகளோடு போராடமுடியாது. பாம்பை கொன்றுவிடுவதுதான் நமக்கு பாதுகாப்பானது, அப்பொழுது அதன் முட்டைகளையும் உடைத்துவிடலாம். ஆரம்பத்திற்கு எதிர்த்து நில்லுங்கள்!
உங்கள் சிந்தனைக்கு:
நான் நற்சிந்தனைகளோடு செயற்படுகின்றேனா, அதை செயற்படுத்தப் பயமடைகிறேனா?