நாள் 13: கிறிஸ்தவர்களின் ஆளுமை (மத்தேயு 5:13-16)
இந்தப் பகுதியில்;, உலகில் கிறிஸ்தவர்களின் பங்கை இயேசு அடையாளம் காட்டுகிறார், ஏனெனில் மலைப்பிரசங்கத்தில் கிறிஸ்தவர்களின் தன்மை விவரிக்கப்பட்டுள்ளபடி, நம் நடத்தையை மாற்றி ஒரு சிறப்பு சூழ்நிலையை உருவாக்கவேண்டும். இயேசுவின் சீடர் ஒரு கிறிஸ்தவ செல்வாக்கைக் கொண்டிருக்கிறார், இதை இயேசு இங்கே உப்பு மற்றும் மலைமேல் உள்ள பட்டணத்தின் வெளிச்சத்துடன் ஒப்பிடுகிறார்.
உப்பு மற்றும் வெளிச்சம் (மத்.5:13-14)
பூமியின் அழிவின் செயல்பாட்டிற்கு மத்தியில், சீஷர்கள் அதற்கு உப்பாகவும் இருளில் வெளிச்சமாகவும் இருக்கிறார்கள். இயேசு அவரது ஜனங்களின் பிரகாசத்தை பற்றி பேசுகின்றாரேயல்லாமல் செயற்பாடுகளையல்ல. அவர் கூறவில்லை: “உப்பை விதையுங்கள்!” என்று “நீங்கள்தான் உப்பு!” பெரும்பாலும் கவனிக்கப்படாத, காணப்படாத மற்றும் வெறுக்கத்தக்கவர்களாக இருந்தாலும், கிறிஸ்தவ சிறுபான்மையினர் தங்கள் எண்ணிக்கையில் குறைவாயிருந்தாலும் இந்த சமுதாயத்தில் ஒரு ஆளுமையைக் காண்ப்பிக்கின்றனர்.
இந்த இரண்டு படங்களிலும் ஒற்றுமை மற்றும் வேற்றுமை ஆகிய இரண்டும் உள்ளன. ஒற்றுமையில் கிறிஸ்தவர்களின் தனித்துவத்தை அதன் வழக்கமான உலகசூழலில் இருந்து வேறுபடுத்திக் காண்பிக்கின்றது. வெளிச்சம் மற்றும் உப்பு இரண்டையும் இந்த உலகில் கண்டு உணரலாம். அது இல்லாவிட்டால், அதன் பற்றாக்குறை உணரப்படுகிறது. சாதாரண வாழ்க்கைக்கு வெளிச்சம் மற்றும் உப்பு அவசியம்.
தனித்தன்மை என்னவென்றால், உப்பு எதிர்மறையான செயல்பாட்டைக் கொண்டுள்ளது, ஏனெனில் அது கெட்டுப்போவதைத் தடுக்கிறது. ஆனால் வெளிச்சம் ஒரு நேர்மறையான குணத்தைக் கொண்டுள்ளது. அது வீட்டை பிரகாசமான வெளிச்சத்துடன் நிரப்புகிறது. உப்பு மறைவாக தனது செயலாக்கத்தையும், வெளிச்சம் வெளிப்படையாகவும் பிரகாசிக்கிறது.
உப்பு – சீடர்களின் சுவையூட்டும் சக்தி (மத்.5:13)
கெட்ட சுவைக்கு உப்பு எதிரி. இயேசுவின் உண்மையான சீடன் ஒன்றுமில்லாத ஒன்ற அல்ல. அவன் மாறாக, தனது எஜமானரின் தெளிவை உறுதியானதாக்க விரும்புகிறார். அவரது பேச்சு தெளிவாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது, அவருடையது தற்போதுள்ள நிலையில் மேலோட்டமான, புண்படுத்தும் பேச்சுக்களுக்கு அமைதியாக காணப்படவேண்டும். அவரது கவர்ச்சி எவ்வளவு வலுவானது.
உப்பு கெடுதலுக்கு ஒரு எதிரி. இது ஆபத்தான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்கிறது. உப்பின் தொடுதலில் பாதுகாக்கும் சக்தியை ஏற்பட்டு, தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மொட்டில் அழிக்கப்படுகின்றன. ஆனால் உப்பு உணவில் இருந்தால் மட்டுமே, அதன் செயல்பாட்டை நிறைவேற்றமுடியும். இயேசுவின் சீடர் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும். இங்கே இயேசுவின் சபை ஒரு முக்கிய கரு. இயேசு பாவிகளுடன் சாப்பிட்டார், ஆனால் அவர்களிடமிருந்து பிரிந்துகாணப்பட்டார். அவரது பிரிவினை அதன் உள்தூய்மையில் தன்னை வெளிப்படுத்தியது, ஆனால் வெளிப்புற தொடர்புகளைத் தவிர்ப்பதில் அல்ல. உப்பு தனது சாரத்தையும் கிறிஸ்தவர் அவரது ஆளுமையையும் இழக்கமுடியும்.
ஓளி – சீடர்களின் பிரகாசம் (மத்.5:14-16)
உப்பு இரகசியமாக வேலை செய்யும் போது, வெளிச்சம் அதன் அனைத்து ஒளிரும் பளபளப்பால் அடையாளம் காணப்படும். உப்புத்தன்மையில் ஒரு மறைக்கப்பட்ட மதிப்பு உள்ளது. ஆனால் வெளிச்சத்தை தூரத்திலிருந்தும் காணலாம். சீஷர்கள் சாட்சிகளாக இருக்கவேண்டிய இடம் உலகம். அதனால்தான் உலகெங்கும் சாட்சிகளாக இருக்க நமது கர்த்தரால் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் கிறிஸ்தவர்கள் வெளிச்சம், விளக்குகள் அல்ல. சபை, அதன் அங்கங்களுடன் ஒளியாயிருக்கிறது. அவரது சாம்ராஜ்யத்தில் முரட்டுத்தனமான தனித்துவம் இருக்கக்கூடாது. இதை நீங்கள் புறக்கணித்தால், உடைந்துபோகும் அபாயம் காணப்படும்.
மலையில் உள்ள நகரம் – சீடர்களின் முக்கியத்துவம் (மத்.5:14)
இயேசுவின் சீஷர்கள் உலகத்திலிருந்து தனித்து நிற்கிறார்கள். தங்கள் கர்த்தரைப் போலவே, அவர்களும் இரகசியமாக வாழ முடியாது. விசுவாசமும், சாட்சியும் எவ்வளவு சீஷத்துவத்தில் முக்கிய பங்காக இருக்கிறது. உலகம் இதைக் கவனித்துக்கொண்டிருக்கிறது.
உங்கள் சிந்தனைக்கு:
நாம் உலத்தை நமது வழிகளினாலும் காரியங்களினாலும் பாதிக்கும் ஆளுமையைத் தேடவேண்டும்.