நாள் 12: இராஜ்யத்தின் சிறப்பியல்புகள் (2) (மத்தேயு 5:6-12)
இராஜ்யத்தில் இயேசுவைப் பின்பற்றுபவர்களின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் மற்ற ஐந்து பாக்கியவான்களை நம்முடைய கர்த்தர் தெளிவுபடுத்துகிறார். எட்டு பாக்கியவான்கள் ஒவ்வொன்றும் அடுத்துவருபவைகளைத் தொடருவதாக அமைகிறது. இயேசுவின் சீடர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாக்கியவான்கள் வசனங்களையே மட்டுப்படுத்தாமல், அனைத்துமே அவருடைய வாழ்க்கையில் சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும்.
இங்கு சொல்லப்படும் துயரமான பண்புகள் இயேசுவின் சீடர்கள் “நீதிக்காக பசியும் தாகமுமாயிருக்கவேண்டும்” என்பதாக கூறுகிறது (மத்.5:6). ஆன்மீக வறட்சி நம்மில் தேவனுக்கு பிரியமாயிருக்க விரும்பும் ஏக்கத்தைக் கொண்டுவருகிறது. இயேசு பசி, தாகம் போன்ற அடிப்படைக் காரியங்களைப் பயன்படுத்தி, பரிசுத்தத்தின் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார். தேவன் வேதத்தில் வைராக்கியமுள்ள மனிதர்களின் பரிசுத்தமான வாஞ்சைகளைப் பூர்த்தி செய்கிறார். எங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவின் சாயலாக மாறுவது மட்டுமே வாஞ்சையாக இருக்குமென்றால், நாம் சரியான பாதையில் ஏக்கமாக இருக்கின்றோம். ஆனால் இது பரிசுத்தத்திற்கான விருப்பத்தைப் பற்றியது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், மகிழ்ச்சி எங்களுக்கு ஒரு பரிசாக பின்பு வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நான்கு செயலில், மனித பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
பரிதாபப்படுங்கள் – „இரக்கமுள்ளவர்கள்” (மத்.5:7)
நாங்கள் நீதியைச் செய்ய ஆர்வமாக இருக்கிறோம், ஆனால் அதை அடைய முடியாத மக்களுக்காக எங்களால் வருந்த முடிவதில்லை. நீதிசெய்வது கடினமானதாகவும் உணர்ச்சியற்றதாகவும் இருக்கும். நாங்கள் வீழ்ந்த சிருஷ்டிப்புக்கள், இரக்கத்தைவிட விமர்சிப்பதையே நாம் விரும்புவோம். ஆனால் அது இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தில் இருக்கக்கூடாது.
இரக்கம் அதற்குத் தகுதியில்லாதவர்களுக்கே காட்டமுடியும். அவர்கள் அதற்கு பாத்திரமாக இருந்தால், அது இரக்கமாயிருக்கமுடியாது, ஒரு சாதாரண நீதியாவே விளங்கும். இரக்கம் என்பது ஒரு உணர்ச்சிகரமான ஒரு உணர்வு. இது ஒரு இரக்கமுள்ள செயலில் வெளிப்படுத்தப்படுகிறது. இயேசுவின் சீடர் தனது நடத்தையை மாற்றியமைப்பாh. நம்முடைய தனிப்பட்ட அனுபவம் நம்முடைய சொந்த அணுகுமுறையை மாற்றியமைக்கும் என்பதை இயேசு வலியுறுத்தினார்.
“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்;” (மத்.5:8)
“இருதயத்தில் சுத்தமில்லாமல் யாரும் தேவனைத் தரிசிக்கமுடியாது“, என்பதாக வேதாகமம் கூறுகிறது. இந்த அற்புதமான நிகழ்ச்சி ஒரு தூய இதயத்துடன் உள்ளவருக்கே உரியதாகும். தேவனைத் தரிசிப்பது என்பது கண்களினால் காண்பதல்ல, அது தேவனோடுள்ள ஒரு உள்ளான நெருக்கம். தூய்மையான இதயம் கடவுளைப் பற்றிய தெளிவான பார்வையை உருவாக்குகிறது. இயேசு முழு மலைப்பிரசங்கத்திலும் அவருடைய ஊழியத்திலும் பரிசேயர்களின் வெளிப்படையான சடங்குகளைக் கண்டித்து, உள்ளான தூய்மைக்கு முக்கியத்தும் கொடுத்தார் (லூக்.11:39)
“சமாதானம் பண்ணுகிறவர்கள்” (மத்.5:9)
சமாதானம் செய்பவர் நல்லிணக்கத்தை உருவாக்கி அல்லது மீட்டெடுத்து ஒருவருக்கொருவர் விரோதமாக இருப்பவகளை சமரசம் செய்பவராகும். இது நாம் அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டிய வரமாக அமையவேண்டும், ஏனென்றால் அது தேவனின் சாயலுக்கு ஒத்திருக்கிறது. சமாதானம் செய்யபவரிடம் பதட்டங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் விலகி, அமைதியும் நல்லிணக்கமும் அவர்களை வெல்லும். சமாதான பிரியர்களோ அல்லது அமைதியைக் காத்துக்கொள்பவர்களோ பாக்கியவான்கள் என்று கூறப்படாமல், சமாதானம் பண்ணுகிறவாகள் பாக்கியவான்கள் என்று அர்த்தப்படுகிறது. ஒரு தவறான சமாதானமும் உள்ளது என்பதை இயேசு கூறி, அதை அழிக்க வந்தேன் என்று சொல்கின்றார். அவர் பிரச்சனைகளுக்குரிய கேள்விகளைத் தவிர்ப்பதன் மூலம் சாமானத்தை காத்துக்கொள்ளவில்லை. இயேசு எப்படியாவது சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள வழியமைக்கவில்லை. சமாதானம் செய்பவர் தேவனைப் போன்று செயற்படுபவர்கள். தனது சொந்த சமாதானம் உடைந்தாலும் அவர் சமாதானத்தை உருவாக்குகிறவராயிருக்கிறார். இயேசு செய்தார்;: “அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தால் சமாதானத்தை உண்டாக்கினார்” (கொலோ.1:20).
“துன்பப்படுகிறவர்கள்;” (மத்.5:10-12)
சமாதானம் செய்பவர்களும் துன்புறுத்தலில் இருந்து விலக்கப்பட்டிருக்கவில்லை. தன் எஜமானைப் பின்பற்றும் ஒவ்வொரு சீடருக்கும் இது நிறையவே உள்ளது. ஆனால் என் தேவனினின் நிமித்தம் நான் குற்றமில்லாமல் துன்புறுத்தலுக்கு உள்ளக்கப்பட்டால் ஆசீர்வாதம் உண்டு.
உங்கள் சிந்தனைக்கு:
நான் எனது வாழ்க்கையில் இரக்கத்தைக் காண்பித்து, மலைப்பிரசங்கத்திற்கேற்க எனது நடைமுறையுள்ளதா?