நாள் 11: இராஜ்யத்தின் சிறப்பியல்பு (1) (மத்தேயு 5:1-5)
ஐந்து முதல் ஏழு அதிகாரங்களை இவ்வாறு தலைப்பில் பெயரிடலாம்: “இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தின் அறிக்கை”. ஒரு அறிக்கையானது ஆட்சியாளர் அல்லது தலைவர் தனது குறிக்கோள்களை அறிவிப்பதாகும். இயேசு மலைப்பிரசங்கத்தை வழங்கும்போது சீஷர்கள் முன்னணியிலும் ஜனங்கள் பின்னணியிலும் இருந்தார்கள். மலைப்பிரசங்கம் சீஷர்களின் காதுளனினூடாக, உலகத்தால் கேட்கப்பட்டது. சிலர் மலைப்பிரசங்கம் இயேசுவின் போதனைகளின் தொகுப்பு என எண்ணுகின்றனர். ஆனால் டாக்டர் யு.வு. ரோபர்ட்சன் போன்ற ஒரு சிறந்த அறிஞர் இது ஒரு பிரசங்கம் என்று உறுதியாக சொல்கின்றார். “பாக்கியவான்கள்;” என்பது இராஜ்யத்தின் முக்கிய சொல். ஒவ்வொரு பாக்கியவான்கள் வசனமும் ஒரு ஆச்சரியத்துடன் தொடங்குகிறது: “ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்… ! அல்லது வாழ்த்தப்பட்டவர்கள்!”
பாக்கியவான்கள் என்றால் ஆனந்தத்தின் உச்சம், கவலை இல்லாத வாழ்க்கை, ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றுவதும், அளைவராலும் நட்பாகவும் மரியாதையுடன் நடத்தப்படுதல் என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் இயேசு இத்தகைய கருத்துக்களை இரக்கமின்றி சிதறடிக்கிறார். பாக்கியம் பெரும்பாலும் எதிர்பாராத வழிகளில் நம்மை அடைகிறது, மேலும் நாம் தவிர்க்க விரும்பும் அனுபவங்கள் மூலம் மெத்த மகிழ்ச்சிக்கு எங்களை இட்டுச் செல்லுகிறது. இத்தகை தன்மையினால் இராஜாவாகிய இயேசு கிறிஸ்து எங்கள் தலைமுறையில் தேடப்படாவதவராக காணப்படுகிறார். இது முக்கியமாக நமது குணத்தின் செயலற்ற தன்மை.
ஆவிக்குரிய ஏழ்மை – „ஆவியில் எளிமையுள்ளவர்கள்“ (மத்.5:3)
இந்த வார்த்தை எவ்வளவு விசித்திரமாக ஒலிக்கிறது: “ஆவியில் எளிமையள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்று நம் காதுகளில் கேட்கிறது. இதன் எதிர் துருவம் பெருமை மற்றும் மனநிறைவாகும். இந்த உள் அர்த்தத்தின் திறவுகோல் வார்த்தை “ஆவியில்” என்பதாகும். புhக்கியவான் என்பது சரீர எளிமையைக் குறிக்கவில்லை. ஒரு பிச்சைக்காரன் ஏழை, அவன் மற்றவர்களின் இழப்பில் வாழ்கிறான். ஆவிக்குரிய மனிதன் ஆன்மிகரீதியில் சயமாக எதையும் கொடுக்காமல், தேவனைச் சார்ந்து வாழ்கின்றான் என்பதை கர்த்தர் இங்கு முன்வைக்கிறார். ஆவன் தன்னுடைய எளிமையையும் முடியாததன்மையையும் உணர்ந்து மேல்நோக்கிப் பார்க்கிறான். இயேசு “என்னால் சொந்தமாக எதுவும் செய்ய முடியாது” என்று இதை மீண்டும் தெளிவாக வலியுறுத்துகிறார்.
ஆவிக்குரிய மனந்திரும்புதல் – “துயரப்படுகிறவர்கள்“ (மத்.5:4)
ஆன்மீக சச்சரவு என்பது ஒருவரின் சொந்த பாவத்தைப் பற்றிய சோகம் அல்லது பிறரின் பாரத்தை ஏற்றுக்கொள்ளல் என்பதாகும். ஆனால் இங்கே நமக்கு மிகவும் முரண்பாடாகத் தோன்றும் ஒன்றைக் காண்கிறோம். “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்“! கோபமாகவும் வருத்தமாகவும் இருப்பவர்களுக்கு இயேசு பாக்கியம் அளிப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை, ஆனால் ஒரு கிறிஸ்தவர் எப்பொழுதும் பிரகாசமான முகங்களுடன் இந்த உலகில் நடக்க வேண்டும் என்றும் நினைக்க வேண்டாம். சில நேரங்களில் இந்த வசனத்தின் அர்த்தம் நம்முடைய பாவத்தைப் பற்றிய வருத்தம் ஏற்பட்டு, அத்தகைய சோகம் மனந்திரும்புதலுக்கு வழிநடத்துகிறது, அதேநேரத்தில் இது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஆவிக்குரிய சாந்தம் “சாந்தகுணமுள்ளவர்” (மத்.5:5)
பணிவு என்பது ஒரு கருணை அல்லது சாந்தகுணம் மட்டுமல்ல. இது மென்மையான அல்லது கடுரமான குணம் பற்றியதல்ல. உண்மையிலேயே தாழ்மையான நபர் உறுதியற்ற மற்றும் அடிபணிய மறுப்பவரல்ல. மாறாக, உறுதியை உடையவரும், இயேசு மற்றும் மோசே போன்று தாழ்மையான மனிதர்கள் (எண்.12:3, மத்.11:29). தாழ்மை என்பது எப்போதும் தன்னுடையதே சரியானது என உறுதியாக இருக்காது. ஒரு தாழ்மையான நபருக்கு மட்டுமே மாற்றவும், விட்டுக்கொடுக்கவும் வல்லமை உண்டு. தனது உரிமையை வல்லமையால் செயல்படுத்துவதைத் தவிர்த்துவிட்டால், அவன் பூமியைச் சுதந்தரிப்பான், அது ஒரு நாள் கிறிஸ்துவோடு ஆளுகைசெய்யம்போது, வெளிச்சத்திற்கு வரும். (வெளி 20:4).
உங்கள் சிந்தனைக்கு:
எனது அன்றாட வாழ்க்கையில் மலைப்பிரசங்கத்தின் துடிப்புகளை நான் உணர்கிறேன் என்று சொல்ல முடியுமா? இல்லையென்றால், ஏன்?