நாள் 9: கப்பர்நகூம் ஏன்;? (மத்தேயு 4:12-17)
11 மற்றும் 13 வது வசனங்களுக்கு இடையில் காலவரிசைப்படி குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. நூலாசிரியர்கள் நமக்குத் தெரியாத காரணங்களினால் பலமாதங்கள் எருசலேமமையும், யூதாவையும் சுற்றித்திரிந்த இயேசுவின் ஊழியத்தின் கிரியைகளை நமக்குத் தெரியப்படுத்தவில்லை. யோவான் 2-3 இல் விடுபட்ட நிகழ்வுகள் எங்களிடம் இங்க ஒப்படைக்கப்படுகின்றன. கானா ஊர் கலியாணம், சீஷர்களின் நியமனம் மற்றும் நாசரேத்தில் நிராகரிப்பைக் குறித்ததாகும் (லூக்.4).
கலிலேயாவில் ஊழியம் (மத்.4:12)
யோவான் ஸ்நானகனைச் கைதுசெய்து, சிறையில் அடைத்தது நமது கர்த்தரின் ஊழியத்தில் ஒரு பெரும்பகுதியாகக் காணப்படுகிறது. தேவனுடைய இராஜ்யம் வருமுன்பு யோவான் இறுதியானவனும் இதற்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளைவிட பெரியவனுமாயிருந்தான். அவருடைய ஊழியம் முடிந்ததும், கலிலேயாவில் இயேசுவின் ஊழியம் அவரைப் பின்பற்றித் தொடர்ந்தது. யோவான் தனது பணியை நிறைவேற்றி, இயேசுவுக்கு வழியை சீர்ப்படுத்தி, ஜனங்களுக்கு உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கின்ற தேவாட்டுக்குட்டியைக் காணப்பித்தார். அவர் இப்போது தேவாட்டுக்குட்டிக்கு வழியை விட்டுக்கொடுக்கின்றார். இயேசு யூதேயாவை விட்டு கலிலேயாவுக்குச் சென்றார்.
கப்பர்நகூம் தேர்ந்தெடுக்கப்படுதல் (மத்.4:13-16)
இயேசு மகாராஜாவின் நகரமாகிய எருசலேமைவிட்டு தமது அதிகாரப்பூர்வமான ஊழியத்தை ஆரம்பிக்கவா கப்பர்நகூமுக்குச் சென்றார்? அவர் தனது சொந்த ஊர் மக்களால் உறுதியாக நிராகரிக்கப்பட்டார் நாசரேத்தை என்றென்றும் விட்டுவிலகினார். கலிலேயாவில் உள்ள புறஜாதியாரின் பட்டணமான கப்பர்நகூம் (மத்.4:15) ஒரு கணிசமான அளவைக்கொண்டிருந்தது. கலிலேயா 80 தர 40 சதுர கி.மீ அளவு மட்டுமே இருந்தபோதிலும், ஜோசபஸ் இந்த வளமான பகுதியில் 204 நகரங்கள் மற்றும் 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்கள் இருந்தன என்று கூறுகின்றார். இந்த நிலப்பகுதி புறஜாதி மக்களால் சூழப்பட்டதோடு மட்டுமல்லாமல், புறஜாதியினரால் ஆளப்பட்டது. ஏனெனில் இந்த நகரம் இன்னும் ஒப்பீட்டளவில் இளமையாக இருந்தபோதிலும் புறஜாதியினரின் சிந்தனையுடன் தொடர்புடைய புதிய யோசனைகளுக்கு ஆர்வம் மிகுந்ததாயிருந்தது. எனவே, இந்த பகுதி எங்கள் கர்த்தரின் இறைச்செய்திக்கு தயாரான வளமான நிலமாகக் காணப்பட்டது. கர்த்தரின் பார்வையில் விரும்பப்படாத கலிலேயா விருப்பமான எருசலேமைவிட செயற்பாட்டின் மையமாக இருந்தது. பேதுருவின் வீடு இங்கே இருந்தது, இந்த இடம் இராஜ்யத்தின் வேலைக்கான முக்கியமான ஸ்தலமாக சந்தேகத்திற்கிடமின்றி விளங்கியது. மத்தேயு கப்பர்நகூமை ஏசாயாவின் தீர்க்கதரிசனம் 9:1-2 ன் றிறைவாகக் காண்கிறார், ஏனெனில் கப்பர்கூறும் செபூலோன் மற்றும் நப்தலியின் சிறையிருப்பின் இடத்திலே இருந்தது. (மத்.4:14-15).
போதகரின் செய்தி (மத்.4:17)
இயேசுவின் செய்தியில் ஒரு புதிய அணுகுமுறையைக் காட்டும் இந்த வசனத்தில், நாம் மூன்று விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
a) இங்கே பிரசங்கித்தல் என்ற வார்த்தை அறிவித்தல் என்று பொருள். தேவனின் அறிவிப்பாளராக, பிதாவின் அதிகாரத்துடன் பரிசுத்த ஆவியின் வல்லமையுடள் நற்செய்தியை அறிவித்தார்.
b) யோவான் ஸ்நானகன் தொடக்கி வைத்து வார்த்தையிலிருந்து ஆரம்பிக்கின்றார். (தயவுசெய்து 17வது வசனத்தை 3:2 உடன் ஒப்பிடுங்கள். மத்தேயு 4:17,3,2) அவரின் கவனம் சமூக நிலைமைகளின் முன்னேற்றத்தில் அல்லாமல், மனந்திரும்புதலில் மட்டும் இருந்தது.
c) அவர் பரலோகராஜ்யத்தின் வருகையை அறிவித்தார். இந்த வார்த்தை பூமிக்குரிய மற்றும் நகரத்திற்கான சூழ்நிலைகளுக்கு அல்ல. இது மக்களின் இருதயத்தில் தேவனுடைய ஆளுகைகையைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இந்த கருத்தின் முழு உள்ளடக்கத்தையும் இது கொண்டிருக்கவில்லை. இது 16ம் வசனத்தில் இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் மரண இருளின் தேசத்திலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் பிரகாசித்தது” என்று கூறுகிறது.
உங்கள் சிந்தனைக்கு:
கிறிஸ்துவுக்கான எனது சாட்சியத்தில், யோவானையும் இயேசுவையும் போல சத்தியத்தை நான் வலியுறுத்துகிறேனா?