நாள் 7: இரண்டு ஞானஸ்நானகன்கள் சந்திக்கிறார்கள் (மத்தேயு 3:13-17)
யோவான் ஸ்நானகனும் இயேசுவும் முன்பு சந்தித்தார்களா என்பது முற்றிலும் உறுதியாகத் தெரியவில்லை. அவர்கள் தங்கள் தாய்மார்கள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களாயிருந்தாலும் எருசலேமுக்கான வருடாந்திர யாத்திரையிலும் சந்திக்கவில்லை என்று தெரிகிறது. யோவானின் விளக்கம் உள்ளது “நானும் அவரை அறியவில்லை” (யோ.1:33). ஒருவேளை அவர் இயேசு தன்னை ஊழியத்திற்கு அனுப்பவில்லை என்பதாயும், ஆனால் அவரை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தார் என்றும் கூறவிரும்பியிருக்கலாம்.
ஸ்நானகனின் தயக்கம் (மத்.3:13-15)
மற்றவர்களின் பாவங்களை கண்டித்து வெளியே கொண்டு வருவதே யோவானின் தீர்க்கதரிசன ஊழியம். அதனால் அவர் தனது சொந்த குற்றத்தையும் பாவத்தையும் அறிந்திருக்கவில்லை என்று அர்த்தமல்ல (மத்.3:14). “நான் உம்மால் ஞானஸ்நானம் பெறவேண்டியிருக்க“ என்று,” அவர் அறிக்கையிட்டார். மக்கள் அவரிடம் வந்து அவனால் ஞானஸ்நானம் பெற விரும்பினால், அவர் அவர்களுடைய பாவங்களை உணர்த்தப் பயப்படவில்லை. ஆனால், இயேசு அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தபோது, யோவான் அவருடைய தூய்மையால் மிகவும் ஈர்க்கப்பட்டார், அவர் தானே தனது இதயத்தில் வெட்கப்படுகிறார். தனக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தின் கரங்களே கறைபடிந்திருந்ததாக அவர் உணர்ந்து, அவர் பாத்திரங்களை மாற்ற விரும்பினார். இயேசு அவனது தயக்கத்தை வென்றார். “நீதியை நிறைவேற்றுவது ஏற்றதாயிருக்கிறது”.
(மத்.3:15) என்பது கடவுளின் கட்டளைகள் வகுக்கப்பட்டுள்ள வேதத்தை நிறைவேற்றுவதாகும். இயேசுவுக்கு மட்டுமே இருந்தது ஒருவர் தந்தையின் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்ற விரும்புகிறார்.
ஞானஸ்நானத்தின் பிரச்சினை
யோவான் மூலம் இயேசு ஞானஸ்நானம் பெற்றார் என்பது ஒரு உண்மையான சிக்கலை உருவாக்குகிறது. மனந்திரும்புதலும் மன்னிப்பும் தேவையில்லாத பாவமற்ற கிறிஸ்து ஒரு சடங்கிற்காக மட்டும் ஏன் தம்மை ஞானஸ்நானத்திற்கு உட்படுத்தவேண்டும்? நான் மூன்று பதிலை கொடுக்க விரும்புகிறேன்:
1. அவரைப் பொறுத்தவரை, ஞானஸ்நானம் என்பது ஒரு தீர்க்கதரிசன பணியின் தொடக்கத்தையும், மேசியாவாகிய ஒப்புரவாளராக சித்தரிக்கிறது.
2. தற்பொழுதுவரை, யூதமார்க்திற்கு அமைந்த புறஜாதியாருக்கே அல்லாமல், யூதர்களுக்கு அது தேவைப்படவில்லை. இது அவருடைய சபையில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னடையாளமாக இருந்தது.
3. ஞானஸ்நானம் என்பது ஒரு வெளிப்படையான செயலாகும், இதன் மூலம் அவர் பாவமுள்ள மனிதர்களோடு பாவமற்றவராக இணையாகக் காண்பித்தார். அவர் இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கமே தேவனோடு நம்மை ஒப்புரவாக்க என்பதை தெளிவுபடுத்தினார். அவரின் ஞானஸ்நானம் என்பது பாவத்தின் ஒப்புதல்வாக்குமூலம் அல்ல, மாறாக அடையாளமாக அவர் நமக்காகப் பாவமாகினார் என்பதைக் காட்டுகிறது. (2.கொரி.5:21).
ஆவியானவரின் வருகையும் பிதாவிடமிருந்து உறுதிப்படுத்தலும் (மத்.3:16-17)
இந்த காணப்படும் நிகழ்வின் சிறப்பம்சம் என்னவெனில் திரித்துவத்தின் ஒவ்வொரு நபரின் பங்கேற்பு ஆகும் – பிதாவின் சித்தத்தைச் செய்ய குமாரனின் விருப்பமும் ஆவியானவர் இறங்குதலும் பிதாவின் உறுதிப்படுத்தலும் காணப்படுகிறது. ஏசாயா மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனம் கூறுகிறார்:” கர்;த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்@ சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார். இருதயம் நொறுங்குண்டவர் களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,” (ஏசா.61:1). இந்த தீர்க்கதரிசனத்தின் பார்வையின் இங்கே நிறைவேறியது. புறாவின் சின்னமாக ஆவியானவர் இயேசுவின் ஊழியப்பணிக்கு தம்மை மூடியிருந்தார். எங்கள் ஊழியத்தில் நாம் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை சார்ந்து இருக்கின்றோமா?
இயேசுவும் யோவானும் மட்டுமே வானத்திலிருந்து வந்த குரலைக் கேட்டதாகத் தெரிகிறது. இந்த இரு வார்த்தைகளும் சங்கீதம் 2:7 மற்றும் ஏசாயா 42:1 மேற்கோள் காட்டப்படுகிறது. பிதாவின் இந்த நிச்சயப்படுத்தல் மூலமாக இயேசுவின் பாடுகளின் ஊழியம் ஆரம்பமாகிறது.
உங்கள் சிந்தனைக்கு:
திரித்துவத்தின் இரகசியத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும், பிதா, குமாரன், பரிசுத்தாவியானவரின் கிரியைகள் எப்படியாக எங்களுடன் ஒப்புரவாகுதலை நடப்பிக்கிறது.