நாள் 6: ஏரோதுவின் இராஜ்யம் (மத்தேயு 3:1-12)
யோசேப்பு தனது குடும்பத்துடன் எகிப்திலிருந்து திரும்பிவந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகின்றன. புதிய நட்சத்திரம் ஒன்று யூதாவில் எரிந்தது பிரகாசிக்கிறது. யோவான் ஸ்நானகன் உள்நாட்டில் பழைய ஏற்பாட்டு எலியா போன்று பிரவேசித்தார். யோவான் ஸ்நானகன் இயேசுவின் உறவினர், இயேசுவைவிட சுமார் ஆறு மாதங்களும் மூத்தவர். அவரது குறுகிய, மாற்றக்கூடிய, சமரசமற்ற ஊழியம் ஒரு வருடத்திற்குள் மக்களை அடிஅஸ்திவாரங்கள் அசையும்படி மாற்றியது. 400 ஆண்டுகளாக அமைதியாக இருந்த தீர்க்கதரிசிகளின் குரல் அவர்மூலம் மீண்டும் பேசியது. அவரது செய்தி மிகவும் சக்தி வாய்ந்திருந்தபடியால் யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானம் கொடுத்த யோர்தான் பள்ளத்தாக்குக்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் மக்கள் திரண்டனர்.
மனிதன்
யோவான் ஸ்நானகன் அதிகாரம் கொண்ட ஒரு நிதானமான நபர். வலிமை மற்றும் சுய மறுப்பின் தாழ்மையால் அவர் அடையாளம் காணப்பட்டார். இயேசு அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை” (மத்.11:11). ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை (மத்.3:3-5) அவர் தான் என்று கூறி தனக்குத்தானே பயன்படுத்தி, வரவிருக்கும் ராஜாவின் முன்னோடியாக இருப்பார் என்று கூறுகிறார் (மத்.3:3). இயேசு அவரைப் தீர்க்கதரிசிகள் வரிசையில் மேன்மையானவராகப் புகழ்கின்றார். அவர் காற்றினால் அடிக்கப்பட்டு வளைகின்ற ஒரு நாணல்போல ஒரு கோழை அல்ல, ஒரு உறுதியான மனிதர். அவர் ஒட்டக முடி உடை அணிந்திருந்தார், அவரது கச்சை வாரினால் செய்யபஇபட்டதயிருந்தது, மற்றும் வெட்டுக்கிளிகள், காட்டு தேன் உட்கொண்டார். (ஒப்பிடுங்கள்: லூக்.7:24-28, மத்.3:4, லூக்.7:24-28) யோவான் ஸ்நானகனின் மகத்தான செல்வாக்கைக் கண்டு ஏரோது மிகவும் பயந்தான் என்று யூத வரலாற்றாசிரியரான ஜோசபஸ் கூறுகிறார். இயேசு அவரை எரிந்து பிரகாசிக்கும் விளக்கு என்று அழைத்தார் (யோ.5.35). அவர் எவ்வித பயமின்றி, யாருக்கும் ஆதரவாகப் பிரசங்கிக்கவில்லை. அவருடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்தினரிடையே, அவர் வேதபாரகர்களையும், பரிசேயர்களையும் விரியன் பாம்புக் குட்டிகளே என்ற கடிந்துகொண்டார் (மத்.3:7). அவருடைய உயிருக்கே ஆபத்தாக இருந்தும்கூட, ஏரோது முன்னிலையில் அவர் தமது செய்தியின் தரத்தைக் குறைக்கவில்லை.
செய்தி
அவரது பிரசங்கத்தின் ஆரம்பமே மனந்திரும்புதலும் தேவனுடைய இராஜ்யம் நெருங்குகிறது என்பதைப் பற்றியதாகும். மனந்திரும்புதல் என்பது பாவத்தின்மேல் நமது அணுகுமுறைகளில் ஒரு தீவிரமான மாற்றமாகும் மற்றும் முற்றிலும் ஒரு புதிய சுபாவத்தைக் கொடுக்கிறது. தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மனந்திரும்புதல் முக்கியமானது. ஆபிரகாமை யூதர்கள் அழைப்பதை (மத்.3:9) யோவான் கடுமையாகக் கண்டித்தார்: ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்@ “உண்மையான மனந்திரும்புதல் ஒரு நேர்மையான மற்றும் நீதியான வாழ்க்கை முறையில் காணப்பட வேண்டும் (மத்.3:8).
ஞானஸ்நானம் என்பது சுத்திகரிப்பு, புறமதத்திலிருந்து யூதமார்க்கத்திற்கு மாறியவர்களிடம் யூதர்கள் வேண்டிநின்றார்கள். ஆனால் யோவான் தனது கோரிக்கையில் மிகவும் தீவிரமானவர். அவர் யூதர்களையே மனந்திரும்பி வரப்போகும் தேவகோபத்திற்கு தப்பிக்கொள்ளும்படி பிரசங்கித்தார் (மத்.3:10). இந்த செய்தி மதத் தலைவர்களுக்கு சந்தோஷத்தை உண்டாக்யிருக்காது என்பதை நாம் நன்றாக கற்பனை செய்து பார்க்கலாம்.
வாக்குத்தத்தம்
யோவான் ஸ்நானகன் மிகவும் அர்த்தமுள்ள ஞானஸ்நானம் பற்றி பேசினார் (மத்.3:11,12), இது பெந்தெகொஸ்தே நாளில் நிறைவேறியது. ஆவியின் மூலம் எதிர்பார்த்திருக்கும் விசுவாசிகள் ஞானஸ்நானத்தினூடாக ஒரே சரீரமாக இணைக்கப்படுவார்கள். (1.கொரிந்தியர் 12:13). ஆவி என்பதற்கான எபிரேய மற்றும் கிரேக்க வார்த்தையின் பொருள் “சுவாசம்” அல்லது “காற்று” ஆகும். ஆவியானவரின் வருகை புதிய ஆன்மீக வாழ்க்கையில் ஜீவனையும் மற்றும் வல்லமையையும் கொண்டுவந்தது. நெருப்பைப் பற்றிய குறிப்பு (மத்.3:11) அவருடைய வருகையில் அவரைத் தொழுதுகொள்ளுபவர்களுக்கு ஞானமும் சுத்திகரிப்பும் பெறுவர்.
உங்கள் சிந்தனைக்கு:
நான் பயம் இல்லாமல் தீமையை எதிர்க்கிறேனா, நான் நன்மைக்காக நிற்கிறேனா?