நாள் 4: அனைத்தையும் ஆளுகைசெய்யும் தொலைநோக்கு (மத்தேயு 2:9-15)
குழந்தையைத் தேடும் ஏரோது மன்னனின் கட்டளையை சாஸ்திரிகள் அமைதியோடு ஏற்றுக்கொண்டு, அவர்கள் ஏற்கனவே கிழக்கில் கண்ட நட்சத்திரத்தால் வழிநடத்தப்பட்டு, மரியாள் கிடத்தியிருந்த மகனைக் கண்டார்கள்.
ஞானிகளின் தொழுகை (மத்.2:9-10)
குழந்தை இருந்த இடத்திற்கு மேலே அந்த நட்சத்திரத்திம் நின்றவுடன் சொல்ல முடியாத அளவுக்கு அவர்களை ஆனந்தத்தால் மகிழ்ச்சியாக்கியது, ஆனால் குழந்தை இயேசுவின் பார்வை அவர்களை முன் விழுந்து வணங்கச் செய்தது. இந்த புறஜாதியான தத்துவஞானிகள் வேதத்தைக் கேட்டு அதை நம்பிச் செயல்பட்டார்கள் (மத்.2:5-6), ஆனால் அவர்கள் வேதத்தில் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை. அப்படியிருந்தும் அவர்கள் குழந்தையிடம் வழிநடத்தப்பட்டனர், யூத மதத் தலைவர்களோ, பரிசுத்த வேதாகம எழுத்துக்களை பரிசுத்த ஆவிக்குள் கற்காதபடியால் தவறாக வழிநடத்தப்பட்டு அதைக் கண்டுபிடிக்கவில்லை. நாம் தேவனுடைய வார்த்தையின் ஒளியைப் பின்பற்றினால் நாங்கள் இருளில் இருக்க மாட்டோம்.
ஞானிகளின் காணிக்கை (மத்.2:11)
ஒரு ராஜாவை பார்ப்பதற்கு பரிசுடன் அணுகுவது அன்றை வழமையாக இருந்தது, அதனால் சாஸ்திரிகள் புதிதாகப் பிறந்த ராஜா வெறுங்கையுடன் அணுகவில்லை. அவர்களின் பரிசுத்தமான பரிசுகளில், ஒரு ஆழ்ந்த வெளிப்பாடு கொண்டிருந்தது. தங்கம் ராஜாக்களுக்கு எற்ற ஒரு பொருத்தமான பரிசு. “ஷேபாவின் பொன் அவருக்கு பரிசாகக் கொடுக்கப்படும்” என்று ஒர் இராஜாவினால் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. (சங்.72:15). தூபவர்க்கம் அதன் இனிமையான வாசனையுடன் தேவாலய வாழிபாட்டில் ஆசாரியர்களால் பயன்படுத்தப்பட்டது. வெள்ளைப்போளத்தை மரணச்சடங்கில் பயன்படுத்தினார்கள். அதனால் மரித்தவரை சுகந்தவர்கமிட்டார்கள். எனவே முதல் கிறிஸ்துமஸ் அன்று இரட்சகரான இந்தக் குழந்தை ஒரு இராஜாவாகிய ஆசாரியர் மட்டுமல்ல, பாடுபடும் மீட்பராகவும் இருப்பார் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மார்ட்டின் நீமொல்லர் என்பவர் தொட்டிலும் சிலுவையும் ஒரே மரத்தில்தான் செதுக்கப்படுகின்றன என்று காரணமின்றிக் கூறவில்லை.
ஆனால் இந்த காணிக்கைகளுக்கு ஒரு நடைமுறை அர்த்தமும் இருந்தது. யோசேப்பு எகிப்துக்கு தப்பி ஓட வேண்டியிருந்தபடியால் அவருக்கு தொழில்வாய்ப்புகள் இல்லாதிருந்தது, அவர் ஒரு பணக்காரர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் தனது சிறிய குடும்பத்திற்கான வாழ்க்கை மற்றும் பயணச் செலவுகளைச் செய்ய இந்த தங்கத்தைப் பயன்படுத்த முடிந்தது. தேவன் எங்கள் வாழ்க்கைக்கான மிகச்சிறிய விவரங்களைத் திட்டமிடுகிறார், மேலும் நாங்கள் கீழ்ப்படிதலுடன் புறப்படும்போது அவர் செலவுகளை ஏற்றுக்கொள்வார்.
எகிப்துக்கு ஓடிப்போகுதல் (மத்.2:12-15)
ஒரு சொப்பனத்தின் மூலம் யோசேப்பு தேவனால் மூன்று முறை எச்சரிக்கப்படுகிறார் (மத்.2:13,19,22), மற்றும் அவரது உடனடியான கீழ்ப்படிவு வெறித்தனமான ஏரோதுவின் வெறுப்பிலிருந்து இயேசுவைப் பாதுகாக்கிறது. ஏரோது போன்றவர்கள், வீணாக கிறிஸ்துவுக்கு எதிராக சதிகளைச் செய்கிறார்கள், ஆனால் “பரலோகத்தில் வீற்றிருப்பவர் நகைப்பார், ஆண்டவர் அவர்களை இகழுவார்”. (சங்.2,2-4).
இந்த சம்பவத்தை மோசேயின் மாதிரிகளிலும் நாம் காணலாம் – விசுவாசத்தினால் பெற்றோர்கள் குழந்தையை மறைத்து, ஆபத்து குழந்தையை விட்டு விலகியவுடன் எகித்தை விட்டு வெளியேறினார்கள் (மத்.2:20). இந்த குழந்தை மோசே தீர்க்கதரிசிகள்போல உபாகமம் 18:15ன் படி கூறப்பட்டது: “உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை உங்கள் சகோதரர் நடுவிலிருந்து எழும்பப்பண்ணவார், அவருக்கு செவிகொடுப்பீர்களாக“.
உங்கள் சிந்தனைக்கு:
இந்த ராஜாவின் காலடியில் நான் என்ன சுயத்தை அல்லது சொத்துக்களைப் பரிசாக வைக்கிறேனா?