நாள் 3: சாஸ்திரிகளின் வருகை (மத்தேயு 2:1-8)
இன்று இதை வாசிக்கும் உங்களுக்கு கிறிஸ்துமஸ் அல்ல என்றாலும், இந்த மூன்று ஞானிகளுடனும் அவர்கள் யாத்திரையில் இராஜாவாகவும் இரட்சகராகவும் பிறந்தவரை கண்டுகொள்ள இணைவோம்.
இராஜாவின் பிறந்த இடம் (மத்.2:1,5,6,8)
மரியாள் மற்றும் யோசேப்பின் சொந்த ஊரான நாசரேத் ஊரே குழநதை பிறக்கும் இடமாக நாம் எதிர்பார்த்திருப்போம். ஆனால் மேசியா பெத்லகேமில் பிறக்க வேண்டும் என்று மீகா தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார் (மீகா 5). அவரது அனைத்தையும் உள்ளடக்கிய, விரிவான தொலைநோக்கு பார்வையில் தேவன் அவரது குமாரன் பெத்லகேமில் பிறக்கும்படி அவரது பெற்றோர்கள் அரசாங்கத்தின் கட்டளைப்படி தங்கள் வரிகளை செலுத்த செல்லவேண்டியதாயிருந்தது. (லூக்.2:1-4). மத்தேயு தீர்க்கதரிசனத்திற்கும் அதன் நிறைவேற்றத்திற்கும் இடையிலான தொடர்பை வலியுறுத்திக் கூறுகிறார். (மத்.2:5-6).
நெரிசலான பெத்லகேமின்; சத்திரத்தில் மகிமையின் தேவன் ஒரு தொழுவத்தில் பிறந்தார். “தேவன் சிறிது காலம் குழந்தையாக ஆனார்.” அவருடைய தாழ்மையை தொழுதுகொண்டு அவரை வணங்கி ஆச்சரியப்படுவோம் !
சாஸ்திரிகளின் வருகை (மத்.2:1,2)
உலகம் முழுவதும் ஒரு தேடுதலின் வாஞ்சை ஏற்பட்டது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. இரட்சிப்பின் வாஞ்சை யூதர்களுக்கு மட்டும் உரிய சிறப்பியல்பு அல்ல. டாசிட்டஸ் என்பார் யூதேயாவிலிருந்து ஆட்சியாளர்கள் வந்து கிழக்கு தேசத்தார் தங்கள் நாடுகள் பெரும் வல்லமையுடைய தேசமாக மாறும் என்று நம்பிக்கையுடையவர்களாக இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறார்.
இந்த சாஸ்திரிகளின் நீண்ட பயணம் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது. இந்த சாஸ்திரிகள் மெய்யாகவே தேவனைத் தேடுபவர்கள். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நட்சத்திரத்தைப் பார்த்த ஜோதிடர்கள். நட்சத்திரத்தைப் பற்றி யூகங்களைச் செய்வது எந்த முடிவுக்கும் வழிவகுக்காது. ஆனால் வயலில் உள்ள மேய்ப்பர்களுக்கும் தரிசனமாகியும், சாஸ்திரிகளுக்கு வானத்தில் அடையாளத்தைக் காட்டியும் தேவன் நடப்பித்த கிரியையை நாம் மறுக்கமுடியாது. இது தேவனின் வழி. அவர் தம்மை நாம் புரிந்துகொள்ளும் முறைக்கேற்தான வழியில் நடத்துகிறார். சாஸ்திரிகளின் அனுபவத்திலிருந்து தேவன் கொடுக்கும் ஒளியை நாம் பின்பற்றும்போது கிறிஸ்துவிடம் வரமுடியும் என்பதைக் அறிந்துகொள்ளலாம்.
ஆனால் அந்த அடையாளம் அவர்களை எருசலேமுக்கு அழைத்துச் சென்றதே தவிர, வேதவசனங்களே அவர்களை பெத்லகேமுக்கு கொண்டு வந்தது. தேவன் அசாதாரணமான, இயற்கைக்கு அப்பாற்பட்டதை தேவைப்படின் பயன்படுத்துவார், ஆனால் வசனத்திற்கும், பரிசுத்தமான முடிவுஎடுத்தலுக்கும் நம்மை அழைக்கிறார்.
ஏரோதுவின் துன்மார்க்கம் (மத்.2:3-8)
எருசலேமில் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பிய மிகவும் திறமையான ஏரோது இராஜா தனது சிம்மாசனத்திற்குப் போட்டி ஏற்படும் என்ற பயத்தில் மோசமாக செயல்ப்படுகிறார். ஒரு ராஜாவின் பிறப்பு பற்றிய வதந்தி அவரை மோசனமான அச்சத்தில் ஆழ்த்தியது. அவர் யூத சங்கத்தை அழைத்து, மேசியா எங்கே பிறக்க வேண்டும் என்று கேட்டார். அவர் பெத்லகேம் என்று அறிந்தபோது சாஸ்திரிகளை அழைத்து குழந்தையை பெத்லகேமில் கண்டுபிடித்தபின் தானும் வந்து வணக்ங்கும்படி அதை அறிவிக்க கட்டளையிடுகின்றார்.
ஏரோது இயேசுவுக்கு அஞ்சினார். யூதர்கள் அவரை தவறாக புரிந்து கொண்டனர். ஆனால் சாஸ்திரிகள் அவரை வணங்கினர். “வாருங்கள் நாமும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்துவை தொழுகொள்வோம்;!”
உங்கள் சிந்தனைக்கு:
தேவன் எனக்குக் கொடுக்கும் ஒளியை தேவனைக்குறித்த கொஞ்ச அறிவையுடைய சாஸ்திரிகள் மாதிரி நான் உண்மையோடு பின்பற்றுகிறேனா?