நாள் 2: இம்மானுவேல், தேவன் நம்முடன் (மத்தேயு 1:18-25)
மனித வரலாற்றில் இயேசு போன்ற ஒரு தனித்துவமான நபரின் பிரவேசம் இருப்பது மிகவும் பொருத்தமானது. மத்தேயு தனது சுவிசேஷத்தில் யோசேப்பிற்கு முன்னுரிமை கொடுக்கிறார், ஆனால் லூக்கா மரியாளுக்கு முன்னுரிமையளிக்கிறார்.
பரிசுத்தமான கருத்தரித்தல் (மத்.1:18-19)
மிகவும் சங்கடமான வார்த்தைகளினால் சுவிசேஷகர் யோசேப்பின் வருங்கால மனைவி பரிசுத்த ஆவியானவரால் ஒரு குழந்தையை எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்தகொண்டார் என்பதை விவரிக்கிறார். அவர்கள் திருமணமாகவில்லை என்றாலும், தேவதூதன் மரியாளை யோசேப்பின் மனைவியாகவே பேசுகிறார். (மத்.1:20). இதன் அர்த்தம் யூதமுறைமையின்படி நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் பற்றிய சடங்கில் உள்ளது. யூத முறைமையின்படி, திருமணம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. முதலில் பெற்றோர் மூலமாகவோ அல்லது ஒரு இடைத்தரகர் மூலமாகவோ நிச்சயிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தை பருவத்தில் நடந்தமுடிகிறது. முதல் கட்டம் நிறைவாகும்பொது நிச்சயதார்த்தம் பகிரங்கமாக உறுதிப்படுத்தப்படுகிறது. இது ஒரு ஒப்பந்தமாகும், விவாகரத்து மூலம் மட்டுமே நீக்கக் கூடியதாகும். இந்த காரணத்திற்காகவே மரியாளை யோசப்பின் மனைவி என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நடைபெறும் துரோகம் விபசாரம்போன்று தண்டிக்கப்பட்ட வேண்டிய ஒன்றாகும்.
பின்னர் ஒரு வருடம் கழித்து திருமணம் நடைபெறும். இந்த நிகழ்வுகள் மரியாள் யொசேப்பிற்கு குழப்பத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. எவ்வாறு மரியாளின் நிலைமையை விளக்க முடியும்? ஜோசேப்பு நீதிமானும், இரக்கமுள்ளவருமாயிருந்தபடியால் இந்த அவமானத்தை மரியாளுக்கு கொடுக்காமல் விட்டுவிட முடிவு செய்தார். அவர் அவளை ரகசியமாக விவாகரத்து செய்ய விரும்பினார் (மத்.1:19).
தேவதூதனின் தலையீடு (மத்.1:20-22)
மரியாளின் திகைப்பு யோசேப்பை விட குறைவாக இல்லை. ஏனெனில் அவளின் தாழ்மையான அர்ப்பணிப்பு மற்றும் தெய்வீக திட்டத்திற்கு தன்னை ஒப்பக்கொடுத்தது மூலமாக அவளுக்கு அவமானததை கொண்டுவந்தது. அவள் யோசேப்பிடம் கூட தனது புனிதமான இரகசியத்தை பகிர்ந்து கொள்ளவில்லை, ஆனால் நம்பிக்கையுடன் தேவன் தனக்காக நின்று நியாயம்செய்வார் என்று நம்பினாள். தேவன் தலையிட்டார். அவர் தனது தேவதூதனை அனுப்பி யோசேப்பின் இந்த விவாகரத்து எண்ணத்தைக் கைவிடும்படி அறிவுறுத்தினார். பின்பு திருமணத்தின்மூலமாக இயேசு சட்டப்பூர்வமாக யோசேப்பின் வளர்ப்பு மகனானார். இப்போது நிலைமை தெளிவாக இருந்தது. நாம் கடினமான பாதையில் சென்றாலும் கீழ்ப்படிதலின் மூலமாக தேவன் உதவிசெய்வார் என்று நம்பலாம், இதன் மூலம் தேவன் அனைத்து விளைவுகளையும் தாமே பொறுப்பேற்கிறார்.
முதன்முறையாக, மத்தேயு சிறப்பியல்பு வாக்கியத்தைப் பயன்படுத்துகிறார்: “தீர்க்கதரிசியன் மூலமாய் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது” (மத்.1:22). சுவிசேஷகர் தனது முழு நற்செய்தியும் பழைய ஏற்பாட்டிலுள்ள கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணத்திலுள்ள தீர்க்கதரிசன நிறைவேறுதலை தெளிவாக காண்பிக்கின்றார்.
அதிசயமான நாமம் (மத்.1:23-25)
இந்த செய்தியின் கருப்பொருள் இமானுவேல் மற்றும் இயேசு என்ற இரண்டு பெயர்களில் காணப்படுகிறது. இயேசுவின் மனித அவதாரம் மூலம் தேவன் உலகத்துடன் ஒரு புதிய தொடர்பை ஏற்படுத்துகிறார். இமானுவேல், தேவன் நம்முடன் என்ற பெயர் நம்பிக்கையின் வெளிப்பாடாகக் காணப்படுகிறது. இயேசு, என்ற யூத பெயர் இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. கிரேக்கமொழியில் இயேசு என்ற எபிரெய யோசுவா என்ற பெயர் “யெகோவா இரட்சிப்பு” என்று பொருள்படும். அவரது பெயரிலும் அதே நேரத்தில் தனது ஊழியப் அழைப்பை வெளிப்படுத்தினார் (மத் 1:21).
உங்கள் சிந்தனைக்கு:
தேவன் என் விரும்பத்திற்கும், வசதிக்கும் எதிரிடையாக நின்றால், மரியாளைப் போல அவருடைய சித்தத்திற்கு அடிபணிகிறேனா ?