நாள் 1: அவர் யாருடைய மகன்? மத்தேயு 1:1-17
கிழக்கின் பெரும்பாலான மக்களைப் போலவே, யூதர்களும் தங்கள் வம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ஒரு யூதன் தனது ஆசாரிய வம்சாவளியை நிரூபிக்க ஆரோனின் வம்சவரலாறுவரை தெரிந்தால்தான் ஆசாரியராக தகுதி பெற முடியும். எங்களைப் பொறுத்தவரை, வம்சவரலாறு ஒரு முக்கிய பங்கைத் தீர்மானிக்கவில்லை. ஆனால் யூதர்களுக்கு இது மிகவும் முக்கியமானதொன்றாகும். மத்தேயு இயேசுகிறிஸ்துவை ஒரு வரலாற்று நாயகனாக எமக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறார், ஒரு கற்பனைப் பாத்திரமாகவல்ல. அதனால்தான் அவர் இயேசுவின் வம்ச வரலாற்றை நமக்கு முன்வைக்கிறார்.
குறிப்பிடத்தக்க மூன்று நபர்கள்
மத்தேயு கிறிஸ்துவை ஆபிரகாம் மற்றும் தாவீதுடன் தொடர்புபடுத்துகிறார் (மத்.1:1). தாவீதின் குமாரன் என்று கூறுவதன்மூலம் இயேசுவை அரச வம்சத்துடன் நேரடியாக இணைத்து, யூதர்கள் எதிர்பார்க்கும் மேசியா என்பதை விவரிக்கிறார். ஆபிரகாமின் குமாரன் என்று கூறுவதன்மூலம் இயேசுவை எபிரேய மக்களின் மூதாதையருடன் முன்னிறுத்தி, யூதர்களுக்கு மட்டுமல்ல, பூமியின் அனைத்து வம்சங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்று வாக்களிக்கிறார். ஆகவே யூத மதத்துடனான இயேசுவின் தொடர்பு அரச மற்றும் இனரீதியானது.
மூன்று வரலாற்று நெருக்கடிகள்
இந்த வம்சவரலாறு இஸ்ரேலின் வரலாற்றில் மூன்று முக்கியமான காலங்களாக மத்தேயுவினால் பிரிக்கப்பட்டுள்ளது.
a) ஆபிரகாம் முதல் தாவீது வரை (மத். 1:2-6ய)
b) தாவீதிலிருந்து சிறைப்பட்டுப்போனது வரை (மத்.1:6-11)
c) சிறையிருப்பிலிருந்து மேசியாவும் இரட்சகர் வரை (மத்.1:12-17)
ஒரு நினைவூட்டலாக, மத்தேயு எப்போதும் இயேசுவின் வம்சவரலாற்றைத் தலா 14 சந்ததிகளாக மூன்று பிரிவுகளாக உருவாக்கினார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். நமக்கு நன்கு தெரிந்த நான்கு இராஜாக்கள் இங்கு விடுபட்டிருக்கின்றனர் – அகசியா, யோவாஸ், அமத்சியா, யோயாக்கீன்
மத்தேயு இயேசுவின் சட்டப்பூர்வ வம்சாவளியை இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு மூலமாக குறிப்பிடும் அதே நேரத்தில், லூக்கா மரியாளின் வம்சாவளியைக் குறிப்பிடுகின்றார்.
மூன்று கவனிக்கத்தக்க பெண்கள்
நம்முடைய கர்த்தரின் நரம்புகளில் பாய்ந்த இரத்தத்தின் கலவை மனிதர்களுடன் தேவன் தம்மை அடையாளப்படுத்த இதைவிட சிறந்த சான்று எதுவும் இல்லை. இங்கே பட்டியலிடப்படும் ஆண்களும் பெண்களும் அவர்களின் பக்திக்கு அல்லது அவர்களின் சீரழிவுக்குப் பெயர்பெற்றவர்கள் ஆவர். ஒருபோதும் ஒரு பெண்ணின் யூதவம்சாவளியில் இல்லாதபோதும், இது பெண்களுக்கு எதிரான யூத பாரம்பரியத்தில் ஒரு சவாலாகும். நமது கர்த்தரின் பெண் மூதாதையர்களான தாமார், முறையற்ற விபச்சாரத்தில் குற்றவாளியானவள், மற்றும் விபச்சாரியான ராகாப், மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பத்சேபாள் அடங்குவர். இந்த பெண்கள் குழுவில் மோவாபில் இருந்து வந்த ரூத் என்பவரும் அடங்குவார். இது யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும் இருந்த பிரிவினைச் சுவரைத் தகர்த்தது. எனவே மத்தேயு தனது ஆரம்ப செய்தியில் மறைந்திருந்த ஒரு புதிய இரட்சிப்பின் காலத்தைத் தெரிவித்தார். குறிப்பாக, மத்.1:16ல் பரிசுத்த ஆவியானவர் மூலம் இயேசு கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு பற்றிய உண்மையை வெளிப்படுத்திக் காண்பிக்கின்றார்.
உங்கள் சிந்தனைக்கு:
நம்மிடையேயுள்ள சுயநல மற்றும் அழிந்துபோகிற ஜனங்களுக்காக பரலோகத்திலிருந்து வந்த பாவமற்ற கிறிஸ்துவின் தாழ்மையை நாம் கண்டு ஆச்சரியப்படக் கற்றுக்கொள்ள வேண்டும்.