தேவக்கட்டளையை மீறிச் சாபத்திற்குள்ளாகி நித்திய ஜீவனை இழந்த மனிதனை மீட்டெடுத்து அவனை மறுபடியும் தன்னோடு சேர்த்துக் கொண்டு நித்திய கால வாழ்வை அளிக்கும்படி தேவன் சித்தமானார். அதற்கான தமது திட்டத்தை ஏதேன் தோட்டத்தில் வெளிப்படுத்துவதை ஆதி 3:15ல் காண்கிறோம். பாவம் ஒரு ஸ்திரீயால் பிரவேசித்தது. எனவே, மீட்புக்காக ஒரு ஸ்திரி தெரிந்தெடுக்கப்படுவாள். தேவன் தாமே அந்த ஸ்திரியீன் வித்தாகப் பிறப்பார். அதாவது வார்த்தையாகிய தேவன் ஒரு ஸ்திரீயின் வயிற்றில் மாம்சமாவார். ஸ்திரீயின் வித்தாகப் பிறக்கும் தேவன் ஆதாமின் பாவத்தால் ஏற்பட்ட மரணத்திலிருந்து அவன் சந்ததியை மீட்டுக்கொண்டு, சாத்தானின் தலையை நசுக்குவார். இந்த இரட்சிப்பின் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்படுவதைப் பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கமுடிகிறது. ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தை விட்டுத் துரத்தப்பட்டார்கள்.
இது முதல் மனச்சாட்சியின் காலம் ஆரம்பிக்கிறது.