சாத்தான் ஏதேன் தோட்டத்தில் புகுந்து சர்ப்பத்தின் மூலமாய் ஏவாளை வஞ்சித்தான். விலக்கப்பட்ட கனி புசிப்பதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதும், இச்சிக்கப்படத்தக்கதாயும் இருக்கிறது என்று கண்டு, ஏவாள் அதைப் பறித்து, புசித்து தன் கணவனுக்கும் கொடுத்தாள். தேவக்கட்டளையை மீறினபடியால் அவர்கள் வீழ்ச்சியடைத்தார்கள். பாவத்தின் சம்பளமாகிய மரணம் அவர்களை ஆட்கொண்டது. ஆதாமின் சந்ததி ஜன்ம பாவத்திற்குள்ளானார்கள்.
வீழ்ச்சியடைந்த அதாமும் ஏவாளும் அவர்களை வஞ்சித்த சாத்தானும் சபிக்கப்பட்டார்கள். அவர்களினிமித்தம் பூமியும் சபிக்கப்பட்டது (ஆதி.3:1-7, 14.19).