Thursday, January 15, 2026
Tamil Bible Blog
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home இயேசுவுடன் நூறு நாட்கள்

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 28

Webmaster by Webmaster
December 15, 2022
in இயேசுவுடன் நூறு நாட்கள்
0
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36
74
SHARES
1.2k
VIEWS

நாள் 28: இயற்கையின் மீது தேவவல்லமை மத்தேயு 8:23-27

மத்தேயு பதிவுசெய்த மூன்று குணப்படுத்தும் அற்புதங்கள் வேறு மூன்று அற்புதங்களால் அதன் பெரிதான நோக்கத்தைக் காட்டுகின்றன. இயற்கையின் மீது வல்லமை மற்றும் பிசாசுகளின் மீது இயேசுவின் வல்லமை மற்றும் பாவத்தை மன்னிப்பதற்கான அவரது அதிகாரம் ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்த அற்புதங்கள் பகுத்தறியும் மக்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் காட்சி அல்ல, ஆனால் அவருடைய தெய்வீக வல்லமையின் அர்த்தமுள்ள அறிகுறிகள்.

You might also like

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

கடலில் புயல் (மத்.8:23-24)

கலிலேயாக்கடல் மலைகளால் சூழப்பட்டு, கடல் மட்டத்திற்குக் கீழே உள்ளது. நியூசிலாந்தின் சில கடல்களில் புயல்கள் ஏற்படும்போது அவை மிகவும் ஆபத்தானதான இருக்கும். ஏரிகள் அமைதியானவை மற்றும் பிரகாசமான சூரிய ஒளியில் அமைதியாகக் காணப்படும், ஆனால் அலைகள் அடுத்த கணம் திடீர் புயல் காற்றினால் ஒரு குழம்பாக மாறும். இந்த சம்பவம் தண்ணீர் குவளையில் ஏற்பட்ட புயல் அல்ல. இங்கே பயன்படுத்தப்படும் சொற்பதம் பூகம்பம் போன்ற நடுக்கம் போன்றது என்று குறிப்பிடப்படுகிறது. மத்தேயு காற்றின் பெலத்தினால் படகுகள் தண்ணீரின் வெள்ளத்தில் மூழ்கின என்பதாக விவரிக்கிறார். ” படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று” என்கிறார் மாற்கு, மற்றும் லூக்கா “அவர்கள் மோசமடையத்தக்கதாய் படவு ஐலத்தினால் நிறைந்தது” என்கின்றார். சீஷர்கள் மெய்யாவே இடுக்கத்திலும் நெருக்கடியிலும் இருந்தனர்.

இயேசு அமைதியாயிருத்தல் (மத்.8:24)

இயேசு பிரசங்க பீடமாக உபயோகித்த படகு அலைகளினால் தானியத்தின் கோது போன்று முன்னும் பின்னுமாகத் தூக்கி எறியப்பட்டது. ஆனால் தனது கடுமையான ஊழியத்தால் சோர்ந்துபோன இயேசு பீதியடைந்த சீஷர்களுக்கு மத்தியில் தூங்கினார். இயேசு ஒரு உண்மையான மனிதர் என்பதற்கு அவருடைய சோர்வு ஒரு சான்றாகும். அவர் மனிதர், ஆனால் ஒரு வார்த்தையில் புயலைத் தணித்த ஒரு தெய்வீக வடிவம். அவருடைய இருதயமும் மனமும் தேவனோடு இருந்தபடியால், அவர் ஆழ்ந்து நிம்மதியாகத் தூங்க முடிந்தது.

விசுவாசமற்ற சீஷர்கள் (மத்.8:25-28)

தங்கள் பயத்திலும் பீதியிலும், சீடர்கள் தங்கள் கர்த்தரைக் குறைகூறுவதற்கு இட்டுச் செல்லப்பட்டனர். “போதகரே, நாங்கள்மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா? ” (மாற். 4:38). இந்த வார்த்தைகளால் அவர்கள் இயேசுவை எழுப்பினர். இந்த நிந்தையான பதிலா இயேசு தம்முடைய சீஷர்களை நேசிப்பதற்கும் கவனிப்பதற்கும் கிடைத்தது? அவர்களே ஒரு கண்டிப்புக்கு ஏற்றவர்கள். ஆனால் இயேசு அவர்களை வேறொரு கேள்வியைக் கேட்டு அன்பாகவும் பணிவாகவும் நோக்கினார்: “அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள்;?” பயத்தின் விசித்திரமான பகுதியை நாம் பார்க்க வேண்டும் -” மடிந்துபோகிறோம் “- மற்றும் நடுக்கம் நிறைந்த விசுவாசம் – “இரட்சியும்” – என்பதையும் கவனிக்கவும்.

அதிகாரம் வாய்ந்த வார்த்தை (மத்.8:26)

இயேசுவின் வல்லமையான கட்டளைக்குப் பின்பு: “இரையாதே, அமைதலாயிரு!” புயல் தணிந்தது, அது மிகவும் அமைதியானது. ஆனால் இயேசுவின் வல்லமையின் இந்த அமானுஷ்ய தாக்கத்தைக் கண்டு சீஷர்கள் ஆச்சரியமும் பயமும் அடைந்தவர்களாகி கூறினார்கள்: “இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே?!” கிறிஸ்து எங்கள் வாழ்க்கைக் கப்பலில் இருந்தால், பயம் நியாயமற்றது மற்றும் தேவையற்றது. ஆம், நாங்கள் எங்கள் விசுவாசத்தைக் மறுதலித்து, பயம் நம்மைக் கட்டுப்படுத்த அனுமதிக்கின்றோம். விசுவாசி தனது வேலை முடியும் வரை மரணிக்கமாட்டார். நம் வாழ்வில் புயல்கள் எவ்வளவு சக்திவாய்ந்ததாக வீசினாலும், அவற்றை இயேசு தடுக்க முடியும். கவலையின் அலைகளாகவோ அல்லது உணர்ச்சிகளின் கிளர்ச்சியாகவோ இருக்காலம். இயேசு மட்டுமே அவற்றிற்கு ஆண்டவராக இருக்கின்றார். இயேசுவின் சபையானது விரோதம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகினாலும், அதை வெல்ல முடியாது (மத்.16.18). “பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.”

சுய பரிசோதனைக்கு:

நம்முடைய பயங்கள் எங்கள் விசுவாசமின்மையைப் பிரதிபலிக்கிறது.

Webmaster

Webmaster

Recommended For You

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 38: யார் முதலிடம் ? மத்தேயு 10:34-42 சீஷத்துவத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றித் தம்முடைய சீஷர்களுக்கு அவர் தொடர்ந்து போதிக்கும் விதத்தில் நம்முடைய கர்த்தரின் நேர்மையும் நீதியும் காட்டப்படுகிறது. தவிர்க்க முடியாத விரோதம் (மத்.10:34-36) அவநம்பிக்கையின் பகை...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 37: பயத்திலும் அச்சத்திலும் ஆறுதல் மத்தேயு 10:24-33 பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள்! (மத்.10:26,28,31). இந்தக் கட்டளைதான் இப் பகுதிக்கான முக்கிய சொல். இந்த நாட்களில் பயம் ஒரு அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. இது அனைத்து...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 36: அப்போஸ்தலராக இருப்பது சிரமமில்லாத ஊழியம் அல்ல மத்தேயு 10:16-23 தம்முடைய இராஜ்யத்தில் சேவையாற்றுவதற்கான முயற்சியை இயேசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த சீஷனும் எப்போதும் அவர் தவறான ஆசைக்காட்டி ஊழியத்திற்கு அழைத்தார் என்ற கூறமுடியாது. இந்தப்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 35

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 35: முதலாவது அனுப்புதல் மத்தேயு 10:5-15 அப்போஸ்தலர்களின் ஊழியத்திற்கு இயேசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் பலரைக் குழப்பிவிட்டன, ஆனால் இதற்கு சில விளக்கங்கள் உள்ளன. வரையறுக்கப்பட்ட கட்டளை (மத்.10:5-6) எல்லா தேசங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது தேவனின் குறிக்கோள்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 34

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 34: அறுவடைக்கு ஆயத்தம் (A) மத்தேயு 9:35-10:4 இந்தப் பகுதி கர்த்தருடைய ஊழியத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. கலிலேயா பட்டணங்கள் வழியாக அவரது பயணம் ஜனங்கள்மேல் இருந்த ஆழ்ந்த தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளைப்...

Read moreDetails
Next Post

நாள் 349 - தீத்து 1-3; பிலேமோன் 1-1;

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • மத்தேயு
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?