கர்த்தர் தமது பணிக்கு உங்களை
அழைக்கும்போது மந்திரிப் பதவியே
உங்கள் முன் மண்டியிட்டு நின்றாலும்
அதற்கு அடிபணிந்து உங்களது
மாண்புமிகு மதிப்பைக் குறைத்துக்கொள்ளாதேயுங்கள்.
தேவதூதர்களும் செய்யக்
காத்திருந்த சுவிசேஷப் பணி
உங்களைத் தேடி வரும்போது
அதை ஒரு பெரும் சிலாக்கியமாக
நினைத்து உங்கள் வாழ்க்கையை
தேவனுக்கு அர்ப்பணித்து
முன்னேறுங்கள். அவருடைய பயிற்சி
உலகத்தைக் கலக்கும் மனிதர்களாக
பதினொருவரை மாற்றியது. இன்னும்
அத்தகைய சீடர்களுக்காய் உலகம்
காத்து கிடக்கிறது.