பாபிலோனில் விக்கிரக வணக்கம் ஆரம்பம்

May 10th, 2012 by Kesaran

நிம்ரோத்

நோவாவின் சந்ததியில் நிம்ரோத் என்பவன் பராக்கிரமசாலியாய் இருந்தான். அவன் பாபிலோனை ஸ்தாபித்தான். அவன் தன்னைச் சூரியக் கடவள் என்று சொல்லி, விக்கிரக வணக்கத்தையும் ஸ்தாபித்தான். அது பாபிலோனிய ரகசியம் என்று அழைக்கப்பட்டது. இது ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாளை வஞ்சித்த சாத்தான் பாபிலோனியாவில் ஜனங்களை மறுபடியும் வஞ்சிக்கும் செயலாகும். பாபிலோனில் ஆரம்பிக்கப்பட்ட விக்கிரக வணக்கம் உலகத் தேசங்களில் எங்கும் பரவிற்று.

ஆனாலும் கர்த்தர் பாபிலோனிலிருந்து தமக்கென்று ஒரு மனிதனைத் தெரிந்து கொண்டார்.

பாபேல் கோபுரம்

May 9th, 2012 by Kesaran

கிழக்கிலிருந்து வந்த ஜனங்கள் தேவகட்டளைப்படி பூமியெங்கும் பரவிச் செல்லாதபடி, ஒரே இடத்தில் கூடியிருந்து, ஒரே பாஷையைப் பேசிக்கொண்டிருந்தார்கள். மட்டுமல்ல, அவர்கள் செங்கல்லும், நிலக்கீலும் உபயோகித்து, வானத்தை அளாவும் ஒரு கோபுரத்தைக் கட்டி, நமக்குப் பெயருண்டாக்குவோம் என்று சொல்லி, கோபுரம் கட்டத்தொடங்கினார்கள். கர்த்தர் அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கினார். எனவே, அது பாபேல் எனப்பட்டது. கர்த்தர்  அவர்களைப் பூமியெங்கும் சிதறிப்போகப் பண்ணினார். (ஆதி.11:1-9)

ஜனங்கள் கிழக்கிலிருந்து மேற்கே

May 8th, 2012 by Kesaran

ஆதி.11:1-2 வசனங்களின்படி, ஜனங்கள் பெருகினபோது, அவர்கள் கிழக்கிலிருந்து பிரயாணம்பண்ணி வருகையில்; சிநெயாரில் அதாவது சுமெரியாவில் சமபூமியைக் கண்டு அங்கே தங்கினார்கள். அங்கே அவர்கள் பெருகினார்கள்.

நோவாவின் திராட்சத் தோட்டம்

April 19th, 2012 by Kesaran

நோவா ஒரு திராட்சத் தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். காம் அதைக் கண்டு, தன் சகோதரருக்கு அறிவித்தான். இதினிமித்தம் காம் சபிக்கப்பட்டான். பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர் சேம், காம், யாப்பேத் என்பவர்களே. இவர்களால் பூமி எங்கும் ஜனங்கள் பெருகினார்கள் (ஆதி 9:20-27).

இதுமுதல் மனித ஆளுகையின் காலம் ஆரம்பமாறிற்று.

நோவாவின் பலி

April 18th, 2012 by Kesaran

நோவா தேவனுக்குப் பலி செலுத்தினான். கர்த்தர் நோவாவோடு உடன்படிக்கையை ஏற்படுத்தி, பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லை என்று சொல்லி வானவில்லை அடையாளமாக வைத்தார். நோவாவோடு பலுகிப் பெருகிப் பூமியை நிரப்பக் கட்டளையிட்டார். (ஆதி 8:20, 9:1-17)

அழைப்புக்குச் செவிகொடாதோர் அழிவு

April 17th, 2012 by Kesaran

நோவா ஜனங்களைப் பேழைக்குள் செல்லுமாறு அழைத்தான். ஜனங்கள் செல்லவில்லை. நோவாவின் வீட்டாரான 8 பேர் மட்டும் பேழைக்குள் ஏறினார்கள். நோவா தேவ கட்டளைப்படி குறிக்கப்பட்ட மிருகங்களை ஜோடு ஜோடாகப் பேழைக்குள் சேர்த்தான். 40 நாள் இரவும் பகலும் மழை பெய்தது. 150 நாள் ஜலம் பூமியின் மேலெங்கும் பிரவாகித்துக் கொண்டிருந்தது. சகல ஜீவ ஜந்துக்களும் அழிந்தன. பின்பு பேழை அரராத் மலையில் தங்கிற்று. தேவ கட்டளைப்படி நோவாவும் குடும்பமும் ஜீவ ஜந்துக்களும் பேழையிலிருந்து வெளியே வந்தார்கள் (ஆதி 6:18,7:1-24,8:4,14-19)

நோவாவின் பேழை

April 16th, 2012 by Kesaran

நோவா ஆதாமுக்கு பின் 10ஆவது தலைமுறை. அவனுக்குத் தேவனுடைய கண்களில் கிருபை கிடைத்தது. தேவன் அன்றைய பொல்லாத சந்ததியை ஜலப்பிரளயத்தால் அழிக்கத் திட்டமிட்டார். தமது திட்டத்தை நோவாவுக்கு வெளிப்படுத்தினார். ஜலப்பிரளயத்திலிருந்து தப்பிக் கொள்ள ஒரு பேழையைச் செய்ய நோவாக்குக் கட்டளையிட்டார். பேழையின்; நீளம்  300 முழம், அகலம் 50, உயரம் 30 முழும். அதற்கு 3 தட்டுகளும் அதன் பக்கத்தில் ஒரு கதவும், மேல் தட்டில் ஒரு ஜன்னலும் இருந்தன (ஆதி 6:8, 13:17)

மனுக்குலம் பாவத்தில்

April 11th, 2012 by Kesaran

ஆதாம் ஏவாள் துரத்தப்பட்ட பின், காயீன், ஆபேல் என்பவர்கள் பிறந்தார்கள். காயீன் ஆபேலைக் கொன்றான். பின்பு ஆதாமுக்குச் சேத் என்ற மகன் பிறந்தான். அதன்பின் ஆதாம் குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான். ஆதாமின் சந்ததி உலகில் பெருகிற்று. பாவமும் பெருகிற்று. மனிதனைப் படைத்ததற்காக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். பாவத்தின் மிகுதியால் தேவன் மனுக்குலத்தை அழிக்கச் சித்தமானார். (ஆதி.4:1-10,  6:1-7,11,12, 5:3-4)

தேவனின் இரட்சிப்பின் திட்டம்

April 10th, 2012 by Kesaran

தேவக்கட்டளையை மீறிச் சாபத்திற்குள்ளாகி நித்திய ஜீவனை இழந்த மனிதனை மீட்டெடுத்து அவனை மறுபடியும் தன்னோடு சேர்த்துக் கொண்டு நித்திய கால வாழ்வை அளிக்கும்படி தேவன் சித்தமானார். அதற்கான தமது திட்டத்தை ஏதேன் தோட்டத்தில் வெளிப்படுத்துவதை ஆதி 3:15ல் காண்கிறோம். பாவம் ஒரு ஸ்திரீயால் பிரவேசித்தது. எனவே, மீட்புக்காக ஒரு ஸ்திரி தெரிந்தெடுக்கப்படுவாள். தேவன் தாமே அந்த ஸ்திரியீன் வித்தாகப் பிறப்பார். அதாவது வார்த்தையாகிய தேவன் ஒரு ஸ்திரீயின் வயிற்றில் மாம்சமாவார். ஸ்திரீயின் வித்தாகப் பிறக்கும் தேவன் ஆதாமின் பாவத்தால் ஏற்பட்ட மரணத்திலிருந்து அவன் சந்ததியை மீட்டுக்கொண்டு, சாத்தானின் தலையை நசுக்குவார். இந்த இரட்சிப்பின் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்படுவதைப் பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கமுடிகிறது. ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தை விட்டுத் துரத்தப்பட்டார்கள்.

இது முதல் மனச்சாட்சியின் காலம் ஆரம்பிக்கிறது.

ஏதேனின் ஜீவ விருட்சக் கனி இழப்பு

April 6th, 2012 by Kesaran

கர்த்தர் மனிதனுக்காகச் சகலவித கனி விருட்சங்களையும் ஏதேனில் வைத்திருந்தார். தோட்டத்தின் நடுவில் ஜீவவிருட்சமும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும் இருந்தது. ஆனால் முதல் மனிதன் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் விலக்கப்பட்ட கனியைப் புசித்தபடியால் அவன் ஏதேனை விட்டுத் துரத்தப்பட்டான். அவனுக்கு ஜீவ விருட்சத்தின் கனி மறுக்கப்பட்டது. (ஆதி.3:22-24)

மனிதனின் வீழ்ச்சி

April 5th, 2012 by Kesaran

சாத்தான் ஏதேன் தோட்டத்தில் புகுந்து சர்ப்பத்தின் மூலமாய் ஏவாளை வஞ்சித்தான். விலக்கப்பட்ட கனி புசிப்பதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதும், இச்சிக்கப்படத்தக்கதாயும் இருக்கிறது என்று கண்டு, ஏவாள் அதைப் பறித்து, புசித்து தன் கணவனுக்கும் கொடுத்தாள். தேவக்கட்டளையை மீறினபடியால் அவர்கள் வீழ்ச்சியடைத்தார்கள். பாவத்தின் சம்பளமாகிய மரணம் அவர்களை ஆட்கொண்டது. ஆதாமின் சந்ததி ஜன்ம பாவத்திற்குள்ளானார்கள்.

வீழ்ச்சியடைந்த அதாமும் ஏவாளும் அவர்களை வஞ்சித்த சாத்தானும் சபிக்கப்பட்டார்கள். அவர்களினிமித்தம் பூமியும் சபிக்கப்பட்டது (ஆதி.3:1-7, 14.19).

ஆதிக் குடும்பம் தேவனோடு

April 4th, 2012 by Kesaran

பகலில் குளிர்ச்சியான நேரங்களில் தேவன் ஆதாம் ஏவாளோடு உலாவிக்கொண்டிருந்தார். இந்த உறவுக்காகவே அவர்கள் படைக்கப்பட்டார்கள். இந்தக் காலம் பாவம் இல்லாத காலம் என்று அழைக்கப்படுகிறது. (ஆதி.3:8)

ஆதாமின் படைப்பு

April 3rd, 2012 by Kesaran

தேவன் முதல் மனிதனாகிய ஆதாமைத் தமது சாயலிலும், ரூபத்திலும் சிருஷ்டித்தார். பூமியிலே மண்ணினாலே மஷனை உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். அவன் ஜீவாத்துமாவானான். ஆதாம் முதல் இயேசு வரை 64 தலைமுறைகள் என்று காணப்படுகிறது. ஆதாமின் எலும்பிலிருந்து ஏவாள் உருவாக்கப்பட்டாள். (ஆதி.1:26,  2:7,23).

படைப்பு குறித்து

March 30th, 2012 by Kesaran

படைப்பைக் குறித்து வேதப்புத்தகத்தில், ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார் என்று ஆதி.1:1ல் வாசிக்கிறோம். மனிதன் படைப்புக்கு முன் உண்டாக்கப்பட்ட முக்கியமான தேவதூதர்களில் ஒருவனாய் இருந்த லூசிபரைக் குறித்து ஏசா.14:12-17, எசேக்.28:13-18 வசனங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அவன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவன். அபிசேஷகம் பண்ணப்பட்ட கேரூப். ஞானமும், அழகும் நிறைந்தவன். அவன் உன்னதமான தேவனுக்கு ஒப்பாவேன் என்று தன் உள்ளத்தில் மேட்டிமை அடைந்தபோது, கீழே தள்ளப்பட்டான். அது முதல் அவன் சாத்தானாக அல்லது எதிராளியாக மாறினான். சாத்தானும் அவன் தூதர்களும் தேவனுக்கும், தேவத் திட்டங்களுக்கும் மாறாகச் செயல்ப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தேவன் 6 நாட்களில் உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் படைத்து 7ம் நாளில் ஓய்ந்திருந்தார் என்று காணப்படுகிறது. (ஆதி.1:3-24,  2:2-3)

ஆதியிலே தேவன்

March 28th, 2012 by Kesaran

கிறிஸ்து அனாதியானவர், அவரைக் குறித்து ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாய் இருந்தது என்றும், சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் அவராலே அல்லாமல் உண்டாகவில்லை என்றும் வாசிக்கிறோம். தேவன் சருவ சிருஷ்டிகர் (யோ.1:1,3)

பரிசுத்த வேதாகமம்

March 27th, 2012 by Kesaran

தேவனின் திட்டங்களையும், அத்திட்டங்களின் செயல்பாடுகளையும் பரிசுத்த வேதாகமம் விளக்குகிறது. பரிசுத்த வேதாகமம் 40 பேரால் 1600 வருடங்களில் எழுதப்பட்டது. ஆனால், அது பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் எழுதப்பட்டபடியால் அதில் அடங்கியுள்ள 66 புத்தகங்களும் ஒரே ஆளால் எழுதப்பட்டதுபோல ஒவ்வொன்றும் தொடர்புடையவைகளாகவும், ஒரே இலக்கை கொண்டவையாகவும் காணப்படுகின்றன.

முதல் புத்தகமான ஆதியாகமத்தில் முதல் மனிதன் விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசித்ததினால் ஜீவவிருட்சத்தின் கனியை ஏதேனில் இழந்துபோகிறான். கடைசிப் புத்தகமான வெளிப்படுத்தலில் மீட்கப்பட்ட மனிதன் அதைப் புதிய எருசலேமில் திரும்பப் பெற்றுக் கொள்கிறான்.

அரராத் மலை

March 23rd, 2012 by Kesaran

ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.  (ஆதி 8:4)

 

ஆசியாவின் 7 சபைகள்

March 22nd, 2012 by Kesaran

ஆவியின் கனி

March 9th, 2012 by Webmaster

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.  (கலா.5:22-23)

 

(1) அன்பு

இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது. இவைகளில் அன்பே பெரியது. (1.கொரி.13)

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.  ( 2.தீமோ.2:22)

கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.  (எபேசி.5:2)

(2) சந்தோஷம்

அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள். இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூர்ந்து,  (1.பேது.1.8)

கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள். உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். ( 1.பேது.3:15)

(3) சமாதானம்

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.  ( 2.தீமோ.2:22)

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.  (எபி.12:14)

(4) நீடியபொறுமை

அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும, உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம். (ரோ.5:3-4)

அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள். அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் காக்கப்பட்டார்கள். ( 1.பேது.3:20)

(5)  தயவு

பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். அன்றியும், உன் சத்துருபசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு.  நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு. (ரோ.12.19-21)

(6) நற்குணம்

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.  (2.தீமோ.2:22)

என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன்.  (ரோ.15:14)

(7)  விசுவாசம்

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.  (2.தீமோ.2:22)

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். ( எபி.11.6)

(8)  சாந்தம்

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.  (மத்.5:5)

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்குப் பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,  (1.கொரி.13:4)

(9) இச்சையடக்கம்  

அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள். சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது. பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.  (எபேசி.4:22-27)

இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.  ( 1.பேது.4:1)

இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது  என்றார்.   (மத்.17:21)

சபை கிறிஸ்துவின் சரீரம் (எபேசி.1:23)

February 9th, 2012 by Kesaran

மனிதன் தன்னை வெளிப்படுத்த உதவும் சாதனம் அவன் சரீரமே. அவ்வாறே தன்னை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த தேவன் தெரிந்துகொண்ட சாதனம் கிறிஸ்துவின் சரீரமே. ஒரு விசுவாசி இவ்வுண்மையைச் சரியாகப் புரிந்துகொண்டானேயாகில், சபையின் முக்கியத்துவத்தை ஒருபோதும் தரம் தாழ்தி; எண்ணவே மாட்டான்.  அது மட்டுமல்ல தன்னையே முற்றிலும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு ஒப்புக்கொடுத்தும் விடுவான்.

1.கொரி.11:3 – கிறிஸ்து தலை

எபேசி.1:23 – எல்லாவற்றிற்கும் மேலான தலை

எபேசி.4:15 – அவருக்குள் வளர்கிறோம்

எபேசி.5:23 – கிறிஸ்து சபைக்கு தலை

கொலோ.1:18 – அவரே சரீரத்திற்குத் தலையானவர்

எபேசி.4:4 – ஒரே சரீரம் ஒரே ஆவி

கொலோ.3:15 – ஒரே சரீரமாக அழைப்பு

ரோ.12:4-5 – கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரம்