கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும்

May 21st, 2010 by sarav

கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும்

 

யுரோப் தனது பதினைந்தாம் நூற்றாண்டில் ஒரு மிக பெரிய வரலாற்று நாயகனை உண்டாக்க போகிறது என்பதை தாமதமாக உணர்ந்தது.அது ப்ரோடஸ்தண்டை உருவாக்கிய மார்ட்டின்லூதர் அவர்கள் தான்.கர்த்தர் இவர் மூலமாக விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற சத்தியத்தை திரும்பவும் நிலைநாட்டினார்.நான் இந்த வரலாற்று படத்தை சில தினங்களக்கு முன் பார்த்தேன் அதில் ஒரு நிகழ்வில் மார்டின் லூதரின் குரு அவர்கள் பல மரித்த பரிசுத்தவான்களின் உடமைகளையும் அவர்களின் சிலைகளையும் கண்பித்து இவைகளின் மூலம் ஒருவர் தேவபக்தியை பெருக்கலாம் என்று சொல்லுவார்.அதற்க்கு மார்டின்லூதர் இல்லை என்று மறுப்பார்.குரு கோபம் அடைந்தவராய் ,இவைகளின் மூலம் (சிலைகள் )ஒருவன் தேவபக்தியை அடைய முடியாவிட்டால் வேறு எதினால் அடையமுடியும் என்று கேட்பார்.அதற்கு மார்டின்லுதர் கிறிஸ்துவே என்று ஆணித்தரமாக வாதிடுவார்.

என்ன இவன் கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும் என்று தலைப்பை வைத்து மார்டின் லூதர் பற்றி ஏதோ எழுதுகிறாரே என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் ஆண்டவர், மார்டின் மூலமாக திரும்பவும் நிலைநாட்டிய சத்தியம்(விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்) தான் இன்று கிருத்தவம் மற்ற மார்கங்களிருந்து வேறுபடுகிறது என்று சொல்ல விரும்புகிறேன்.

மற்ற மார்க்கங்களிருந்து கிருத்துவம் எப்படி வேறுபடுகின்றது?
*கிருபையும் கிரியையும்
பிற மார்க்கங்களில் கிரியையினால் மோட்சம் அடையலாம் என்று அந்த மார்க்கங்களின் உபதேசியார் சொல்லுவதை நாம் பல முறை கேட்டிருக்கலாம்.அதாவது நாம் தானம் தர்மம் செய்வதினாலும் நாம் உடலை பலவித கட்டுபாட்டில் ஈடு படுத்துவதினாலும் மோட்சம் அல்லது பரலோகம் செல்லலாம் என்கின்றனர்.ஆனால் அடிப்படையான ஒரு உண்மையை அறியாமல் உள்ளனர்.அது எதுவெனில் நல்ல மரம் நல்ல கனியை தானாக தருகின்றது விஷமரம் விஷ கனிகளை தருகின்றது.நாம் நல்ல மரமென்றால்
நல்ல கனிகள் மாத்திரம் வர வேண்டுமே தவிர நல்லது அல்லாதவைகள் எப்படி வருகிறது என்ற கேள்வி எழும்புகிறது.ஆதாம் விழுகையினாலே தான் நாம் எல்லாரும் இந்த பாவ சரீரத்தினால் அவதிபடுகிறோம் என்று பைபிள் காண்பிக்கிறது.அதினால் தான் பவுலும் ரோமர் ஏழாம் அதிகாரத்தில் பின்வருமாறு எழுதுகிறார்

நன்மை செய்யும் விருப்பம் எனக்கு இருந்தாலும் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை என்றும் பாவ சரீரத்தில் உள்ள பாவ பிரமாணம் என்னை அடிமைபடுத்துகின்றது என்றும் சொல்கிறார்.

மற்ற மார்க்கங்களில் இந்த பாவ சுபாவத்தை பற்றி அதிகம் பேச மாட்டார்கள் நம்மால் நல்லது செய்ய முடியம் அதினால் நாம் பரலோகம் செல்லலாம் என்று போதிப்பர்.ஆனால் அந்த நல்லதிலும் ஒரு சுய நலம் உண்டு என்றும்  கறைகள் ஏராளம்  என்பதை பார்க்க அவர்களால் முடிவதில்லை.ஏனெனில் இந்த உலகத்தின் அதிபதியானவன் அவர்கள் மனக்கண்களை குருடாக்கி உள்ளான்.
இந்த பாவ சுபாவத்தை குறித்து பைபிளின் சில வசனங்களை பார்ப்போம்.
யோபு 14 அதிகாரத்தில் 4 வசனம்
அசுத்தமானதிளிருந்து சுத்தமானது பிறப்பிக்கிறவன் உண்டோ?
யோபு 15 அதிகாரம் 14 வசனம்
மனுஷனானவன் பரிசுத்தமாக இருப்பதும் பெண்ணிடம் பிறந்தவன் நீதிமானா இருப்பதும் எப்படி?

இன்னும் பல வசனங்கள் பைபிளில் உண்டு.இப்படி நாம் வசனங்கள் மூலமாகவும் நாம் சுய அனுபவத்திலும் மனுஷன் பிறப்பில் இருந்தே கறை  உள்ளவன் என்பதை அறிகிறோம்.இவைகள் மற்ற மார்க்கங்களில் சொல்லபடவில்லை.

இன்றும் பல கிருத்துவர்கள் கூட நம்முடைய பாவ சுபாவத்தை மறந்து பைபிளை படிப்பதினாலும் சபைக்கு தவறாமல் செல்லுவதினாலும் தசமபாகம் கொடுக்கிரதினாலும் தானம் தர்மம் பன்னுவதினாலும் பரலோகம் அடையலாம் என்று எண்ணுகின்றனர் மாறாக இந்த நற்கிரியைகல்லாம் செய்வதற்கு ஆதி முதல் தேவன் நம்மை உண்டாக்கினார் என்றும் இந்த நற்கிரியைகளில் நடப்பதற்கு அவைகள் முன்னதாகவே ஆயத்தம் செய்யப்பட்டது என்றும் இவைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால்(கிருபையினால் ) வருகின்ற பலன்கள் என்பதை அறியாமல் உள்ளனர்.

Note: Dear brothers and sisters,the above post is my conviction based upon word of God.But if you have any contradiction with my writtings please let me know so that i can correct my understanding.

sarav

 

உச்சநீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு

May 21st, 2010 by sarav

உச்சநீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு

 குஷ்பூவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிபதி ஒருவர் திருமணத்திற்கு முன்

 உடலுறவு கொள்வதில் தவறில்லை என்பது போல பேசி உள்ளார்.இன்று மிகவும்

 பிரலமான பேச்சு என்னவென்றால் காலத்திற்கு ஏற்ப நாம் மாறனும் என்பதே.

 அதற்காக காலம் தொட்டே மாறாத நெறிகள் எல்லாம் மாறனுமா? மனசாட்சி

 என்ற ஒன்று இல்லையா ? அதனிடும் போய் கேளுங்கள் அது உங்களுக்கு

 அறிவிக்கும் திருமனத்திற்கு முன் உடலுறவு தவறு என்று. இன்று அவரவர்

 தங்களுக்கு என்று ஒரு நீதியை ஏன் எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே

 செய்வதினாலே இப்போது இந்த குழப்பம். ஒரு சில காரியங்களை தேவன்

 மனிதனுடைய அறியாமையின் நிமித்தம் மன்னிப்பார்.ஆனால்இந்த வகையான

 பாவங்கள் கே மற்றும் லெஸ்பியன் போன்ற பாவங்களுக்கு இட்டு செல்வதால்

 தேவ கோபாக்கினை இந்த பூமியின் மேல் சீக்கிரமாக கொண்டு வரும்.

அழைப்பை அலட்சியப்படுத்தாதிருங்கள்

May 19th, 2010 by Webmaster

ignore.jpg

கர்த்தர் தமது பணிக்கு உங்களை

அழைக்கும்போது மந்திரிப் பதவியே

உங்கள் முன் மண்டியிட்டு நின்றாலும்

அதற்கு அடிபணிந்து உங்களது

மாண்புமிகு மதிப்பைக் குறைத்துக்கொள்ளாதேயுங்கள்.

தேவதூதர்களும் செய்யக்
காத்திருந்த சுவிசேஷப் பணி
உங்களைத் தேடி வரும்போது
அதை ஒரு பெரும் சிலாக்கியமாக
நினைத்து உங்கள் வாழ்க்கையை
தேவனுக்கு அர்ப்பணித்து
முன்னேறுங்கள். அவருடைய பயிற்சி
உலகத்தைக் கலக்கும் மனிதர்களாக
பதினொருவரை மாற்றியது. இன்னும்
அத்தகைய சீடர்களுக்காய் உலகம்
காத்து கிடக்கிறது.

கோபத்தை கையாளுதல்

April 5th, 2009 by Suja

கோபத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள்:

 

1). கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும்.

2). பாம்பைப் போல படம் எடுத்து சீறலாம், கொத்தத்தான் கூடாது.

3). கோபம் கொள்ளாதவன் சூடு சொரணையற்றவன்

4). பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஓருவன் கோபப்படவில்லையென்றால், அவன் குற்றமுள்ளவன் என்றே அர்த்தம்.

5). கோபப்படவில்லையென்றால், அதிகாரத்தை செயல்படுத்தமுடியாது.

6). கோபப்படுகிறவனைத்தான், சக்திவாய்ந்தவன் என்று பிறர் எண்ணுகிறார்கள்.

7). கோபப்படாவிட்டால், நம்மை இளிச்சவாயன் என்று எண்ணி எல்லாரும்

ஏமாற்றிவிடுவார்கள்.

கோபப்படுவதில் தவறுகள்:

 

1). தவறான காரணம் : அநியாயத்துக்காகக் கோபப்படல் (மத் 5:22)

2). தவறாள விளைவு : கோபத்தினால் பாவஞ்செய்தல் (எபே 4:26)

3). தவறான கால அளவு : முற்கோபம், சீக்கிரமாக கோபப்படல் (யாக் 1:19) 

விளைவுகள் : 

1). சண்டை (நீதி 30:33)

2). வாக்குத்தத்தமான ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கத் தவறுதல் (யாத் 32:19, உபா 32: 50-52)

3). சாபம் (ஆதி 49:7)

4). பிரிவினை (அப் 15:39)

5). சிதறிப்போதல் (ஆதி 49:7)

6). பிசாசால் ஆட்கொள்ளப்படல் (எபே 4:26-27)

7). தனிமைப்படுத்தப்படல் (அப் 15:39) 

காரணங்கள்:

 

1). ஏமாற்றப்படுதல் (ஆதி 27:42-45)

2). புகாருக்கு உள்ளாகுதல் (ஆதி 30 :1-2)

3). பொறாமைப்படுதல் (லூக் 15:25-28)

4). கடிந்துகொள்ளப்படுதல் , குறை சுட்டிக்காட்டப்படுதல் (2நாளா 26:18-29)

5). கீழ்ப்படிய வேண்டியவரின் கீழ்ப்படியாமை (எஸ் 1:12)

6). மதிக்கப்படாத நிலை (எஸ்3:5)

7). மாமிசம் கிரியை செய்தல் (கலா 5:19-20)

8). பெற்றோர், தலைவரின் செய்கை (எபே 6:4)

9). அங்கீகரிக்கப்படாத நிலை (ஆதி 4:5-6)

10). கடுச்சொற்கள் (நீதி 15:1) 

தீர்வுகள்:

 

1). மெதுவான, நிதானமான பேச்சு ( நீதி 15:1)

2). கர்த்தரை நோக்கி அமர்ந்து, காத்திருத்தல் (சங் 37:7-9)

3). படுக்கையில், இருதயத்தில் பேசுதல் (சங் 4:4)

4). தடனர்க்கமின்றி, எல்லா இடங்களிலும் ஜெபித்தல் (1தீமோ 2:8)

5). கோபக்காரரோடு ஐக்கியம் கொள்ளாதிருத்தல் (நீதி 22:24-25)

6). வருமுன் காக்க, சாந்தகுணத்தைப் பெறுதல் (யாக் 3:13-17)

7). வந்தபின் கட்டுப்படுத்த, விவேகத்தைப் பெறுதல் (நீதி 19:11)

நன்றி :யுத்தசத்தம்

 

April 5th, 2009 by Suja

தாழ்வில் நம்மை நினைத்தவர்!

February 25th, 2009 by Suja

“நம் தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது” (சங் 136:23) 

தேவன் உன்னதமானவர். உன்னத பதவிக்குத்தகுதியானவர்.  ஆனால் அவர் தாழ்ச்சியில் இருப்போரை நினைப்பவர். தாழ்மைப்படும் உள்ளங்களுக்குச் சொந்தக்காரர். உயர்த்தும் இதயங்களின் முகடுகளை மிதிக்கும் அவர், தாழ்த்தும் இருதயங்களில் மென்பாதங்களால் நடந்து வருபவர்.

தாழ்வில் இருந்த மனுக்குலத்துக்காக மீட்பின் ஐசுவரியத்துடன் நமது மீட்பர் கடந்து வந்தார். நரக வாசலில் இருந்த நம்மை மீட்டெடுத்தார்.  உரிமை கொண்டாடுகிறார். உறவினரானார்.

இன்று வசதி படைத்தோரை உறவு கொண்டாடும் உலகோர் உண்டு. வறியோரைக் குறித்து வெட்கப்படவும் செய்வர். ஆனால் தேவனோ மிகுந்த சொல்வந்தர். அனைத்து சிருஷ்டிகளுக்கும் ஆண்டவர். ஆனால் ஏழைகளையும் திக்கற்றோரையும் விசாரிக்கிறவர். நீதிமானின் குடிசைகளில் வாஞ்சையுடன் வாசம் பண்ணுபவர்.

தாழ்வின் நம்மை நினைத்தஆண்டவரை நமது இளைப்பாறுதலின் நாட்களில் மறப்பதிலும் கொடிய துரோகம் வேறில்லை. இஸ்ரவேல் வீணாய்த துரோகம் செய்து சிறதியது. நாமும் அவ்வாறு செய்வோமா? நமக்காகக் காயப்பட்ட பாதங்களை முத்தம் செய்யாது நரக வழி விரையும் சிற்றின்பத்தின் பாதங்களைப் பின்தொடருவோமா? தேவனால் ஒருவர் நினைக்கப்பட்டபின் அவர் தாழ்ந்தவராக இருப்பாரோ?

தடைகள் !!!

February 14th, 2009 by Webmaster

(1) நாம் எல்லாரையும் மன்னித்திருக்கிறோமா? நம் இருதயங்களில் ஏதாவது கெட்ட எண்ணம், வன்கண், பகை, விரோதம் இருக்கிறதா? நாம் எரிச்சல் உள்ளவர்களாகவும், ஒப்புரவாக மனமற்றவர்களாகவும் இருக்கிறோமா?

(2) நாம் கோபப்படுகிறோமா? நம் உள்ளத்தில் ஏதேனும் கொதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறதா? நாம் இன்னும் கோபப்பட்டுக்கொண்டே இருக்கிறோமா? கடுங்கோபத்திற்கு நாம் அடிக்கடி ஆளாகிறோமா?

(3) நமக்குள் பொறாமையின் சின்னங்கள் காணப்படுகின்றனவா? அடுத்தவர்கள் புகழப்படும்போது, அது நமக்கு சஞ்சலத்தை உண்டாக்குகிறதா? நம்மைவிட அதிகமாய் nஐபிக்கவும், பேசவும் , செய்யவும்கூடியவர்களை நாம் பார்க்கும்போது அவர்கள்மேல் பொறாமைகொள்கிறோமா?

(4) நாம் பொறுமையற்றவர்களாயும், எளிதில் எரிச்சலடைகிறவர்களாயும் இருக்கிறோமா? சிறிய காரியம்கூட நமக்குத் தொந்தரவாயும், வெறுப்பாயும் இருக்கிறதா? அல்லது எவ்வித சந்தர்ப்பத்திலும் நாம் பொறுமையாயும், சந்தோசமாயும் , குழப்பமில்லாமலும் இருக்கிறோமா?

(5) நாம் எளிதில் வருத்தமடைகிறோமா? பிறர் நம்மைக் கண்டு பேசாமல் போகிறதை நாம் பார்க்கும்போது, அது நமக்கு வேதனையைத் தருகிறதா? மற்றவர்கள் கனப்படுத்தப்பட்டும், நாம் அசட்டை செய்யப்பட்டும் இருக்கும் தருணங்களில் நமக்குள் எந்த உணர்ச்சி ஏற்படுகிறது?

(6) நமது இருதயங்களில் ஏதேனும் பெருமை உண்டா? நாம் கர்வங்கொள்ளுகிறோமா? நமது அந்தஸ்த்தைக் குறித்தும் தாலந்தைக் குறித்தும் பெருமிதங்கொள்ளுகிறோமா?

(7) நாம் உண்மையற்றவர்களாக இருந்திருக்கிறோமா? நமது ஊழியம் குறைகூறப்படாத நிலமையில் இருக்கிறதா? நாம் யோக்கியமாய் நடக்கிறோமா?

(8) நாம வீண் பேச்சுக்காரராயிருக்கிறோமா? மற்றவர்களின் நடத்தையைப்பற்றி அவதூறாய் பேசுகிறோமா? பிறர் காரியங்களில் அனாவசியமாகத் தலையிடவும், கொள் சொல்லுகிறவர்களாகவும் இருக்கிறோமா?

(9) நாம் பிறரை அன்பில்லாமலும், கடினமாகவும், கொடுரமாகவும் நியாயந்தீர்க்கிறோமா? நாம் எப்பொழுதும் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களாயும், பிறருடைய சிறு தவறுதலையும் பெரிதெனப் பேசுகிறவர்களாயும் இருக்கிறோமா?

(10) நாம் தேவனை வஞ்சிக்கிறோமா? அவருக்குரிய நேரத்தை நாம் திருடி இருக்கிறோமா? அவருக்குக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடாமல் வைத்திருக்கிறோமா?

(11) நாம் உலகத்தாரைப்போல் ஐPவிக்கிறோமா? இவ்வுலக ஆடம்பரங்களையும், அதன் ஆசை இச்சைகளையும் நேசிக்கிறோமா?

(12) நாம் களவு செய்திருக்கிறோமா? இவ்வுலக ஆடம்பரங்களையும், அதன் ஆசை இச்சைகளையும் நேசிக்கிறோமா?

(13) நம் உள்ளத்தில் பிறர்மேல் கசப்பு இருக்கிறதா? நமது இருதயங்களில் கசப்பையும், பகையையும் பேணி வைத்திருக்கிறோமா?

(14) நமது ஐPவியம் மாயையினாலும், அற்பத்தனத்தினாலும் நிறைந்திருக்கிறதா? நம் நடக்கை அருவருக்கப்படத்தக்க நிலையில் இருக்கிறதா? உலகம் நம்மைக் கண்டு தன் பக்கம் நம்மைச் சேர்த்திருக்கிறதா?

(15) நாம் யாருக்காவது கெடுதல் செய்து, அதற்குப் பதிலீடு செய்யாமல் இருக்கிறோமா? அல்லது சகேயுவின் சிந்தை நமக்குள் வந்திருக்கிறதா? தேவன் நமக்கு வெளிப்படுத்திக் காட்டின அநேக சிறு காரியங்களை நாம் சரிப்படுத்தியிருக்கிறோமா?

(16) நாம் கவலையுள்ளவர்களாகவும், வியாகுலம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறோமா? நமது இகபரத் தேவைகளுக்காக நாம் கடவுளிடம் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோமா? நாம் நாளைக்காகக் கவலைப்படுகிறவர்களாயிருக்கிறோமா?

(17) மாம்ச இச்சைக்கு நாம் இடங்கொடுத்திருக்கிறோமா? நம் உள்ளத்தில் அசுத்தமான எண்ணங்கள் குடிகொண்டிருக்கின்றனவா?

(18) நம் வார்த்தையில் உண்மை அல்லது சத்தியம் காணப்படுகிறதா? அல்லது ஒன்றைப் பத்தாகப் பேசி துரும்பைத் தூணாக்குகிறோமா? நாம் பொய் பேசியிருக்கிறோமா?

(19) அவிசுவாசமாகிய பாவத்திற்கு நாம் இடங்கொடுத்திருக்கிறோமா? கர்த்தர் நமக்குச் செய்த எண்ணிறந்த நன்மைகளை நாம் மறந்தவர்களாய் இன்னும் அவருடைய வாக்குத்தத்தங்களை விசவாசிக்க மறுக்கிறோமா?

(20) nஐபம் செய்யாமை என்ற பாவத்திற்கு நாம் ஆளாயிருக்கிறோமா? நாம் பரிந்து பேசுகிறவர்களாயிருக்கிறோமா? நாம் nஐபிக்கிறோமா? நமது முழங்காலில் நின்று எத்தனை தடவை nஐபித்திருக்கிறோம்? நமது ஐPவியம் பல வேலைகளினால் நிறைந்திருக்கிறபடியால் , அங்கு nஐபத்திற்கு இடமில்லையா?

(21) நாம் வேதவாசிப்பை அசட்டை செய்திருக்கிறோமா? தினமும் எத்தனை அதிகாரங்பகள் வாசிக்கிறோம்? நாம் வேதமாணாக்கரா? வேதத்திலிருந்து ஆதாரங்களை நாம் எடுக்கிறோமா?

(22) நாம் பகிரங்கமாய் கிறிஸ்துவை வெளிப்படுத்தத் தவறினோமா? இயேசுநாதரைப் பற்றி நாம் பிறரிடம் கூற வெட்கப்படுகிறோமா? உலகத்தார் மத்தியில் நாம் இருக்கையில் அவரைப் பற்றிப் பேசாமல் வாயை மூடுகிறோமா? நாம் தினமும் சாட்சி கொடுத்து வருகிறோமா?

(23) ஆத்துமாக்களையேபற்றிய பாரம் நிறைந்தவர்களாய் இருக்கிறோமா? கெட்டுப்போன ஆத்துமாக்களின்மேல் அன்புள்ளவர்களாயிருக்கிறோமா? அழிந்துபோகும் ஆத்துமாக்களுக்காகப் பரிந்து பேசும் சிந்தை ஏதேனும் நம்மில் உண்டா?

நாம் யாருக்காக வாழ்கிறோம்

December 29th, 2008 by Suja

நல்வாழ்வு தியாகம் நிறைந்தது. யாரோ ஒரு சிலருக்காகவே அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவை வாழ்க்கைப் பற்றிய சாதாரண பார்வைகள்.

கிறிஸ்தவர்கள், அதாவது விசுவாசிகள் யாருக்காக வாழ்கின்றார்கள்?

யாருக்காக வாழவேண்டும்?

சந்தேகமில்லாமல் உரைக்க முடியும்……. கிறிஸ்துவுக்காக! 

ஆனால் கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்பதைவிட சரியான பதில் வேறு உண்டு.

 கிறிஸ்துவில் வாழவேண்டும்………………… கிறிஸ்து என்னில் வாழ வேண்டும். (கலா 2:19-20)

 இவ்வேதத பகுதி சுட்டிக்காட்டுவது எது?

கிறிஸ்தவர்கள் சக மனிதர்களுக்காக வாழவேண்டும், சத்துருவுக்காக வாழவேண்டும் என்பதை அல்லவா………..?

தேவனைப் பகைப்போரை தேவன் நேசிக்கிறார். இது தேவ பண்பு.

எனவேதான் தேவனில்லை என்போரும், தேவப் பணியை தடைசெய்வோரும், விக்கிரக ஆராதனைக்காரரும், தேவபிள்ளைகளைத் துன்புறுத்துவோரும் உலகில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இல்லையேல் சாப்பலாகி இருப்பரே……………

நமக்கு தேவனிடும் கட்டளை அதுவே………..

தீமையைச் சகித்துக் கொண்டு நன்மையை செய்து வாழ்ந்து மடியுங்கள். மனிதராக இருந்துகொண்டே தேவ பண்பை வெளிப்படுத்தும் தேவபிள்ளைகளாக வாழ்ந்து முடியுங்கள்……

பகைப்போரைச் சபிக்கும் நாம், பகைப்போரை நேசிக்கவேண்டுமா? இந்தியாவுக்காக ஜெபிக்கும் நாம் பிற மதவெறியர்களை வெறுக்க முடியுமா?

எம்மை வியப்பிலாழ்த்தும் இன்னொரு காரியமும் உண்டு.

தாங்கள் இரட்சிக்கப்பட்ட வாழ்கிறோம் என்று கூறியபடி அயலகத்தாரை வெறுத்து ஜெபதப ஆர்ப்பாட்டம் செய்யும் விசுவாசிகள்…..

நன்றி : சொல்லோவிய வேதாகமம்

சிம்சோனின் வீழ்ச்சிக்கு காரணங்கள்

December 28th, 2008 by Webmaster

Samson 

(1) அவன் (நசரேயன்) திம்னாத்தின் திராட்சத்தோட்டம் வழியாக சென்றது. (நியா.14:5, எண்.6:1-8)

(2) அவன் பிரேதத்தைத் தொட்டது (நியா.14:8-9,  15:15)

(செத்த சிங்கத்தின் உடலுக்குள் தேன் எடுத்தது, மூப்பது பேரை கொன்று அவர்கள் வஸ்திரத்தை உரிந்தும், கழுதையின் பச்சைத்தாடை எலும்பை எடுத்ததும்)

(3) வேசியோடுள்ள அவனுடைய உறவாட்டம் (நியா.16:1-4)

(கண்களின் இச்சை மாம்சத்தின் இச்சை முதலியன) 

(4) அவன் விளையாட்டுப்போல பொய் சொல்லி வந்தது (நியா.16:6-7,10-11,13)

 (5) சவரகன் கத்தி தலையில்பட்டு, அவன் ஏழு ஐடைகளும் சிரைக்கப்பட்டது (நியா.16:19)

வேதாகமத்தில் வரும் தேவாலயங்கள்

November 9th, 2008 by Suja

வேதாகமத்தில் பல தேவாலயங்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆயிரம் ஆட்சி ஆண்டு தேவாலயம் இதில் இறுதியானது.

1). மோசேயின் ஆசரிப்புக் கூடாரம் (யாத் 40 ) - சுமார் கி.மு 1500-1000)

2). சாலொமோனின் தேவாலயம் (1இரா8)- சுமார் கி.மு 1000-585)

3). செருபாபேலின் தேவாலயம் (எஸ்றா 6) - சுமார் கி.மு 516-கி.பி70)

(பின்து ஏரோதால் புதுப்பிக்கப்பட்டது. யோவான்2)

4). கிறிஸ்துவின் சரீரமாகிய தேவாலயம் (யோவான் 2:21) - சுமார் கி.மு4- கி.பி 30)

5). திருச்சபையாகிய தேவாலயம் ( அப்2, 1தெச 4)

        *உலகளாவிய திருச்சபை (எசே2:21)

         *உள்ளுர் திருச்சபை (1கொரி 3:16-17)

        *தனி விசுவாசியின் சரீரம் (1கொரி6:19)

6). உபத்திரவ கால தேவாலயம் (வெளி11)

7). ஆயிரம் ஆண்டு ஆட்சிகால தேவாலயம் (ஏசா 2:3,60:13, எசே 40-48)

(நன்றி:சொல்லோவிய வேதாகமம்)

தேவனுக்குத் தூரமாக…..

November 9th, 2008 by Suja

 வாழ்க்கை முறையும் தேவ பக்தியும் பின்னிப் பிணைந்தவை. ஏசாயா இதனைத் தெளிவாக விளக்குகிறார். பல நேரங்களிலும் தேவன் நமது வாழ்வில் செயல்பட இடையூறாக இருப்பவை நமது அக்கிரமங்களாகும். தேவன் நம்மை விட்டுத் தூரம் போவதில்லை. நாம்தான் தேவனை விட்டுத் தூரம் போகிறோம்.

* கொடுமை, கொலை  (ஏசா 59:3)

* பொய் (ஏசா 59:3)

* நியாயக் கேடுகள் (ஏசா59:3)

* வழக்குகள், நீதி, சத்தியத்தைத் திரித்தல் (ஏசா 59:4,8)

* தீய திட்டங்கள், நினைவுகள் (ஏசா 59:4, 7)

* பிறரிடம் தீமை பரவக் காரணமாகுதல் (ஏசா 59:5.6)

போன்றவற்றை வைத்துக் கொண்டு தேவனிடம் நெருக்கமாக இருப்பது எப்படி? எனவே இவற்றைக் களைந்துவிட்டு வருவோரை ஆசீர்வதிக்க தேவன் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்.

(நன்றி: சொல்லோவிய வேதாகமம்)

எல்லாம் இயேசுவே

November 9th, 2008 by Suja

அவரது ஆசீர்வாதங்கள் அளவிடற்கரியன

சங்கீதம் 103:11-13

1).  உயரம் : பூமிக்கு வானம் உயரமானதுபோல அவரது கிருபை உயரமானது.

2). அகலம் : மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே உள்ள  தூரம் போல அவரது மன்னிப்பு அகலமானது.

3). ஆழம் : தந்தைப் பிள்ளைகளுக்கு இரங்குவது போன்ற நிலையில் அவரது இரக்கம் ஆழமானது.

அவர் நம்வாழ்வில் செயலாற்றும் விதம் ஆச்சரியமானவை

1). மன்னிக்கிறவர் - நீதிமன்ற அறை அனுபவம் (சங் 103:3)

2). குணமாக்குகிறவர் - மருத்துவ மனை அனுபவம் (சங் 103:3)

3). விடுவிக்கிறவர் - அடிமைச் சற்தை அனுபவம் (சங் 103:4)

4). முடிசூட்டுகிறவர் - அலங்கார அறை அனுபவம் (சங் 103:4)

5). திருப்தியாக்குபவர் - விருந்துச் சாலை அனுபவம் (சங் 103:5)

 அவர் நமக்காக இருக்கும் நிலைகள் ஆராயத்தக்கவை

1). தந்தையாக - மென்மையாகச் செயற்படுகிறவர் (சங்103:13)

2). சிருஷ்டிகராக - முற்றும் அறிந்திருக்கிறவர் (சங்103:14)

3). உடன்படிக்கையின் தேவனாக - தமது கடமையைக் காக்கிறவர் (சங்103:17-18)

4). தண்டிக்கும் ஆசிரியனாக - தண்டித்துத் திருத்துகிறவர் (சங்103:9)

5). நீதிபதியாக - ஒடுக்கப்படுதலில் விடுதலையளிக்கிறவர் (சங் 103:6)

6). அரசராக - நித்தியசிங்காசனத்தில் இருந்து அனைத்தையும் கட்டுப்படுத்துபவர் (சங் 103:19)

(நன்றி:சொல்லோவிய வேதாகமம்)

யார் இந்த எலேயாசார் ?

October 29th, 2008 by Webmaster

(1) எலேயாசார் - ஆரோனின் மூன்றாம் குமாரன்

(யாத்.6:23,  எண்.26.60))

 (2) எலேயாசார் - பினெகாசின் குமாரன்

(எஸ்.8:33)

(3) எலேயாசார் - தாவீதின் இரண்டாம் பராக்கிரமசாலி. தோதாவின் குமாரன்

(2.சாமு.23:9,  1.நாளா.11:12)

(4) எலேயாசார் - மகேலியின் குமாரன்

(1.நாளா.23:21)

 (5) எலேயாசார்  - அபினதாபின் குமாரன்

(1.சாமு.7:1))

(6) எலேயாசார்  - நெகேமியாவோடிருந்த ஆசாரியர்களில் ஒருவன்

(நெகே.12:42)

பிலிப்புவைக் குறித்த ஏழு காரியங்கள்

October 3rd, 2008 by Webmaster

Philip 

(1) எருசலேம் சபையில் பிலிப்பு (அப்.6:5)

(2) சமாரியாவில் பிலிப்பு (அப்.8:5-8)

(3) வனாந்தர வழியில் பிலிப்பு (அப்.8:26)

(4) இரதத்தில் பிலிப்பு (அப்.8:29,31)

(5) தண்ணீரில் பிலிப்பு (அப்.8:38)

(6) ஆவியானவரின் கையில் பிலிப்பு (அப்.8:39)

(7) செசரியாவில் பிலிப்பு (அப்.21:8-10)

ஸ்தேவான்

September 30th, 2008 by Webmaster

(அப்.6:1-15)

stephanus

(1) தெரிந்தெடுக்கப்பட்டவன் (அப்.6:3,5)

(2) நற்சாட்சி பெற்றவன் (அப்.6:3,5)

(3) விசுவாசத்தால் நிறைந்தவன் (அப்.6:8)

(4) பரிசுத்த ஆவியைப் பெற்றவன் (அப்.6:3)

(5) வல்லமையால் நிறைந்தவன் (அப்.6:8)

(6) ஞானத்தால் நிறைந்தவன் (அப்.6:3,10)

(7) உத்தம பிரசங்கி (அப்.7:1-53)

(8) ஜெபம்பண்ணுகிறவன் (அப்.7:59-60)

(9) திவ்ய தரிசனமும் நம்பிக்கையுமுள்ளவன் (அப்.7:55-56)

(10) அவன் முகம் தேவதூதன் முகம்போல மகிமையாயிருந்தது (அப்.6.15)

(11)கிறிஸ்துவுக்காக முதல் இரத்தசாட்சி (அப்.7:57-60)

(12) தேவபக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணினார்கள் (அப்.8:2)

வேதாகமத்தில் வரும் சில போதகர்கள்

August 31st, 2008 by Suja

01). மோசே - வேதப்பிரமாணத்தைப் போதித்தார் (உபா 4:5).

02). பெசலெயேல் அகோலியாய் - கலையறிவு மிக்க இவர்கள் ஆசரிப்புக் கூடாரப் பணியில் போதித்து வழி நடத்தினர் (யாத் 35:30-35).

03). சாமுவேல் - இஸ்ரவேல் மக்களிடம் உத்தமமாக நடக்க  அறிவுரை கூறினார் (1சாமு 12:23).

04). தாவீது - சாலொமோனுக்கு தேவாலயப் பணி பற்றி அறிவுரை கூறினார் (1நாளா 28:9-21)

05). சாலொமோன் - ஞான அறிவுரைகளை வழங்கினார் (1இரா 4:29-34).

06). எஸ்றா - வேதபிரமாணத்தைத் தெளிவாகப் போதித்தார் (எஸ் 7:10)

07). இயேசு - ரபியாக விளங்கி நற்போதனைகளை வழங்கினார்.

08). பர்னபாஸ் - அந்தியோக்கியா சபையில் போதகப் பணி நடத்தினார் (அப் 13:1).

09). கமாலியேல் - சவுலின் குருவாக விளங்கிய நியாயப்பிரமாண அறிஞர் ( அப் 22:3).

10). பவுல் -  சிறந்த வேதாகம போதக அறிஞர் (அப் 13:1, எபே 19:9).

11). ஆக்கில்லா, பிரிஸ்கில்லா - அப்பொல்லோவுக்கு அறிவுரை வழங்கினர் (அப் 18:26).

12). அப்பொல்லோ - வல்லமையுள்ள சுவிசேஷ போதகர் (அப் 18:24-26). 

13). தீமோத்தேயு - திருச்சபைகளில் போதகராக பணியாற்றியவர் (1தீமோ 1:3, 2தீமோ 4:2).

14). தீத்து - கிரேத்தா திருச்சபையில் போதகப்பணி செய்தவர் (தீத்து 2:1-15).

வேதாகம இதயத்தின் உயிருள்ள கல்

August 31st, 2008 by Suja

வேதாகமத்தின் இதய பகுதியில் ஒரு கல்லாக கிறிஸ்து காணப்படுகிறார். இந்தக் கல் பெரும் விலை மதிப்புடைய வைரக்கல்லிலும் பெரும் மதிப்புடையது.  ஆனால் இதன் மதிப்பை அறியமுடியாத மனிதர் இதனை மிதித்து உருட்டி எறிந்தனர். ஆனால் இந்தக்கல்தான் தேவனுடைய கட்டுமானப்பணியில் மூலைக்கு தலைக்கல்லாயிற்று.

வேதாகமத்தின் இந்தப் பதுமராகக் கல்லைப் பற்றி வேதாகமத்தில் பல இடங்களில் குறிப்புகள் உண்டு.

1).  இது மூலைக்கல் (மத் 21:42, எபே 2:20)

2).  இது தலைக்கல் (சக 4:7, அப் 4:11)

3).  இது அடிக்கப்பட்ட கல் (1கொரி 10:4)

4).  இது இடறல் கல் (1கொரி 1:23)

5).  இது உடைக்கும் கல் (தானி 2:34)

6). இது உயிருள்ள தெரிந்தெடுக்கப்பட்ட விலையேறப்பெற்ற கல் (1பேது 2:4-7)

இந்தக் கல்லின் வருகை உலக ஆசனங்களின் அசைவாக இருக்கும். உயிருள்ள கல்லால் உயிர்பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

யாபேசைக் குறித்து ஏழு காரியங்கள்

July 18th, 2008 by Webmaster
1.நாளா.4:9-10

(1) அவன் பிறப்பு: துக்கத்தின் புத்திரனாய்ப் பிறந்தான்

(2) அவன் ஆராதனை: இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்து, அவரை ஆராதித்து மகிமைப்படுத்துகிறவனாயிருந்தான்.

(3) அவன் ஜெபஜீவியம்: அவன் அருமையான ஜெப ஜீவியம் உடையவனாயிருந்தான்..

(4) அவனுடைய ஜெபம்: தேவரீர் என்னை ஆசீர்பவதித்து என் எல்லையை விரிதாக்கும்.

(5) அவன் வேண்டுதல்: உமது கரம் என்னோடிருந்து தீங்கு என்னைத் துக்கப்படுத்தாமல் அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்.

(6) அவன் வேண்டுதல் கேட்கப்பட்டது: அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அவனுக்கு அருளினார்.

(7) அவன் ஆசீவாதம்: தன் சகோதரரைப் பார்க்கிலும் அவன் கனம் பெற்றான்.

சவுலின் பின்மாற்றம்

July 16th, 2008 by Webmaster

(1) ஆவிக்குரிய காரியங்களில் காண்பிக்கின்ற அசட்டை (1.நாளா.13:3-4)

(2) பெருமை (1.சாமு.13:8-11)

(3) கீழ்ப்படியாமை (1.சாமு.15:8-9, 11,22-23)

(4) தேவஊழியனை அவமதித்தல் (1.சாமு.15:26-27,  1.சாமு.24:4-7)

(5) பொறாமை (காய்மகாரம்) (1.சாமு.18:6-9)

(6) தேவநடத்துதலுக்காக பொறுமையாய்க் காத்திராமல் அஞ்சனக்காரியிடம் போனான் (1.சாமு.28:7-8)

(7) அவிசுவாசிகளோடுள்ள ஐக்கியம் (1.சாமு.28:21-25)

அவரது மரணத்தால்…….

June 22nd, 2008 by Suja

(1) பாவப் பரிகாரம் ஏற்பட்டது (எபி9:26)

(2) நியாயப்பிரமாண சாபத்திலிருந்து விடுதலை கிடைத்தது (கலா 3:13)

(3) யூத-புறஜாதி வேறுபாடு நீங்கியது (எபே 2:14-16)

(4) தேவனுடன் ஒப்புரவாகி அவருக்குச் சமீபமானோம் (ரோம 5:1, எபே 2:13)

(5) புத்திரத்துவம் கிடைத்தது (கலா4:3-5)

(6) பாவமன்னிப்புக் கிடைத்தது (எபே1:7)

(7) நீதிகரிப்புக் கிடைத்தது (ரோம5:9)

(8) சுத்திகரிப்புக் கிடைத்தது (1யோவா1:7-9)

(9) அவரோடு நாமும் மரித்தோம் (ரோம6:1-3)

(10) மரணபயத்திலிருந்து விடுதலை கிடைத்தது (எபி2:14-15)

(11) ஆக்கினை அகற்றப்பட்டது (ரோம8:1-3)

(12) அனைத்து ஆசீர்களும் வாக்குறுதி செய்யப்பட்டன (ரோம8:32, 2கொரி9:15)

(13) நமது எதிரியான சாத்தான் வல்லமை உரியப்பட்டு தோற்கடிக்கப்பட்டான் (கொலோ2:14-15)