வேதாகமத்தில் வரும் தேவாலயங்கள்

November 9th, 2008 by Suja

வேதாகமத்தில் பல தேவாலயங்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆயிரம் ஆட்சி ஆண்டு தேவாலயம் இதில் இறுதியானது.

1). மோசேயின் ஆசரிப்புக் கூடாரம் (யாத் 40 ) - சுமார் கி.மு 1500-1000)

2). சாலொமோனின் தேவாலயம் (1இரா8)- சுமார் கி.மு 1000-585)

3). செருபாபேலின் தேவாலயம் (எஸ்றா 6) - சுமார் கி.மு 516-கி.பி70)

(பின்து ஏரோதால் புதுப்பிக்கப்பட்டது. யோவான்2)

4). கிறிஸ்துவின் சரீரமாகிய தேவாலயம் (யோவான் 2:21) - சுமார் கி.மு4- கி.பி 30)

5). திருச்சபையாகிய தேவாலயம் ( அப்2, 1தெச 4)

        *உலகளாவிய திருச்சபை (எசே2:21)

         *உள்ளுர் திருச்சபை (1கொரி 3:16-17)

        *தனி விசுவாசியின் சரீரம் (1கொரி6:19)

6). உபத்திரவ கால தேவாலயம் (வெளி11)

7). ஆயிரம் ஆண்டு ஆட்சிகால தேவாலயம் (ஏசா 2:3,60:13, எசே 40-48)

(நன்றி:சொல்லோவிய வேதாகமம்)

தேவனுக்குத் தூரமாக…..

November 9th, 2008 by Suja

 வாழ்க்கை முறையும் தேவ பக்தியும் பின்னிப் பிணைந்தவை. ஏசாயா இதனைத் தெளிவாக விளக்குகிறார். பல நேரங்களிலும் தேவன் நமது வாழ்வில் செயல்பட இடையூறாக இருப்பவை நமது அக்கிரமங்களாகும். தேவன் நம்மை விட்டுத் தூரம் போவதில்லை. நாம்தான் தேவனை விட்டுத் தூரம் போகிறோம்.

* கொடுமை, கொலை  (ஏசா 59:3)

* பொய் (ஏசா 59:3)

* நியாயக் கேடுகள் (ஏசா59:3)

* வழக்குகள், நீதி, சத்தியத்தைத் திரித்தல் (ஏசா 59:4,8)

* தீய திட்டங்கள், நினைவுகள் (ஏசா 59:4, 7)

* பிறரிடம் தீமை பரவக் காரணமாகுதல் (ஏசா 59:5.6)

போன்றவற்றை வைத்துக் கொண்டு தேவனிடம் நெருக்கமாக இருப்பது எப்படி? எனவே இவற்றைக் களைந்துவிட்டு வருவோரை ஆசீர்வதிக்க தேவன் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்.

(நன்றி: சொல்லோவிய வேதாகமம்)

எல்லாம் இயேசுவே

November 9th, 2008 by Suja

அவரது ஆசீர்வாதங்கள் அளவிடற்கரியன

சங்கீதம் 103:11-13

1).  உயரம் : பூமிக்கு வானம் உயரமானதுபோல அவரது கிருபை உயரமானது.

2). அகலம் : மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே உள்ள  தூரம் போல அவரது மன்னிப்பு அகலமானது.

3). ஆழம் : தந்தைப் பிள்ளைகளுக்கு இரங்குவது போன்ற நிலையில் அவரது இரக்கம் ஆழமானது.

அவர் நம்வாழ்வில் செயலாற்றும் விதம் ஆச்சரியமானவை

1). மன்னிக்கிறவர் - நீதிமன்ற அறை அனுபவம் (சங் 103:3)

2). குணமாக்குகிறவர் - மருத்துவ மனை அனுபவம் (சங் 103:3)

3). விடுவிக்கிறவர் - அடிமைச் சற்தை அனுபவம் (சங் 103:4)

4). முடிசூட்டுகிறவர் - அலங்கார அறை அனுபவம் (சங் 103:4)

5). திருப்தியாக்குபவர் - விருந்துச் சாலை அனுபவம் (சங் 103:5)

 அவர் நமக்காக இருக்கும் நிலைகள் ஆராயத்தக்கவை

1). தந்தையாக - மென்மையாகச் செயற்படுகிறவர் (சங்103:13)

2). சிருஷ்டிகராக - முற்றும் அறிந்திருக்கிறவர் (சங்103:14)

3). உடன்படிக்கையின் தேவனாக - தமது கடமையைக் காக்கிறவர் (சங்103:17-18)

4). தண்டிக்கும் ஆசிரியனாக - தண்டித்துத் திருத்துகிறவர் (சங்103:9)

5). நீதிபதியாக - ஒடுக்கப்படுதலில் விடுதலையளிக்கிறவர் (சங் 103:6)

6). அரசராக - நித்தியசிங்காசனத்தில் இருந்து அனைத்தையும் கட்டுப்படுத்துபவர் (சங் 103:19)

(நன்றி:சொல்லோவிய வேதாகமம்)

யார் இந்த எலேயாசார் ?

October 29th, 2008 by Webmaster

(1) எலேயாசார் - ஆரோனின் மூன்றாம் குமாரன்

(யாத்.6:23,  எண்.26.60))

 (2) எலேயாசார் - பினெகாசின் குமாரன்

(எஸ்.8:33)

(3) எலேயாசார் - தாவீதின் இரண்டாம் பராக்கிரமசாலி. தோதாவின் குமாரன்

(2.சாமு.23:9,  1.நாளா.11:12)

(4) எலேயாசார் - மகேலியின் குமாரன்

(1.நாளா.23:21)

 (5) எலேயாசார்  - அபினதாபின் குமாரன்

(1.சாமு.7:1))

(6) எலேயாசார்  - நெகேமியாவோடிருந்த ஆசாரியர்களில் ஒருவன்

(நெகே.12:42)

பிலிப்புவைக் குறித்த ஏழு காரியங்கள்

October 3rd, 2008 by Webmaster

Philip 

(1) எருசலேம் சபையில் பிலிப்பு (அப்.6:5)

(2) சமாரியாவில் பிலிப்பு (அப்.8:5-8)

(3) வனாந்தர வழியில் பிலிப்பு (அப்.8:26)

(4) இரதத்தில் பிலிப்பு (அப்.8:29,31)

(5) தண்ணீரில் பிலிப்பு (அப்.8:38)

(6) ஆவியானவரின் கையில் பிலிப்பு (அப்.8:39)

(7) செசரியாவில் பிலிப்பு (அப்.21:8-10)

ஸ்தேவான்

September 30th, 2008 by Webmaster

(அப்.6:1-15)

stephanus

(1) தெரிந்தெடுக்கப்பட்டவன் (அப்.6:3,5)

(2) நற்சாட்சி பெற்றவன் (அப்.6:3,5)

(3) விசுவாசத்தால் நிறைந்தவன் (அப்.6:8)

(4) பரிசுத்த ஆவியைப் பெற்றவன் (அப்.6:3)

(5) வல்லமையால் நிறைந்தவன் (அப்.6:8)

(6) ஞானத்தால் நிறைந்தவன் (அப்.6:3,10)

(7) உத்தம பிரசங்கி (அப்.7:1-53)

(8) ஜெபம்பண்ணுகிறவன் (அப்.7:59-60)

(9) திவ்ய தரிசனமும் நம்பிக்கையுமுள்ளவன் (அப்.7:55-56)

(10) அவன் முகம் தேவதூதன் முகம்போல மகிமையாயிருந்தது (அப்.6.15)

(11)கிறிஸ்துவுக்காக முதல் இரத்தசாட்சி (அப்.7:57-60)

(12) தேவபக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணினார்கள் (அப்.8:2)

வேதாகமத்தில் வரும் சில போதகர்கள்

August 31st, 2008 by Suja

01). மோசே - வேதப்பிரமாணத்தைப் போதித்தார் (உபா 4:5).

02). பெசலெயேல் அகோலியாய் - கலையறிவு மிக்க இவர்கள் ஆசரிப்புக் கூடாரப் பணியில் போதித்து வழி நடத்தினர் (யாத் 35:30-35).

03). சாமுவேல் - இஸ்ரவேல் மக்களிடம் உத்தமமாக நடக்க  அறிவுரை கூறினார் (1சாமு 12:23).

04). தாவீது - சாலொமோனுக்கு தேவாலயப் பணி பற்றி அறிவுரை கூறினார் (1நாளா 28:9-21)

05). சாலொமோன் - ஞான அறிவுரைகளை வழங்கினார் (1இரா 4:29-34).

06). எஸ்றா - வேதபிரமாணத்தைத் தெளிவாகப் போதித்தார் (எஸ் 7:10)

07). இயேசு - ரபியாக விளங்கி நற்போதனைகளை வழங்கினார்.

08). பர்னபாஸ் - அந்தியோக்கியா சபையில் போதகப் பணி நடத்தினார் (அப் 13:1).

09). கமாலியேல் - சவுலின் குருவாக விளங்கிய நியாயப்பிரமாண அறிஞர் ( அப் 22:3).

10). பவுல் -  சிறந்த வேதாகம போதக அறிஞர் (அப் 13:1, எபே 19:9).

11). ஆக்கில்லா, பிரிஸ்கில்லா - அப்பொல்லோவுக்கு அறிவுரை வழங்கினர் (அப் 18:26).

12). அப்பொல்லோ - வல்லமையுள்ள சுவிசேஷ போதகர் (அப் 18:24-26). 

13). தீமோத்தேயு - திருச்சபைகளில் போதகராக பணியாற்றியவர் (1தீமோ 1:3, 2தீமோ 4:2).

14). தீத்து - கிரேத்தா திருச்சபையில் போதகப்பணி செய்தவர் (தீத்து 2:1-15).

வேதாகம இதயத்தின் உயிருள்ள கல்

August 31st, 2008 by Suja

வேதாகமத்தின் இதய பகுதியில் ஒரு கல்லாக கிறிஸ்து காணப்படுகிறார். இந்தக் கல் பெரும் விலை மதிப்புடைய வைரக்கல்லிலும் பெரும் மதிப்புடையது.  ஆனால் இதன் மதிப்பை அறியமுடியாத மனிதர் இதனை மிதித்து உருட்டி எறிந்தனர். ஆனால் இந்தக்கல்தான் தேவனுடைய கட்டுமானப்பணியில் மூலைக்கு தலைக்கல்லாயிற்று.

வேதாகமத்தின் இந்தப் பதுமராகக் கல்லைப் பற்றி வேதாகமத்தில் பல இடங்களில் குறிப்புகள் உண்டு.

1).  இது மூலைக்கல் (மத் 21:42, எபே 2:20)

2).  இது தலைக்கல் (சக 4:7, அப் 4:11)

3).  இது அடிக்கப்பட்ட கல் (1கொரி 10:4)

4).  இது இடறல் கல் (1கொரி 1:23)

5).  இது உடைக்கும் கல் (தானி 2:34)

6). இது உயிருள்ள தெரிந்தெடுக்கப்பட்ட விலையேறப்பெற்ற கல் (1பேது 2:4-7)

இந்தக் கல்லின் வருகை உலக ஆசனங்களின் அசைவாக இருக்கும். உயிருள்ள கல்லால் உயிர்பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

யாபேசைக் குறித்து ஏழு காரியங்கள்

July 18th, 2008 by Webmaster
1.நாளா.4:9-10

(1) அவன் பிறப்பு: துக்கத்தின் புத்திரனாய்ப் பிறந்தான்

(2) அவன் ஆராதனை: இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்து, அவரை ஆராதித்து மகிமைப்படுத்துகிறவனாயிருந்தான்.

(3) அவன் ஜெபஜீவியம்: அவன் அருமையான ஜெப ஜீவியம் உடையவனாயிருந்தான்..

(4) அவனுடைய ஜெபம்: தேவரீர் என்னை ஆசீர்பவதித்து என் எல்லையை விரிதாக்கும்.

(5) அவன் வேண்டுதல்: உமது கரம் என்னோடிருந்து தீங்கு என்னைத் துக்கப்படுத்தாமல் அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்.

(6) அவன் வேண்டுதல் கேட்கப்பட்டது: அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அவனுக்கு அருளினார்.

(7) அவன் ஆசீவாதம்: தன் சகோதரரைப் பார்க்கிலும் அவன் கனம் பெற்றான்.

சவுலின் பின்மாற்றம்

July 16th, 2008 by Webmaster

(1) ஆவிக்குரிய காரியங்களில் காண்பிக்கின்ற அசட்டை (1.நாளா.13:3-4)

(2) பெருமை (1.சாமு.13:8-11)

(3) கீழ்ப்படியாமை (1.சாமு.15:8-9, 11,22-23)

(4) தேவஊழியனை அவமதித்தல் (1.சாமு.15:26-27,  1.சாமு.24:4-7)

(5) பொறாமை (காய்மகாரம்) (1.சாமு.18:6-9)

(6) தேவநடத்துதலுக்காக பொறுமையாய்க் காத்திராமல் அஞ்சனக்காரியிடம் போனான் (1.சாமு.28:7-8)

(7) அவிசுவாசிகளோடுள்ள ஐக்கியம் (1.சாமு.28:21-25)

அவரது மரணத்தால்…….

June 22nd, 2008 by Suja

(1) பாவப் பரிகாரம் ஏற்பட்டது (எபி9:26)

(2) நியாயப்பிரமாண சாபத்திலிருந்து விடுதலை கிடைத்தது (கலா 3:13)

(3) யூத-புறஜாதி வேறுபாடு நீங்கியது (எபே 2:14-16)

(4) தேவனுடன் ஒப்புரவாகி அவருக்குச் சமீபமானோம் (ரோம 5:1, எபே 2:13)

(5) புத்திரத்துவம் கிடைத்தது (கலா4:3-5)

(6) பாவமன்னிப்புக் கிடைத்தது (எபே1:7)

(7) நீதிகரிப்புக் கிடைத்தது (ரோம5:9)

(8) சுத்திகரிப்புக் கிடைத்தது (1யோவா1:7-9)

(9) அவரோடு நாமும் மரித்தோம் (ரோம6:1-3)

(10) மரணபயத்திலிருந்து விடுதலை கிடைத்தது (எபி2:14-15)

(11) ஆக்கினை அகற்றப்பட்டது (ரோம8:1-3)

(12) அனைத்து ஆசீர்களும் வாக்குறுதி செய்யப்பட்டன (ரோம8:32, 2கொரி9:15)

(13) நமது எதிரியான சாத்தான் வல்லமை உரியப்பட்டு தோற்கடிக்கப்பட்டான் (கொலோ2:14-15)

இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்

June 22nd, 2008 by Suja

இடைவிடாமல் பிரசங்கம் செய்யவோ, இடைவிடாமல் ஊழியம் செய்யவோ கூறாமல் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என வேதம் கட்டளையிடுகிறது. சங்கீத ஆசிரியர் காலையிலும், நண்பகலிலும், மாலையிலும், நாள்தோறும் இரவும் பகலும் ஜெபித்தார். தானியேல் தினமும் மூன்று வேளை ஜெபித்தார்.

நமக்கு பரலோகத்தில் ஒரு பிதா இருக்கிறார். அவர் ஜெபத்தை கேட்கிறவர். அது அவரது பண்புநலம். அவர் ஜெபித்த கட்டளையிட்டுள்ளார். அதற்கு பதிலளிப்பேன் என்று வாக்குறுதியும் அளித்துள்ளார். சோர்ந்து போகாமல் ஜெபிக்கவும், இடைவிடாமல் ஜெபிக்கவும், விழித்திருற்து ஜெபிக்கவும் நமக்குக் கூறப்பட்டுள்ளது. அனைத்துக்காகவும், அனைவருக்காகவும் கவலைப்படாமலும் சந்தேகப்படாமலும் ஜெபிக்கும்படி கூறப்படுகிறது. கர்த்தர் நமக்கு மாதிரியை முன்வைத்தார்.

கேட்கிறவன் பெற்றுக்கொள்கிறான் (யாக் 4:2). அவர்கள்அப்போது மகிழ்ச்சியடைகிறார்கள் (1யோவா 16:24). தெய்வீக சமாதானத்தால் ஆட்கொள்ளப்பட்டு கவலை மறந்து பரவசமடைகிறார்கள் ( பிலி 4:6-7)

விசுவாசத்துடனும் தேவ சித்தத்தின்படியும் ஜெபங்களை ஏறெடுக்கத் தெரிந்திருப்பது, விரைவில் பதிலைப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கும். இதற்கு மிக அடிப்படையாக இருப்பது அர்ப்பணமுள்ள வாழ்வு (ரோம 12:1-2).

மறுரூப மனமுடையோர், மகிபனின் கரங்களிலிருந்து மலையென காரியங்களைப் பெறுவர். அவர்கள் தங்களுக்கும் பிறருக்கும் ஆசீர்வாதமாக, கனிநிறைந்து வாழ்வர்.

எனவே இடைவிடாது ஜெபம் பண்ணுவோம். இடைவிடாது போராடுவோம்- இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே!

துன்பங்களின் எல்லையும் நன்மையும்!

June 22nd, 2008 by Suja

துயரங்களின் காரணங்களைத்தேடி

கவலைப் பாயில் முடிங்குவதோ?

உலகில் ஏதாவது பெற்றுள்ளதில்

ஒரு பாக்கியம் மட்டுமே உண்டு.

எல்லாவற்றையும் ஒருநாள்

விட்டுச் செல்ல வேண்டும்.

தனியாக… ஒரு நீண்ட பயணத்துக்கு.

தேவன்

துன்பக் கடப்பாரைகளால்

ஆன்மீகச் சுரங்கங்களை

என் வாழ்வில் தோண்ட அனுமதிப்பாராயின்

நான் எதற்காக அழவேண்டும்?

எல்லாம் அவரது கட்டுப்பாட்டுக்குள்தானே

எந்த எல்லைதான் மீறும்?

நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் (யாக் 4:17)

June 22nd, 2008 by Suja

செய்யக்கூடாததை செய்தது பாவமாயிற்று. ஆனால் செய்ய வேண்டியதைச் செய்யாமலிருப்பதும் பாவம்தான். இன்றைய மனிதர் செய்யக் கூடாததைச் செய்து பாவத்தின்மேல் பாவத்தைக் கூட்டுகின்றனர் என்பது ஒரு பக்க உண்மை… மறுபக்கம் இன்றைய மனிதனின் நரக சிட்சைக்குக் காரணமென்ன? அவன் பாவியாக பிறந்ததோ. பாவத்தில் வாழ்வதோ அல்ல….. அவனது பாவத்துக்கான பரிகாரமாக மரித்த இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, பாவ வாழ்வை விட்டு மனந்திரும்பி இரட்சிப்பை இலவசமாக பெற்றுக்கொள்ளாததுதானே.

இங்கு அவன் செய்ய வேண்டியதை செய்யாமல் போவதே பாவம்.

விசுவாசியைப் பொறுத்தவரை….. எதற்காக உலகில் வைக்கப்பட்டுள்ளனர்? உப்பாக வாழ … வெளிச்சம் வீச… சுருக்கதாய் சொன்னால் நன்மை செய்ய.

விசுவாசி நன்மை மட்டும் செய்வதற்காகவே இன்று உலகில் வைக்கப்பட்டிருக்கிறான் என்பது பரலோகத்தின் அறிக்கை. அவன் உப்பாக வாழவில்லையேல், வெளிச்சம் கொடுக்கவில்லையேல் பாவம்.

உப்பே விஷமாகிப் போகுமானால் வெளிச்சமே இருட்டைக் கொடுக்குமானால் எவ்வளவு  விபரீதம்? நான் விசுவாசிகள் தீமை செய்வதைப் பற்றிப் பேசுகிறேன்.

நீ தண்டனைக்கு தப்புவாயோ விசுவாசியே?

சாகாத சாதனை வாழ்வு!

June 22nd, 2008 by Suja

இறக்கைகள் இருந்தால்

போர்த்திக் கொண்டிராதே

பறந்துகாட்டு…!

வெளிச்சமிருந்தால்

மரக்காலில் புதைந்திராதே

வெளியே கதிர்வீசு…!

இதுவே

உயிருள்ள விசுவாச வாழ்வு…!

மூலைக்குத் தலைக்கல்

June 18th, 2008 by Webmaster

ஒரு பாரம்பரிய சரித்திரக்கதை

மூலைக்குத்தலைக்கல்

(சங்.118:22,  ரோ.9:32-33,  ஏசா.28:16,  8:14,   1.பேது.2:4-8)

சலோமோன் தேவாலயம் கட்டும்போது ஒரு கல் மட்டும் மற்ற கற்களோடு சேராமல் கொஞ்சம் நீட்டாகவும் உருண்டு திரண்டதாகவும் இருந்தது. அந்தக் கல்லை அவர்கள் தேவாலயம் கட்ட எடுக்காமல் தூர வீசி ஏறிந்தார்கள். அந்தக் கல் ஆலயம் கட்டிக்கொண்டிருந்த வேலைக்காரருக்கும் சிற்பாச்சாரிகளுக்கும், வெளியே போகும்போதும் வரும்போதும் அது அவர்களுக்கு இடறுதற்கேதுவான கல்லாய் கிடந்தது. ஆலயம் கட்டி முடிக்கிறபோது அந்தக் கல்லை எடுத்து ஆலயத்தின் மூலைக்குத் தலைக்கல்லாக வைத்தார்கள்.

 தேவசபையாகிய ஆலயத்தின் மூலைக்கல்லும் மூலைக்குத் தலைக்கல்லும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. கிறிஸ்துவாகிய கல்லை யூதர்கள் (வீடு கட்டுகிறவர்கள்) வேண்டாம் என தள்ளிப்போட்டார்கள். யூதர்களுக்கு கிறிஸ்து இடறலாயிருந்தார். கடைசியாக அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய இரத்தம் முழுவதும் சிந்தப்பட்டது.  அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் சாம்பாதிக்கப்பட்ட அவருடைய சபைக்கு அவர் மூலைக்கல்லும், மூலைக்குத் தலைக்கல்லுமானார். அவரை விசுவாசிக்கிறவன் வெட்கப்படுவதில்லை (மத்.11:6,  13:57,   15:12,  1.கொரி.1:23,  அப்.10:43,   4:12,  6:31,  யோ.1:12)

விதைக்கிறவன்

June 16th, 2008 by Webmaster

(சங்.126:5-6,  பிர.11:4)

விதைக்கிறவன்

(1) நீதியை விதைக்கிறவன் (நீதி.11:18,  யாக்.3:18)

(2) விதையை விதைக்கிறவன் (எரேமி.50:16,  ஆதி.26:12-13)

(3) வசனத்தை விதைக்கிறவன் (மாற்.4:14,  லூக்.8:11)

(4) சிறுக விதைக்கிறவன் (2.கொரி.9:6)

(5) பெருக விதைக்கிறவன் (2.கொரி.9:6)

(6) ஞான நன்மைகளை விதைக்கிறவன் (1.கொரி.9:11)

(7) ஆவிக்கென்று விதைக்கிறவன் (கலா.6:7-9)

(8) அநியாயத்தை விதைக்கிறவன் (நீதி.22:8)

(9) களைகளை விதைக்கிறவன் (மத்.13:25-29)

(10) மாம்சத்துக்கென்று விதைக்கிறவன் (கலா.6:7-8)

புதிய ஏற்பாட்டில் வாலிபர்கள்

June 15th, 2008 by Webmaster

(1.யோ.2:13-14)

(1) ஐசுவரியவானாயிருந்த வாலிபன் (மத்.19:20-24)

(2) நாயீன் ஊர் விதவையின் மகன் (லூக்.7:14)

(3) சவுல் என்னப்பட்ட வாலிபன் (அப்.7:58)

(4) ஐத்திகு என்ற வாலிபன் (அப்.20:9)

(5) பவுலின் சகோதரியின் குமாரனாகிய வாலிபன் (அப்.23:16-22)

(6) துப்பட்டியைப் போர்த்திக்கொண்டு இயேசுவின் பின்னே சென்ற வாலிபன் (மாற்.4:51-52)

(7) இயேசுவின் கல்லறைக்குள் வெள்ளையங்கி தரித்தவனாயிருந்த வாலிபன் (மாற்.16:5)

அப்போஸ்தலர் 9ம் அதிகாரத்தில் ஏழுபேர்

June 8th, 2008 by Webmaster

(கர்த்தருடைய ஊழியத்தில் பங்குபெற்றவர்கள்)

(1) இயேசு கிறிஸ்துவின் தரிசனம் பெற்று, அவரைக் குறித்து வல்லமையாய்ச் சாட்சி கொடுத்த பிரசங்கிக்கிற சவுல் (அப்.9:1-6, 22, 29)

(2) ஆண்டவரின் அழைப்பின் சத்தத்திற்குக் கீழ்படிதலுள்ள சீஷனாகிய அனனியா (அப்.9:10-18) (22:12)

(3) ஜெபம் பண்ண இடம் கொடுத்தவனும் நேர் தெருவில் வசித்து வந்தவனுமாகிய யூதா (அப்.9.11)

(4) அரவணைத்து நேசித்த பர்னபா (அப்.9:26-27)

(5) பரிசுத்தவான்களைச் சந்திக்க பிரயாணம் செய்த பேதுரு (அப்.9:32)

(6) நற்கிரியைகளையும் தானதருமங்களையும் மிகுதியாய்ச் செய்து வந்த தொற்காள் அல்லது தபீத்தாள் என்னும் பேருள்ள சீஷி (அப்.9:36)

(7) பரிசுத்தவான்களுக்கு தங்க இடம்கொடுத்த தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் (அப்.9.43) (10:32)

ஆதியாகமத்தில் பத்து முக்கியமான ஆரம்பங்கள்

May 14th, 2008 by Webmaster

(1) அகிலாண்டத்தின் ஆரம்பம் (ஆதி.1:1-25)

(2) மனித வம்சத்தின் ஆரம்பம் (ஆதி.1:26,  2:1-25)

(3) பாவத்தின் ஆரம்பம் (ஆதி.3:1-7)

(4) பலியின் ஆரம்பம் (ஆதி.4:1-4)

(5) குடும்ப ஜீவியத்தின் ஆரம்பம் (ஆதி.4:1-15)

(6) நாகரீகத்தின் ஆரம்பம் (ஆதி.4:16-29)

(7) மரணத்தின் ஆரம்பம் (ஆதி.4:8,  5:1-32)

(8) பற்பல ஜாதிகளின் ஆரம்பம் (ஆதி.10)

(9) பற்பல பாஷைகளின் ஆரம்பம் (ஆதி.11)

(10) தெரிந்தெடுக்கப்பட்ட எபிரெய ஜாதியின் ஆரம்பம் (ஆதி.12 - 50 அதிகாரங்கள்)