முன்னுரைப்பு: ஆபிரகாமுக்குக் கடவுள் உரைத்தது
ஆதி.17:19
அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக. என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
ஆதி.21::12
…..ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்……
ஆதி.22:18
நீ (ஆபிரகாம்) என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.
யாக்கோபு தன் குமாரரை ஆசீர்வதிக்கும்போது யூதாவுக்கு கொடுத்த ஆசீர்வாதம்.
ஆதி.49:10
சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் ய+தாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை@ ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
ஏசா.11:1-2
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். …….. கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
தாவீதின் வம்சத்தில் மேசியா வருவார்:
எரேமியா 23:5
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன். அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
நிறைவேறுதல்
மத்தேயு எழுதின சுவிசேஷம் முதலாம் அதிகாரம் 1 முதல் 16 வசனங்களில் ஆபிரகாமிலிருந்து இயேசு கிறிஸ்துவரை வம்ச வரலாறு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரம் இயேசுவாகிய மேசியா ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யூதா, ஈசாய், தாவீது முதலியவர்களின் வழியில் வந்த மரியாளின் மைந்தனாக அவதரித்தார் என்று காண்கிறோம்.
இப்படியாக பல காலங்களில் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களும், முன்னறிவிப்புகளும் வார்த்தைக்கு வார்த்தை இயேசு கிறிஸ்துவில் நிறைவேறின.