February

பெப்ரவரி 5

பெப்ரவரி 5

இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியர் (எபி.2:17)

ஆசாரிய ஊழியத்தைப்பற்றி வேதத்தில் அதிகமாகக்கூறப்பட்டுள்ளது. அதைப்பற்றி தெளிவாக அறிந்துகொள்ளவேண்டும். ஏனெனில், அதனுடையதன்மைகளும், வாய்ப்புகளும் மற்ற சத்தியங்களைவிட மிகவும் குழப்பமாகவும், தவறாகவும்திரித்துக் கூறப்பட்டு வருகின்றன.

ஆதியிலே மனிதன் சர்வ வல்ல தேவனை வணங்கிஆராதிக்கும் ஆசாரியனாகத்தான் உருவாக்கப்பட்டான். மெல்கிசேதேக்கு இரத்தப் பலியிடாதஆசாரியனாக காணப்படுகிறார் (ஆதி.14:18-20). நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதும்,தேவஆட்டுக்குட்டியின் முன்னடையாளமாக மிருகங்கள் பலியிடப்பட்டன. இதற்கென ஆரோனும் அவன்சந்ததியாரும் ஆசாரியர்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டனர் (யாத்.28:1). இந்த ஆசாரியஊழியம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் பலியானபோது முடிவுற்றது. இப்படியாகமெல்கிசேதேக்கின் முறைமை புதுப்பிக்கப்பட்டது (எபி.5:6).

சுவிசேஷங்கள், அசாரியர்களாக தனிப்பட்டஎவரையும்பற்றி கூறவில்லை. ஆனால் விசுவாசிகள் யாவரும் ஆசாரியர்கள் எனக் கூறப்பட்டுள்ளது(1.பேது.2:5-10). அவர்கள் செலுத்தவது யாவும் ஸ்தோத்திர பலிகளே (எபி.13:15).பூமியிலே தேவனுக்கும், நமக்கும் நடுவாக நிற்கக்கூடிய ஆசாரியர்கள் எவரும் இல்லை. ஆயினும்நமக்காக இடைவிடாமல் பரிந்துபேசும் ஒரு பிரதான ஆசாரியன் பரலோகத்தில் உண்டு(ரோ.8:34, எபி.3:1). அவர் இரக்கமுள்ளவர் (எபி.2:17). சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவர் (எபி.2:18). முற்றும் முடிய இரட்சிக்க வல்லவர் (எபி.7:25).நித்தியமானவர், மாறாதவர் (எபி.6:20, 7:24). இப்பொழுதும் பரலோகத்தில் இருப்பவர்(எபி.9:24). உண்மையள்ளவராயிருக்கிறார் (எபி.2:17).