April

ஏப்ரல் 12

ஏப்ரல் 12

கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடிக்கு செய்யும் (சங்.31:1).

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்க போக்கையும் உண்டாக்குவார் என்று நாம் 1.கொரிந்தியர் 10:13ல் காண்கிறோம்.

சங்கீதங்காரனைப்போல நானும் தேவைனையே நம்பிப் கொண்டிருக்கிறேன். ஆயினும் தற்போதுள்ள இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்கொள்ள மார்க்கமில்லையே என்று ஏங்குகிறாயா? அவரில் நாம் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதினால் நாம் வெட்கப்பட்டு விடுவோமா? நன்மதிப்பை இழந்துவிடுவோமா? ஆவிக்குரிய வாழ்வில் நொறுக்கப்பட்டு விடுவோமா என்றெல்லாம் நினைக்கத்தோன்றும்.

அவர் நமக்குத் தப்பிக்கொள்ளும்படியான ஒரு வழியையும் உண்டுபண்ணியுள்ளார். அது அவருடைய வழி. நம்முடைய வழியல்ல. இந்த வழியைப்பற்றி நன்குணர்ந்த தாவீது, உமது நீதியினமித்தம் என்னை விடுவியும் எனக் கூறி ஜெபிக்கிறான்.

நாம் நல்லவர்களாக இருப்பதினால் நமக்கு விடுதலை வேண்டும் எனக் கேட்காமல் தேவனுக்கு மகிமை செலுத்துவதற்கென வேண்டிக்கொள்ளவேண்டும். மனுஷரால் நாம் இகழப்படலாம். ஆனால் அன்பின் தேவனால் புகழப்படுவோம். நாம் அவரில் சார்ந்திருப்பதினால் மனுஷரால் வெறுக்கப்படுவோம். நாம் மிகப் பெரிதான விசுவாசத்தைக் கொண்டிருப்பதினால் அவர் தரும் மதிப்பைப் பெறுவோம். அவரையே நம்பித் துன்பங்களிலிருந்து அவரது நீதியின்படி எற்ற காலத்தில் அவர் நம்மை விடுவிப்பார்.