March

இருளின் ஆட்சிக்குள் எரியும் கிருபையின் தீபம்

2025 மார்ச் 23 வேதபகுதி: 2 ராஜாக்கள் 8:14-23 “கர்த்தர்: உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னதின்படியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் கெடுக்கவில்லை” (வச. 19). ஆசகேல் சீரியாவின் ராஜாவான பிறகு, யூதாவிலே யோசபாத்தின் குமாரனாகிய யோராமின் ஆட்சி தொடங்குகிறது. ஆனால், ஒரு நீதிமானின் மகனாக இருந்தும், அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்து, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். இதற்குக் காரணம், அவன் ஆகாபின்…

March

ஊடுறுவிப் பார்க்கும் தேவனின் கண்கள்

2025 மார்ச் 22 வேதபகுதி: 2 ராஜாக்கள் 8:7-13 “அப்பொழுது ஆசகேல்: இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்” (வச. 13). சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதிப்பட்டிருந்தபோது, தேவனுடைய மனுஷனாகிய எலிசா தமஸ்குவுக்கு வருகிறான். ராஜாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஆசகேல் நாற்பது ஒட்டகங்கள் சுமக்கத்தக்க தமஸ்குவின் சகலவிதமான நன்மைகளையும் காணிக்கையாகக் கொண்டுவருகிறான். ஆனால், எலிசாவோ அந்தப்…

March

இழந்தது திரும்பக் கிடைக்கும்

2025 மார்ச் 21 வேதபகுதி: 2 ராஜாக்கள் 8:1-6 “தன் குமாரனை உயிர்ப்பித்த ஸ்திரீயினுடைய வீட்டையும் அவளுடைய நிலத்தையும் குறித்து அவள் ராஜாவிடத்தில் முறையிட வந்தாள். அப்பொழுது கேயாசி: ராஜாவே, அந்த ஸ்திரீ இவள்தான்; எலிசா உயிர்ப்பித்த அவளுடைய குமாரன் இவன்தான் என்றான்” (வச. 5). தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் எதுவும் தற்செயலாக நடப்பதில்லை. சூனேமியாள் தன் தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தினிமித்தம் பெலிஸ்தியர் தேசத்திற்குச் சென்று, ஏழு ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்தாள். தான் இழந்த நிலத்தையும்…

March

அவிசுவாசத்திற்கான நியாயத்தீர்ப்பு

2025 மார்ச் 20 வேதபகுதி: 2 ராஜாக்கள் 7:16-20 “ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே, ராஜா தேவனுடைய மனுஷனிடத்தில் வந்தபோது சொல்லியிருந்தபடியே, அவன் (பிரதானி) செத்துப்போனான்”(வச. 17). ஜனங்கள் புறப்பட்டுப்போய், சீரியரின் பாளயத்தைக் கொள்ளையிட்டார்கள்; கர்த்தருடைய வார்த்தையின்படியே, பஞ்சம் தீர்ந்து, ஒரு மரக்கால் கோதுமைமா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது (வச. 16). தேவனுடைய வார்த்தை ஒருபோதும் வீண்போவதில்லை. முந்தைய நாள் வரைக்கும் மரணத்தின் விளிம்பில் நின்ற மக்கள், இப்போது…

March

அவிசுவாசத்தின் இருள்

2025 மார்ச் 19 வேதபகுதி: 2 ராஜாக்கள் 7:10-15 “அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, என்று அவர்களுக்குச் சொன்னார்கள்”(வச. 10). குஷ்டரோகிகள் சீரியரின் பாளயத்திற்குச் சென்று, அங்கே தேவன் செய்த மாபெரும் அற்புதத்தைக் கண்டு, அந்த நற்செய்தியைத் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் நகரத்தின் வாசல் காவலாளிகளிடம் வந்து அறிவிக்கிறார்கள் (வச. 10). பசியினாலும் மரண பயத்தினாலும் தவித்திருந்த சமாரியாவுக்கு, இது ஒரு மாபெரும்…

March

கிருபையின் விருந்தும் நற்செய்தியின் கடமையும்

25 மார்ச் 18 வேதபகுதி: 2 ராஜாக்கள் 7:6-9 “நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்”(வச. 9). “ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப் கேட்கப்பண்ணினார்” (வச. 6). சமாரியா பட்டணத்தில் இஸ்ரவேல் மக்கள் பசியாலும் பட்டினியாலும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்த நேரத்தில், தேவனோ எந்த மனித ஆயுதமுமின்றி, ஒரு மாபெரும் விடுதலையைச் சத்தத்தின்…

March

மரணத்தின் விளிம்பில் மலர்ந்த நம்பிக்கை

2025 மார்ச் 17 வேதபகுதி: 2 ராஜாக்கள் 7:3-5 “குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன?”(வச. 3). சமாரியா பட்டணத்து வாசலிலே இருந்த அந்த நான்கு குஷ்டரோகிகளின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியது. அவர்கள் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்கள்; நோயின் கொடுமையாலும், கொடிய பஞ்சத்தினாலும் மரணத்தின் விளிம்பில் நின்றவர்கள். “நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்னறி” (வச. 3) என்று அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கேட்ட கேள்வி, விரக்தியின் உச்சத்தில்…

March

தேவவார்த்தையினால் வருகிற விடுதலை

2025 மார்ச் 16 வேதபகுதி: 2 ராஜாக்கள் 7:1-2  “அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்”(வச. 1). சமாரியாவின் பஞ்சம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது. மனித நம்பிக்கை அற்றுப்போன அந்த இருண்ட நள்ளிரவில், விடியற்காலையின் வெளிச்சம்போல எலிசாவின் தீர்க்கதரிசனம் ஒலித்தது. இது வெறும் வார்த்தையல்ல, சாத்தியமற்றதைச் சாத்தியமாக்கும் தேவனுடைய…

March

உபத்திரவத்தில் தேவனைத் தேடுங்கள்

2025 மார்ச் 15 வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:24-33  “அவன்: சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான்”(வச. 31). சீரியர் இஸ்ரவேலை முற்றுகையிட்டபோது சமாரியாவில் உண்டான கொடிய பஞ்சம், மனித வாழ்வின் மிக மோசமான இருண்ட பக்கத்தை வெளிப்படுத்துகிறது. முந்தைய பகுதியில் தேவனுடைய கிருபையையும் விருந்தையும் கண்ட நாம், இங்கே விசுவாசமற்ற ஒரு சூழலில் மனிதன் எவ்வளவு தூரம் வீழ்ச்சியடையக்கூடும் என்பதைக்…

March

தேவனுடைய நிஜ உலகத்தைக் காணுதல்

2025 மார்ச் 14 வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:19-23 “என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்”(வச. 19). சீரியரின் வீரர்களுக்கு முழுமையாகக் கண்கள் தெரியாமற் போகவில்லை. மாறாக, இன்னார் இன்னார் என்று அடையாளம் காண முடியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மயக்க நிலையில் இருந்தன. எனவேதான் அவர்களால் எலிசாவைப் பின்தொடர்ந்து சமாரியா வரைக்கும் செல்ல முடிந்தது. இது ஒரு தற்காலிகமான பார்வையற்ற நிலை. பார்வையற்றவர்கள்…