தேவனின் இறையாண்மை
2024 பிப்ரவரி 15 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,15 முதல் 18 வரை) “அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும், பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்துபோனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்குமுன்பாக நடந்தார்கள்” (வசனம் 18). ராஜாவின் ஊழியக்காரர், ராஜாவாகிய எங்கள் ஆண்டவன் கட்டளையிடும் காரியத்தையெல்லாம் செய்ய உமது அடியாராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம் என்றார்கள் (வசனம் 15). அப்சலோம் இஸ்ரவேல் மக்களின் இருதயங்களைக் கவர்ந்துகொண்டாலும், தாவீதை முழு மனதுடனும், உண்மையுடனும்…