February

கசப்பான வார்த்தை வேண்டாம்

2024 பிப்ரவரி 25 (வேத பகுதி: 2 சாமுவேல் 16,9 முதல் 14 வரை) “அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.” (வசனம் 9). அபிசாய் சிறந்த வீரன்தான்; ஆயினும் வாள் எடுத்து போரிடுவதற்கு இது நேரமன்று. சீமேயியின் சாப வார்த்தைகளையும், அவனது கற்களையும் தடுக்க தாவீது விரும்பவில்லை. தாவீது விமர்சனங்களுக்கு தன்னுடைய காதை மூட விரும்பவில்லை. இத்தகைய விமர்சனங்களின் வாயிலாகக் கர்த்தர்…

February

அவசரம் வேண்டாம்

2024 பிப்ரவரி 24 (வேத பகுதி: 2 சாமுவேல் 16,5 முதல் 8 வரை) “(சீமேயி) தாவீதின்மேலும், தாவீதுராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்” (வசனம் 6). சீமேயி ஏன் தாவீதைத் தூஷித்து, அவன்மீது கற்களை எறிய வேண்டும்? தாவீதின் புகழையும், அவனுடைய கண்ணியத்தையும் கெடுக்க வேண்டும். அதற்காக சமயம் பார்த்துக்கொண்டிருந்தான், அது இப்பொழுது வாய்த்தது. நம்முடைய வீழ்ச்சியில், நம்முடைய குறைவில், நம்முடைய இழப்பில் மகிழ்ச்சியடையும்படி ஒரு கூட்டம் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கும் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.…

February

தவறாக நியாயந்தீர்க்கப்படுதல்

2024 பிப்ரவரி 23 (வேத பகுதி: 2 சாமுவேல் 16,5) “சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து …” (வசனம் 5). தாவீதும் அவனோடிருந்த சிறு குழுவினரும் ஒலிவ மலையின் மறுபுறத்தில் பள்ளத்தாக்கில் இருக்கிற பகூரிம் என்னும் ஊருக்கு வந்தபோது, சீமேயி என்பவன் அவனுக்கு எதிரே புறப்பட்டு வந்து தாவீதைத் தூஷித்தான். சற்று முன்னர் சந்தித்த சீபாவுக்கும் இவனுக்கும் எத்தனை வேறுபாடு? “ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயை…

February

தவறாக நியாயந்தீர்த்தல்

2024 பிப்ரவரி 22 (வேத பகுதி: 2 சாமுவேல் 16,1 முதல் 4 வரை) “அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்துக்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான்” (வசனம் 4). தாவீது மிகப்பெரிய சிக்கலிலும், அச்சுறுத்தலிலும் இருக்கிறான். அவன் இதுவரை சந்தித்த நபர்களைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமான நபர்களைச் சந்திக்கிறான். இது தாவீதுக்கு மட்டுமல்ல, நமக்கும் பொருந்தும். எப்பொழுதெல்லாம் நாமும் சிக்கலில் இருக்கிறோமோ அப்பொழுதெல்லாம் நம்மைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி பலர் புதிது புதிதாக முளைத்து வருகிறதைக் காணமுடியும். தாவீது…

February

பாடுகளில் சார்ந்துகொள்ளுதல்

2024 பிப்ரவரி 21 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,32 முதல் 37 வரை) “தாவீது மலையின் உச்சிமட்டும் வந்து, அங்கே தேவனைப் பணிந்துகொண்டபோது, …” (வசனம் 32). தாவீது ஒலிவ மலைக்கு வந்தபோது, தனக்கு நேரிட்ட எல்லாப் பிரச்சினைகளின் நடுவிலும் அவன் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான், அவரைப் பணிந்து கொண்டான். தன்னுடைய அனுபவங்களை அவன் மூன்றாம் சங்கீதத்தில் அழகாகப் பதிவு செய்திருக்கிறான். “தேவனிடத்தில் இரட்சிப்பு இல்லை என்று சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள் … நான் கர்த்தரை…

February

பாடுகளில் தேவசித்தம்

2024 பிப்ரவரி 20 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,30 முதல் 31 வரை) “தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப் போனான்; அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்” (வசனம் 30). தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப் போனான் என்பது அவன் அடைந்த தெய்வீக துக்கத்தின் உச்சகட்டத்தைக் காண்பிக்கிறது. முகத்தை மூடுதல் சுய கண்டனத்துக்கு அடையாளமாகவும், வெறுங்காலால் நடத்தல் சுயவெறுப்புக்கு…

February

அமர்ந்திருந்து ஊழியம்

 2024 பிப்ரவரி 19 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,27 முதல் 29 வரை) “அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்” (வசனம் 29). ராஜா ஆசாரியனாகிய சாதோக்கின்மேல், அவன் ஞானதிருஷ்டிக்காரன் என்ற முறையில் கூடுதலாக நம்பிக்கை வைத்திருந்தான். ஒருவேளை எருசலேமுக்குத் திரும்பிச் செல்கிற அவனால், ஆசாரியப் பணிகளைச் செய்ய அனுமதிக்கப்படாவிட்டாலும், அங்கே தாவீதுக்காக செய்ய வேண்டிய வேலைகள் இருந்தன. அது அப்சலோமின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, அச்செய்தியை தாவீதுக்கு மறைமுகமாக…

February

பாடுகளில் நம்பிக்கை

2024 பிப்ரவரி 18 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,23 முதல் 26 வரை) “ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்” (வசனம் 23). தாவீது ராஜா தன்னுடைய நண்பர்களோடு கீதரோன் ஆற்றைக் கடந்து சென்ற நிகழ்வு, நம் ஆண்டவரின் துயரமும் கசப்பும் நிறைந்த பாடுகளுக்கு ஓர் நிழலாக இருக்கிறது. அவர் தம் சொந்த மக்களால் புறக்கணிக்கப்பட்டவராக எருசலேமை விட்டு கெதரோன் ஆற்றைக் கடந்து கெத்சமனே தோட்டத்திற்குச் சென்றார். அதைக் குறித்து யோவான், “இயேசு இவைகளைச் சொன்ன பின்பு…

February

பாசத்துக்குரிய கண்கள்

2024 பிப்ரவரி 17 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,23) “சகல ஜனங்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார் எல்லாரும் மகா சத்தமாய் அழுதார்கள்” (வசனம் 23). வயதான தந்தை தன் சொந்த மகனிடமிருந்து தப்பி காடுகளில் தஞ்சம் அடைகிறார். மென்மையான இருதயமுள்ள எவராலும் இதைக் காண்பது சகிக்க முடியாததுதான். ஆகவேதான் ஆவியானவர் இவ்வாறாக எழுதி வைத்திருக்கிறார்: “சகல ஜனங்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார் எல்லாரும் மகா சத்தமாய் அழுதார்கள்” (வசனம் 23). பெரும்பான்மையான மக்கள் அப்சலோமைப் பின்பற்றி, தங்கள் ராஜாவாகிய…

February

விருப்பத்துடன் பின்பற்றுதல்

2024 பிப்ரவரி 16 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,19 முதல் 22 வரை) “ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்” (வசனம் 21). தாவீது அப்சலோமுக்கு தப்பி ஓடுகையில், தன்னுடைய மெய்க்காவல் படையின் தலைவனாகிய  கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ…