March

மாறாத அன்பு

2024 மார்ச் 6 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,5) “ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்” (வசனம் 5). ராஜாவாகிய தாவீது வழிதவறிச் சென்ற தன் மகனின் மீது கொண்டிருந்த அன்பு எவ்வளவு அதிகமாக இருந்தது. இந்த நேரத்திலும்கூட தாவீது அவனை மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றான். அப்சலோம் ஒரு மன்னிக்க முடியாத கிளர்ச்சியாளன் என்பதை தாவீது அறிந்திருந்தான். அவன் தனது வாழ்க்கையையும் சிம்மாசனத்தையும் அபகரிக்கும்படி…

March

நம்பிக்கையும் உழைப்பும்

2024 மார்ச் 5 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,1 முதல் 4 வரை) “அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாய்த் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா ஒலிமுகவாசல் ஓரத்திலே நின்றான்” (வசனம் 4). தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்தான். இத்தகைய மக்கள் தாவீதுக்கு எங்கிருந்து கிடைத்தார்கள். தாவீதின்மீதிருந்த விசுவாசத்தினால் பலர் தங்களுடைய ஆயுதங்களோடு வந்து இணைந்துகொண்டார்கள் என்று தெரிகிறது. சற்றுக் காலதாமதம் ஆகினாலும்…

March

எதிர்பாராத உதவிகள்

2024 மார்ச் 4 (வேத பகுதி: 2 சாமுவேல் 17,24 முதல் 29 வரை) “ தாவீது மக்னாயீமுக்கு வந்தான்” (வசனம் 24). தாவீது யோர்தானைக் கடந்து, தனக்கும் தன்னோடிருக்கிறவர்களுக்கும் ஒரு பாதுகாப்பான இடமாகக் கருதி மக்னாயீம் என்னும் இடத்தில் தங்கினான். இது வரலாற்றுச் சிறப்பான ஓரிடம். யாக்கோபு லாபானிடம் இருந்து திரும்பி வருகிற வழியில், தன் சகோதரன் ஏசாவுக்குப் பயந்திருந்த வேளையில் இந்த இடத்தில் தங்கினான். தேவதூதர்கள் யாக்கோபைச் சந்தித்து அவனைப் பலப்படுத்தினார்கள் (ஆதியாகமம் 32…

March

எது முக்கியம்?

2024 மார்ச் 3 (வேத பகுதி: 2 சாமுவேல் 17,23) “அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்” (வசனம் 23). அகித்தோப்பேல் தனது அறிவுரையின்படி அப்சலோம் செய்யவில்லை என்பதைக் கண்டபோது விரக்தியடைந்தான். அரண்மனையில் ஒரு மிகப்பெரிய ராஜதந்திரியாக வலம் வந்தவன், இப்பொழுது ஓரங்கட்டப்படுகிறோம் என்று அறிந்தபோது இயல்பாகவே எல்லாருக்கும் வரக்கூடிய மனச்சோர்வை அவன் சந்தித்தான். ஒரு காலத்தில்…

March

கிருபையின் பாதுகாப்பு

2024 மார்ச் 2 (வேத பகுதி: 2 சாமுவேல் 17,22) “அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்து போனார்கள்; பொழுதுவிடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை” (வசனம் 22). “தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்” (நீதிமொழிகள் 25,25) என்பதுபோல யோனத்தானும், அகிமாசும் கொண்டு வந்த செய்தி சோர்ந்துபோயிருந்த தாவீதுக்கும் அவனுடைய குழுவினருக்கும் இருந்தது. தாவீது தன்னுடைய குழுவினரோடு உடனடியாக யோர்தான் ஆற்றைக் கடந்து அக்கரை சென்றான்.…

March

மறைவான ஊழியங்கள்

2024 மார்ச் 1 (வேத பகுதி: 2 சாமுவேல் 17,15 முதல் 21 வரை) “யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு, இன்றோகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீதுராஜாவுக்கு அதை அறிவிக்கப்போனார்கள்” (வசனம் 17). ஒட்டுமொத்த நாடும் அப்சலோமுக்காகச் செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, உண்மையுள்ள ஒரு சிறிய கூட்டம் தாவீது ராஜாவுக்காக உழைத்துக்கொண்டிருந்தது. தாவீது ஆண்டால் என்ன? அப்சலோம் ஆண்டால் என்ன? எங்களுக்கு கவலையில்லை என்று பெரும்பான்மையான உலகம் அகன்ற…

February

ஞானத்தைக் காட்டிலும் பெரியது

2024 பிப்ரவரி 29 (வேத பகுதி: 2 சாமுவேல் 17,5 முதல் 14 வரை) “அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்” (வசனம் 14). தாவீதைக் கொல்வதற்கான அகித்தோப்பேலின் ஆலோசனை சிறந்ததுதான் என்பதை அப்சலோம் அறிந்திருந்தான். ஆயினும் தன்னைச் சேவிக்கும்படி வந்திருக்கிற ஊசாயின் ஆலோசனையையும் கேட்போம் என்னும் அப்சலோமின் முடிவு அகித்தோப்பேலின் ஒட்டுமொத்த திட்டத்தையும் மாற்றிப்போட்டது. ஊசாய் அப்சலோமின் பெருமைக்கு தீனிபோடும் விதமாக, படையை அகித்தோப்பேல் அல்ல,…

February

உலக ஞானத்தின் தோல்வி

2024 பிப்ரவரி 28 (வேத பகுதி: 2 சாமுவேல் 17,1 முதல் 4 வரை) “இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும்பொருட்டு, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்” (வசனம் 14). அகித்தோப்பேல் அப்சலோமின் ஆலோசனைக் குழுவில் முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தான். அவன் தாவீதைத் தோற்கடிப்பதற்கு சூழ்நிலைக்கேற்ற, தந்திரமான சரியான ஆலோசனையைக் கூறினான். இவனுடைய ஆலோசனையைக் கேட்டிருந்தால் ஒருவேளை தாவீது தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் மனிதருடைய எல்லா ஆலோசனைகளின்மீதும் கர்த்தர் மேலாதிக்கம் செய்து திட்டங்களை மாற்றுகிறார்.…

February

பிளவுகளை உருவாக்க வேண்டாம்

2024 பிப்ரவரி 27 (வேத பகுதி: 2 சாமுவேல் 16,20 முதல் 23 வரை) “அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனையெல்லாம் தேவனுடைய வாக்கைப்போல இருந்தது, அப்படியே அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது” (வசனம் 23). “அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான்” (வசனம் 20). அப்சலோம், உடன்படிக்கைப் பெட்டியோடு எருசலேமுக்குத் திரும்பி வந்திருக்கிற ஆசாரியனாகிய சாதோக்கிடமோ அல்லது அபியத்தாரிடமோ ஆலோசனை கேட்டிருந்தால் அவனுடைய ராஜ்யபாரத்தைக் குறித்த கர்த்தருடைய…

February

ஏமாற்றும் வார்த்தை வேண்டாம்

2024 பிப்ரவரி 26 (வேத பகுதி: 2 சாமுவேல் 16,15 முதல் 19 வரை) “அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள்” (வசனம் 15). அப்சலோமும் அவனுடைய ஆதரவாளர்களும், திரளான மக்களும், ஆலோசனைக்காரன் அகித்தோப்பேலும் எவ்வித எதிர்ப்புமின்றி எருசலேமுக்குள் நுழைந்தார்கள். தாவீதும் அவனுடைய ஆதரவாளர்களும் அரண்மனையிலிருந்து தப்பி ஓடிவிட்டார்கள் என்னும் செய்தி அவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தியாகவே இருந்திருக்கும். தலைநகரைக் கைப்பற்றியது அப்சலோமுக்குக் கிடைத்த ஆரம்ப வெற்றி. இனிமேல் நாடுமுழுவதும் தன்…