மத்.14:13-21
இயேசுவில் அதிநிறைவு: இயேசு ஏரோதுக்கு அஞ்சவில்லை. ஆனால், அவரது வேளை (கடவுள் நியமித்த காலம்) வருமுன் சிக்கிக் கொண்டு, பரமதந்தையின் திட்டத்தைக் குலைக்க விரும்பவில்லை. ஆகவே, வேறிடம் சென்றார். நான் புத்தியீனமாகக் கடவுளுக்கு முன் ஓடி தேவையற்ற இடுக்கண்ணில் அகப்படுகிறேனா?மக்கள் தேவையைக் கண்ட இயேசுவின் மனம் இளகியது. இரக்கத்தால் – மூலமொழியில் குடல் இளகியது (வயிற்றில் உணர்ச்சிகள் உறைந்திருப்பதாக எண்ணினர்). கடவுளின் கரிசனையால் இளகாதவரை நான் பிறர் தேவையைச் சந்திக்க இயலாது. வ. 16 – புதிய இஸ்ரவேலாகிய கடவுளின் மந்தைக்கு மேய்ப்பராகிய பன்னிருவர்கள் இயேசுவிடமிருந்து மட்டுமே தங்கள் தேவை அனைத்தையும் நிறைவு செய்;யக்கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. மாபெரும் தேவையைச் சந்திக்கும் வற்றா ஊற்றை நான் அறிவேனா?இயேசு மட்டுமே நம் தேவையைப் பரிபூரணமாக நிறைவு செய்ய இயலும். மேசியாவின் வல்லமையை என் அன்றாட வாழ்வில் அறிவேனா?