Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்

பாவம் என்னும் பாம்பு

Webmaster by Webmaster
January 6, 2008
in சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
0
நீயே என் குரு!
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோ.10:10)

You might also like

புத்துயிர்

ஆடு

புதையல்

Sadhu Singhநீண்ட காலமாய் நோய்வாய்ப்பட்ட மனிதன் ஒருவன் இருந்தான். தன் பலத்தை எல்லாம் இழந்து பலவீனப்பட்டிருந்த அவனுக்கு மிகச் சில வாழ்நாட்களே எஞ்சியிருந்தன. ஒருநாள் அவன் தனிமையில் படுத்திருந்தபோது தன்னை ஒரு பாம்பு நெருங்கி வருவதைக் கண்டான். தன் உயிரைக் காத்துக்கொள்ள அவன் விரும்பினாலும் அவனால் முடியவில்லை. அவனுக்குள் உயிர் இருந்தது. ஆனால் அந்த உயிரினால் பலனில்லை. ஒரு கல்லை எடுத்து வீசி அம்பாம்பைக் கொல்ல அவனுக்குச் சக்தியில்லை. பாம்பு வருவதைப் பார்த்து அஞ்சி நடுக்கத்தான் அவனால் முடிந்தது.  அது அவனைத் தீண்டிய சிறிது நேரத்திற்குள் அவன் வாழ்வு முடிந்தது. அதன்பின் அவனுடைய உறவினன் ஒருவன் வந்து அப்பாம்மை அடித்துக்கொன்றான். அவன் பலசாலியாக இருந்ததால் அப் பாம்மைக் கொல்ல அவனால் முடிந்தது. கிறிஸ்தவர் அநேகர் உயிர்பெற்றிருக்கிறார்கள். ஆனால் பாவம் என்னும் நச்சுப்பாம்பைக் கொல்லும் சக்தி அவர்களுக்கில்லை. பெலனில்லாத உயிரினால் பலனில்லையே? இதன் விளைவாக சாத்தான் எனப்படும் பகைவன், பாவம் என்னும் விஷத்தால் தீண்டி அவர்களைக் கொன்று போடுவான்.. நமதாண்டவரோ ஜீவனை மட்டுமல்ல, பரிபூரண ஜீவனைத் தருவதாக வாக்களித்திருக்கிறார். பரிபூரண ஜீவனைப் பெற்றிருப்போர் பாவம் என்னும் பாம்பைக் கொல்லும் சக்தியுடையோர் !

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

புத்துயிர்

January 23, 2008
நீயே என் குரு!

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் (1.யோ.1:7) இளைஞன் ஒருவன் ஓர் உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து தவறிக் கீழே விழுந்துவிட்டான். உடல் முழுவதும் காயமுற்று இரத்தம் பெருக்கெடுத்ததால் அவன் மரணத்தருவாயிலிருந்தான். மருத்துவரும் தன்னால் எதுவும்...

Read moreDetails

ஆடு

January 17, 2008
நீயே என் குரு!

நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோ.10:11)  நூற்றுக்கணக்கான ஆடுகளுடைய ஒரு மனிதன் இருந்தான். ஒருநாள் சில ஆடுகள் காணாமற்போனபோது அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு தன் பணியாட்களிடம் கூறினான். ஆனால், கொடிய மிருகங்களுக்கு...

Read moreDetails

புதையல்

January 13, 2008
நீயே என் குரு!

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்: (லூக்.18:1) இரண்டு புதல்வர்களுடைய தந்தையொருவன் இருந்தான். அவன் தன் மக்களையழைத்து நமது வயலில் ஒரு பெரும் புதையல் இருக்கிறது. உடனே அதைத் தோண்டி எடுங்கள்...

Read moreDetails

நீயே என் குரு!

January 4, 2008
நீயே என் குரு!

நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள். சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.  (யோ..8:31-32) இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கேள்விப்பட்ட சிறு பெண்ணொருத்தி தீபேத் நாட்டின் கிராமம் ஒன்றில் வாழ்ந்து வந்தாள். அவள் இயேசுவின்மேல் செலுத்தும்...

Read moreDetails
Next Post

நீ என்ன செய்கிறாய்?

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?