சங். 62:1-12
கிறிஸ்தவனை தேவன் உயர்த்த, பொறாமை கொள்வோர் அநேகர், கிறிஸ்தவனின் பெலவினங்களைக் கண்டறிந்து, தவறான முறைகள், பொய்க் குற்றச்சாட்டுகள் இரண்டகம் போன்றவற்றை தந்திரமாய் பயன்படுத்தி, வீழ்த்த முயற்சித்தும் பயனளிக்காத நிலையில் முன்னின்று சிரித்து பின்னின்று வஞ்சக சதி செய்து, மனம் நொந்து போகும் வரை தொந்தரவு தருகின்றார். தேவனும் அவர் வல்லமையும்: தேவன் மேல் நோக்கமாய் எப்பொழுதும் இருக்கும் கிறிஸ்தவன் எதிரிகளைக் கண்டு பயப்படத் தேவை இல்லை. தேவ தன்மைகளை வேத வசனங்கள் மூலம் தன் மனதில் நிரப்பிக் கொள்ள தேவ வல்லமையும், கிருபையும் ஒன்றாய் இணைந்து வெற்றி தருகின்றது. தேவனை முற்றிலும் சார்ந்த கிறிஸ்தவன் அசைக்கப் படுவதில்லை. சார்ந்திருத்தல் எவ்வாறு? அமர்ந்திருத்தலும், திறந்த மனமும், முற்றிலும் தேவனை நம்பியிருத்தலுமே சார்ந்திருத்தல் ஆகும். மாம்ச முயற்சிகள் அனைத்தையும் நிறுத்தி, தேவன் தம் வல்லமையால் செயல்படவிடுதலே அமர்ந்திருத்தல். அவர் சமூகத்தில் எல்லாவற்றையும் விட்டுவிடுதல் திறந்த மனமூமாகும். முற்றிலும் கீழ்ப்படிதலே அவரை சார்ந்திருத்தல் ஆகும்.