1. இஸ்ரவேல் புத்திரர் விக்கிரக ஆராதனைக்காரர்களாக மாறினபோது கர்த்தருடைய பட்சத்தில் நின்றது ஒரு லேவி கோத்திரம் மட்டும். (யாத்.32:26)
2. ராஜாவும் ஜனமும் ஒன்றுபோல பயப்பட்டு பின்வாங்கினபோது இராட்சதனாகிய கோலியாத்தோடு தைரியமாய் போராட சென்றது ஒரு தாவீது மட்டுமே. (1.சாமு.17:32,36)
3. இராஜாவும் எல்லா இஸ்ரவேல் புத்திரரும் விக்கிரக ஆராதனை நேராக திரும்பின காலத்தில் அதற்கு எதிராக நின்று குரல் கொடுத்தது ஒரு எலியா மட்டுமே. (1.இராஜா.18:22).
4. எல்லா தீர்க்கதரிசிகளும் பொய்தீர்க்க தரிசனம் சொல்லும்போது, தேவன் சொல்வதையே சொல்வேன் என உறுதியாயிருந்தது ஒரு மிகாயா மட்டுமே. (2.நாளா.18:12-13)
5. ஜனங்கள் எல்லாரும் அவபக்தியாய் ஜீவித்து வந்த காலத்தில் முதன் முதலாக 300 வருஷமளவும் தேவனோடே சஞ்சரித்து வந்த ஒருவன் ஏனோக்கு மட்டும்தான். (ஆதி.15:21-24)
6. யாக்கோபின் 12 குமாரரில் தேவனுக்குப் பயப்படுகிறவனாகவும் பரிசுத்தவானாகவும் ஜீவித்து மிக உயர்ந்த ஆசீர்வாதங்களைப் பெற்றது யோசேப்பு ஒருவன்தான். (ஆதி.50:20, 49:22-26)
7. ஓர் இராஜ்யத்தின் ஜனங்கள் எல்லாரும் இராஜாவை பார்த்து ஜெபம்பண்ணினபோது, இஸ்ரவேலின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணினது ஒரு தானியேல் மட்டுமே. அதனால் அவன் சிங்கக் கெபியில் போடப்பட்டான். கர்த்தர் அவனை அதிலிருந்து அற்புதமாய் இரட்சித்து காப்பாற்றினார் (தானி.6:10)
8. சிறைப்பட்டவர்கள் அநேகர் இருந்தாலும் தன் தேசத்தின் நிலைகண்டு அழுது உபவாசித்து, ஜெபித்தது ஒரு நெகேமியா தான் (நெகே.1:4).
9. இயேசு கிறிஸ்துவின் 12 சீஷர்களில் அவர் மார்பில் எப்போதும் சாய்ந்து கொண்டிருந்தது ஒரு யோவான் மட்டுமே. (யோ..13:23,25)
10. இயேசுவின் சிலுவை மரண சமயம் எல்லா சீஷர்களும் பயந்து ஓடிப்போனபோது, பயப்படாமல் அவரைக் காண கல்லறை பக்கம் அழுதுகொண்டு நின்றதும், அதனால் உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது தரிசித்ததும் ஒரு மகதலேனா மரியாள் மட்டுமே. (யோ.20:11-17, மாற்.16:9)
11. நான் ஒன்று செய்கிறேன்! பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தய பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன் என்றவர் பவுல் மட்டுமே (பிலி..3:10-15, 2. தீமோ.4:7-8)
12. பந்தையசாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள். அகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள் (1..கொரி.9:24-27, கலா..3:1-4, 5:7)