மத். 16:13-28
அடிப்படை நம்பிக்கை: மக்கள் இயேசு சாதாரண மனிதனல்ல என்று கண்டு கொண்டனர். ஆனால் தீர்க்க தரிசிகளையும்விட மேலானவர் என்றறியவில்லை. பேதுருவின் அறிக்கை சீடரின் அடிப்படை நம்பிக்கையை வெளிப்படுத்துவதால், இயேசு மேற்கொண்டு மேசியாவின் பாடு மரணத்தைப் போதிக்க முற்பட்டார் (வ. 21). இதற்கு முன்னரே இயேசுவைக் குறித்து ஓரளவு சீடர் அறிந்திருந்தனர் (யோவான் 1:41, 45, 49 மத். 3:176 14:33). ஆனால், தெளிவான அறிக்கை இப்பொழுது காணப்படுகிறது.