மார்ச் 4
ஆவியின் கனியோ… சமாதானம் (கலா.5:22)
விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்ட உடனேயே நாம், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் சமாதானத்தைப் பெறுகிறோம் (ரோம 5:1). தேவனுக்கும் நமக்கும் நடுவில் இருந்த பகைமை நீங்கிவிட்டது என்பதே இதன் பொருளாகும். ஏனெனில், அந்தப் பகைமைக்குக் காரணமாயிருந்த பாவம், கிறிஸ்துவின் தியாகச் செயலினாலே நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டது.
நம்முடைய பாவங்களுக்கான தண்டனையைக் கிறிஸ்து செலுத்தித் தீர்த்துவிட்டார் எனவும், அப்பாவங்களை தேவன் மறந்துவிட்டார் எனவும், நாம் அறிந்திருக்கிறபடியால் நமது மனச்சாட்சியில் சமாதானத்தைப் பெற்றிருக்கிறோம்.
மேலும், தேவனுடைய சமானத்தை நமது உள்ளங்களில் பெற்றவர்களாக, நாம் களிகூரவேண்டுமன்று தூய ஆவியானவர் விரும்புகிறார். நம்முடைய வாழ்நாட் காலம் அவருடைய கரத்தில் இருக்கிறதென்றும், அவர் அனுமதிக்கும் சித்தத்தினாலன்றி வேறொன்றும் நம்வாழ்வில் நிகழாதென்றும் நாம் அறிந்திருக்கிற அறிவு, சமாதானத்தையும் மன அமைதியையும் நமக்குத் தருகின்றது.
ஆகவே, நெடுஞ்சாலையில் நாம் பயணம் மேற்கொள்ளும்போது வாகனம் பழுதடைந்தாலோ, போக்குவரத்து nரிசலினால் நாம் செல்ல வேண்டிய விமானத்தைத் தவறவிட்டாலோ, நமது வாகனம் விபத்தில் சிக்கிக்கொண்டாலோ நாம் மனக்கட்டுப்பாட்டுடன் அமைதியைக் கடைப்பிடிப்பதே சமாதானம் என்பதன் பொருளாகும்.
சிறைச்சாலையில் பேதுரு கண்ணயர்ந்து உறங்குவதற்கும், தன்னைக் கொலை செய்யத்துடித்த மனிதர்களுக்காக ஸ்தேவான் மன்றாடுவதற்கும், கடலில் கப்பல் மூழ்கியNவுளையில் மற்றவர்களுக்க பவுல் ஆறுதல் அளிப்பதற்கும் தேவையான மனதிடத்தைக் கொடுத்தது, இந்த ஆவியின் கனியேயாகும்.
தீவிரமாகக் காற்று வீசும் மண்டலத்திற்குள் சிக்குண்ட விமானம், புயலில் அகப்பட்ட இறகுபோல தூக்கியெறியப்படுகிறது. அதனுடைய அற்கைகள் வளைந்துவிடுகின்றன. கட்டுப்பாடுகளை மீறி அந்த விமானம் மேலும் கீழும் பறந்து அதில் இருக்கும் பயணிகள் கதறுகின்ற வேளையில், இந்தச் சமாதானம், விளைவு எதுவாக இருக்குமோ என்ற எண்ணத்தில் ஒரு விசுவாசியை அலைக்கழிக்கலாம், கர்த்தருக்கு முன் பணியச்செய்து, தன் ஆத்துமாவை வேனிடத்தில் ஒப்புவிக்கச்செய்து அவரைப் புகழச்செய்யும்.
வேறொரு எடுத்துக்காட்டினைக் காணலாம். ஒரு மருத்துவருக்கு முன் அமர்ந்திருக்கும்போது, அவர், உங்களுக்குப் புற்றுநோய் இருக்கிறது என்று கூறும் தருணத்தில், ஐயா நான் இவ்வுலகை விட்டுப்பிரிய ஆயத்தமாயிருக்கிறேன். தேவனுடைய கிருபையால் நான் இரட்சிக்கப்பட்டுள்ளேன். நான் தேகத்தைவிட்டுப் பரிந்து கர்த்தரோடு குடியிருக்கப்போகிறேன் என்று சொல்வதற்கு இந்த ஆவியின் கனியாகிய சமாதானம் நமக்கு வலிமையைக் கொடுக்கிறது.
இருள்சூழ்ந்த பாவ உலகம், களைப்படையச் செய்யும் வேலைப்பளு, உள்ளத்தை அழுத்தும் வருத்தங்கள், தனித்துவிடப்பட்ட நிலைமை, என்னவென்று nதெரியாத எதிர்காலம், இச்சூழ்நிலையிலும் சதாமானம், நிறைவான சமாதானம் நம் உள்ளத்தை ஆட்கொள்கிறது. ஏனெனில் இயேசு கிறிஸ்து அரியணையில் வீற்றிருக்கிறார் என்று பிக்கர்ஸ்மித் அழகுற மொழிந்துள்ளார். இந்த தேவ சமாதானம் நம்மை ஆளுகை செய்யட்டும்.