மார்ச் 3
ஆவியின் கனியோ…. சந்தோசம் (கலா.5:22)
கர்த்தரைக் கண்டடையும் வரை மனிதன் தன் வாழ்வில் உண்மையான மனமகிழ்ச்சியைப் பெறமாட்டான். சொல்லிமுமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாகிய சந்தோஷம் என்று பேதுருவினால் அழைக்கப்படும் மகிழ்சிக்குள்ளாக, கர்த்தரைக் கண்டடைந்த பிறகே அவனால் நுழையமுடியும்.
சூழ்நிலைகள் சாதமாக இருக்கின்றவேளையில் யார் வேண்டுமானாலும் மகிழ்ந்திருக்கமுடியும். ஆனால் ஆவியின் கனி என்றழைக்கப்படும் சந்தோஷம் உலகீயச் சூழ்நிலைகளால் உண்டாவதற்கு நாம் கர்த்தரோடு பெற்றிருக்கும் உறவின் அடிப்படையிலும், அவர் நமக்கு அளித்துள்ள வாக்குறுதிகளின் அடிப்படையிலும் இது துளிர்க்கிறது. திருச்சபையில் மிளிரும் இந்த சந்தோஷம் அங்கிருந்து கொள்ளையிடப்பட வேண்டுமென்றால், முன்னதாக கிறிஸ்து அவரது அரியணையின்று அகற்றப்படவேண்டும்.
கிறிஸ்தவ மகிழ்ச்சியையுமம், பாடுகளையும் இணைந்து காணலாம். இவ்விரண்டையும் ஒருங்கிணைத்து, சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும், நீடிய சாந்தமும், என்று பவுல் கூறுவதாகக் காண்கிறோம் (கொலோ 1:11). தெசலோனிக்கே பட்டணத்துப் பரிசுத்தவான்கள, மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டார்கள் (1தெச 1;:6). கடந்த பல நூற்றாண்டுகளில் பாடுகளை அனுபவித்த இரவு வேளைகளிலேயே பரிசுத்தவான்கள், மகிழ்ச்சியின் கீதங்களைக் கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொண்டதாகச் சான்று வழங்கியுள்ளனர்.
சந்தோஷத்தையும் வருத்தத்தையும் இணைந்து காணலாம். மிகவும் அன்பு கூரப்பட்ட ஒருவரின் மறைவிற்குப் பிறுகு, அவ்விழப்பினால் அன்னாராது கல்லறையின் அருகில் நின்று ஒருவர் கண்ணீர் சிந்தலாம். அதே நேரத்தில், தனக்குப் பிரியமானவர் கர்த்தருடைய சமுகத்தில் இருக்கிறார் என்னும் அறிவினால் அந்த நண்பர் மகிழ்சிகொள்கிறவராகவும் இருக்கிறார்.
ஆனால், பாவத்தோடு சந்தோஷத்தைச் சேர்த்துக் காணமுடியாது. ஒரு கிறிஸ்தவன் பாவம் செய்கிறபோது, மகிழ்ச்சியின் கீதத்தை இழந்து போகிறான். தனது பாவத்தை அறிக்கைசெய்து அதனை விட்டுவிடுகிறவரை தான் இழந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை அவன் திரும்பப்பெறுகிறதில்லை.
நிந்தையால் இன்னலுறும் வேளையிலும், தீமையான மொழிகள் பொய்யாய்ச் சொல்லப்படும் வேளையிலும் சந்தோஷத்தோடு களிகூரவேண்டுமென்று, கர்த்தர் தம் சீடர்களுக்கு அறிவுரை வழங்கினார் (மத் 5:11-12). அவர்கள் அவ்வாறே நடந்து கொண்டனர். கர்த்தருடைய திருப்பெயரின் மேன்மையின் நமித்தம், சிறிது காலத்திற்குள்ளாகவே தாங்கள் அவமானம் அடைவதந்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியால், சந்தோஷமாய், நீதிமன்றத்தைவிட்டு வெளியேறினர் என்று படிக்கிறோம் (அப் 5:41)
கர்த்தரை அறிகிற அறிவனால் நமது மகிழ்சி பெருகுகிறது. ஒருவேளை, முதலில் சிறுதொல்லைகள், நீங்கா வியாதிகள், சிற்சில அசௌகரியங்கள் ஆகியவற்றின் ஊடாகச் செல்லும் தருணங்களில் நாம் மகிழ்ச்சியுடையவர்களாகக் காணப்படலாம். ஆனால் சூழ்நிலைகள் மிகவும் கடினமாக மாறி, பாடுகள் தொடர்ந்து நம்மைப் பற்றிக்கொள்ளும் வேளைகளில் தேவனைக் காணும்படியான நிலைக்கு நாம் வந்திட வேண்டுமென்று தூய ஆவியானவர் விரும்புகிறார். அத்தருணங்களிலும் அவருடைய வழியே நிறைவானது என்னும் அறிவு, நம்மைக் களிகூரச் செய்யும். இதன் நிமித்தம், அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்பேனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப் போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற் போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்சியாயிருப்பேன். என் இரட்ச்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன் (ஆப 3:17-18) என்று ஆபகூக்கோடு சேர்ந்து கூறுவோமாயின், ஆவிக்குரிய முதிர்ச்சி பெற்றவர்களாயிருப்போம்.