கலாத்தியர் 3:1-14
பவுல், கலாத்தியருடைய கடந்த கால அனுபவங்கள் வெளிப்பிரகாரமான கிரியைகளினாலல்லாமல், இருதயத்தில் ஏற்பட்ட விசுவாசத்தினால் நிகழ்ந்தன என்பதை நினைப்பூட்டுகிறார். அவர் எடுத்துக்கூறும் அனுபவங்கள்:-ஆவியின் ஆரம்பம்: (2-4) இரட்சிப்பின் அனுபவம் ஒரு விசுவாச அனுபவமாகும். பழைய வாழ்க்கை ஒழிந்து தூய ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதால் புதிய வாழ்க்கை ஆரம்பிக்கிறது. தம்முடைய சொந்த முயற்சிக்கு இவ்வனுபவத்தில் இடமில்லை. விசுவாசம் ஒன்றே பிரதானமானது!அதிசய அற்புதங்கள்: (5) அற்புதங்கள் நம் வாழ்வில் நிகழவும் விசுவாசமே அடிப்படையானது. தம்முடைய சொந்த கிரியைகளினால் ஒரு அதியசயமும் நிகழ்வதில்லை! ஆபிரகாமின் ஆசிர்வாதங்கள்: (6-14) யூத கிறஸ்தவர்கள் ஆபிரகாமை ஆண்டவருக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்திருந்தனர். தன்னுடைய விசுவாசத்தைக் கண்டே தேவன் அவனை ஆசீர்வதித்தார். விசுவாசத்தை அடிப்படையாகக்கொண்டு வாழ்பவனே ஆபிரகாமின் சந்ததியாக, அவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறான். விசுவாசத்தின்மூலம், நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு விலக்கப்படுகிறாhன். மேற்கூறப்பட்ட அனுபவங்கள் நம்முடைய வாழ்விலும் நிறைவேற தேவையானது விசுவாசம் ஒன்றே! கிறிஸ்துவுடன் அனுபவ ரீதியாக விசுவாசத் தொடர்பு வைத்திருப்பவனே கிறிஸ்தவன்!