Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home தினதியானம்

தேக்கநிலைக் கிறிஸ்தவர்கள்

Kesaran by Kesaran
February 6, 2011
in தினதியானம்
0
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

பெப்ரவரி 6
நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள் (யாக்.1:22).

You might also like

Smith´s Daily Remembrancer – September 5

Smith´s Daily Remembrancer – September 4

Smith´s Daily Remembrancer – September 3

சபைக்கூட்டங்களிலும், சிறப்புக்கூட்டங்களிலும், இறைவசனக் கலந்துரையாடல்களிலும் பங்குகொள்ளும் பழக்கத்தில் ஒருவகையான ஏமாற்றும் வஞ்சகம் கலந்திருக்கிறது. இவ்விடங்களில் தேவனுடைய வார்த்தைகளைச் செய்திகளாகக் கேட்கிறோம். நாம் ஆற்றவேண்டிய பணிகளைக் குறித்து உரையாடுகிறோம். இவையே, அவருடைய சித்தத்தை நாம் நிறைவேற்றுகிறோம் என்னும் ஒரு தவறான நம்பிக்கைக்குள் நம்மை ஆழ்த்திவிடுகிறது. மாறாக, இவை நம்முடைய பொறுப்புகளை அதிகப்படுத்துகின்றன. உண்மையிலேயே நாம் மாம்சத்திற்கு உரியவர்களாக இருந்தபோதிலும், நாம் ஆவிக்குரியவர்கள் என்று நம்மையே ஏமாற்றிக்கொள்கிறோம். வளர்ச்சியற்று தேக்கநிலையில் இருந்தபோதிலும், நாம் வளர்ச்சியடைகிறோம் என்று வீணாக நம்பி ஏமாறுகிறோம். பரிதவிக்கும் மதியீனராக இருந்தபோதிலும், ஞானமுள்ளவாகள் என்று நம்மைப் பற்றிக் கற்பனை செய்துகொள்கிறோம்.

தமக்குச் செவிகொடுத்து அதன்படி செய்கிறவனே ஞானமுள்ளவன் என்பது இயேசு கிறிஸ்துவின் கூற்று. மாறாக மதியீனன் அவருடைய வார்த்தைகளைக் கேட்டும் அதைக் குறித்து ஒன்றும் செய்கிறதில்லை.

அருட்செய்தியைக் கேட்டு, “எவ்வளவு அற்புதமான செய்தி“ எனக் கூறிச் செல்வதில் பயனேதுமில்லை. நான் கேட்டதைக் குறித்து எதையாகிலும் செய்வேன்“ என்று கூறுவதே தகும். மனதின் சிந்தனையை வளர்ப்பதோ, இதயத்தைக் களிகூரச் செய்வதோ, தோலின் நிறம் மாறுவது போன்று மேற்போங்கான மாற்றத்தைக் கொண்டு வருவதோ நல்ல செய்தி ஆகாது. நாம் எடுத்துக்கொண்ட சித்தத்தை ஆக்க பூர்வமாக நிறைவேற்றச் செய்வதே நல்ல செய்தியாகும்.

அருட்செய்தியை வழங்கிக்கொண்டிருந்த ஒரு சொற்பொழிவாளர் தனது செய்தியை நிறுத்தி, நாம் பாடிய முதல் பாடலின் தலைப்பு என்ன என்று கேட்டார். ஒருவருக்கும் விடை தெரியவில்லை. வாசித்த வேத பகுதி என்ன என்று கேட்டார். விடைபகர்வார் ஒருவருமில்லை. கொடுத்த அறிவிப்புகள் எவை என்று வினவினார். மௌனம் தொடர்ந்தது. கூடிவந்த கூட்டத்தினர், சபைக்கூட்டத்தை விளையாட்டுத் திடல் என்று நினைத்தனர் போலும்.

ஓவ்வொரு கூட்டத்தின் தொடக்கத்திலும் கீழ்க்காணும் வினாக்களை நாம் நமதுள்ளத்தில் எழுப்பவேண்டும். இங்கு நான் எதற்காக வந்திருக்கிறேன் ? தனிப்பட்ட முறையில் இன்றைக்கு தேவன் என்னோடு பேசுவதற்கு நான் விருப்பம் உடையவனாக இருக்கிறேனா? அவ்வாறு அவர் பேசுவராயின், அதற்கு நான் கீழ்ப்படிவேனா?

சாவுக்கடலுக்குள் நீரானது தொடர்ந்து உட்புகுந்த வண்ணமாயிருக்கும். ஆயின் அங்கிருந்து நீர் வெளியேறுவதில்லை. அதன் காரணத்தினால் அக்கடல் சாவுக்கடல் என்னும் பெயர் பெற்றது. அதுபோலவே நமது வாழ்விலும் தொடர்ந்து செய்திகளைக் கேட்டும், அவற்றை நடைமுறைப்படுத்தாமல் இருப்போமென்றால், நாம் தேக்கநிலையில் இருக்கிறோம் என்பதே அதன் பொருளாகும். „ நான் சொல்லுகிறதைச் செய்யாமல், கர்த்தாவே! கர்த்தாவே! என்று ஏன் என்னை அழைக்கிறீர்கள்? என்று வலியுறுத்திக் கர்த்தர் கேட்கும் கேள்வி நமது இதயத்தில் ஊடுருவிப் பாயட்டும் !

Share30Tweet19
Kesaran

Kesaran

Recommended For You

Smith´s Daily Remembrancer – September 5

September 5, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 5 'நான் புறம்பே தள்ளுவதில்லை' யோவான் 6:37 எவ்வளவு பலத்த விசுவாசியும் சிலவேளை பயத்துக்கு இடங்கொடுக்கிறதுண்டு. தேவன் தனக்காகச் செய்த யாவற்றையும் சந்தேகிக்கிறதுமன்றி, தேவ வசனத்திலுள்ள எந்த வாக்குத்தத்தமும் தனக்குரியதோ என்று கலங்குகிறதுமுண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் முன்னே...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 4

September 4, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 4 'உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷம்' எபேசியர் 1:13 நம்முடைய ரட்சிப்பு பாவத்தினின்றும், சாபத்தினின்றும், தேவகோபத்தினின்றும் உண்டாகும் விடுதலைதான். இது நம்மாலே முடியாது. தேவன் நம்மை இலவசமாய்ப் பரிபூரணமாய், நித்தியமாய் மீட்கும்பொருட்டுத் தம்முடைய சொந்தக் குமாரனை நம்முடைய தன்மையைத்...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 3

September 3, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 3 'என் தேவன் உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார்' பிலிப்பியர் 4:19 இப்படிப் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியருக்கு நிச்சயம் சொல்லுகிறார்; நமக்கும் இப்படியே நிச்சயம் சொல்லுகிறார். அவர்களுக்கு அநேகம் குறைவுகளிருந்தன; நமக்கும் அப்படித்தான். அவர்கள் தேவனைச் சார்ந்திருந்தார்கள்; நாமும்...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 2

September 2, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 2 'மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு' ரோமர் 11:20 விசுவாசிகள் தங்களைக்குறித்து சிலவேளைகளில் எண்ணவேண்டியதற்கு மேலாக எண்ணிச் சோதனையில் விழுகிறார்கள். தங்களுக்கும், மிகவும் நிர்ப்பந்தரான பாவிகட்குமிருக்கிற வித்தியாசம் தேவனுடைய சுத்த இலவசமான கிருபையினால் உண்டாயிருக்கிறதை மறந்துவிடுகிறார்கள். தாங்கள் பலவீனரானதால்,...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 1

September 1, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 1 'மீட்கிறவர்' ரோமர் 11:26 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்கு வேண்டிய ஒத்தாசைசெய்து, அவர்களை மீட்க அபிஷேகம் பெற்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். இதற்காக ஞானம் அறிவென்னும் பொக்கிஷங்கள் அவரிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சகல மாம்சத்தின்மேலும் அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு...

Read moreDetails
Next Post

கிறிஸ்து என் பிரதிநிதி

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?