நீதி.20:1-30
விழிப்புணர்ச்சி அவசியம்: வாழ்விலே விழிப்புணர்ச்சி மிகவும் அவசியம். சொல்லிலும் செயலிலும் பரிசுத்தமும் மக்களோடு கொள்கின்ற உறவிலே அன்பும் நட்பும் இருக்குமேயானால் விசுவாசியின் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்கும். நீதிமொழிகள் 20ம் அதிகாரத்திலே கர்த்தர் விழிப்புள்ள வாழ்க்கைக்கு எவ்வாறு உதவுகிறார் என்று வாசிக்கிறோம். அடிப்படையான தேவை: கர்த்தர் உடல் பிரகாரமாய் நமக்குத் தேவையானவைகளைத் தருகிறவர் (நீதி 20:12); அவர் நம்மை இரட்சிக்கிறவர் (20:22): நம்முடைய வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறவர் (20:24): மனிதனுக்குத் தம் ஆவியைத் தந்தவர் (20:27) ஒரு விசுவாசிக்குப் பக்தியும் பரிசுத்த வாழ்க்கையும் அன்பும் நட்பும் அனைத்தும் தேவையானாலும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாயிருப்பது கர்த்தருடைய ஆசீர்வாதமேயாகும்.