எண்ணாகமம் 9:1-14
இஸ்ரவேல் மக்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினது, அவர்களுடைய முன்னான வாழ்க்கையை நினைவு படுத்தவே. 1. இஸ்ரவேலர் பெற்ற அற்புத விடுதலை: அடிமைகளாக வாழ்ந்துக் கொண்டிருந்தவர்கள் அற்புதமாக விடுவிக்கப்பட்டார்கள். இந்த விடுதலையை அவர்களுடைய வாழ் நாளெல்லாம் நினைவு கூர்ந்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, தங்கள் பிள்ளைகளுக்கும் அதைப் பற்றி அறிவித்தார்கள். இன்று கிறிஸ்து அளித்துள்ள விடுதலையை நாம் எண்ணி அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். இஸ்ரவேலர் ஆரம்பித்த பயணம்: அவர்கள் ஆரம்பித்த பயணம் பல ஆண்டுகள் நீடித்தன. பலவிதமான அனுபவங்களைப் பெற்றுக் கொண்டார்கள். கிறிஸ்தவ வாழ்க்கையும் ஒரு பயணம் தானே! ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பயணம் செய்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பயணத்தில் இயேசு நம்மோடு இருக்கிறார். ஒரு நாளில் இப்பயணம் முடிவடையும். 3; பஸ்கா பண்டிகையில் பலியான ஆட்டுக் குட்டி: பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதற்காகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துக் கொண்டு அதை அடித்துப் புசிப்பார்கள். நமக்கு விடுதலையை அளிக்கும் படியாக இயேசுதாமே பஸ்காவின் ஆடாக பலியிடப்பட்டார். ஆதலால் என் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிப்பது எவ்வளவு முக்கியம்.