உபா.30:1-20
பல நேரங்களில் கடவுளுக்கு உகந்ததாகவோ எதிராகவோ முடிவெடுக்கத் தயங்குகிறோம். பலதருணங்களில் கடவுளின் பிள்ளைகளாக நடிக்க முயலுகிறோம். ஆனால் கடவுள் முழுமையான மனத்திருத்தம் பெற்ற புதிய படைப்பாகவோ நம்மைச் சந்திக்க விரும்புகிறார். கடவுள் தாம் தெரிந்துகொண்ட மக்களை அவர்களின் குருட்டாட்டத்தின் நிமித்தமாய்த் தூரவிலக்கி அடிமைத்தனத்துக்கு ஒப்புக்கொடுத்திருந்தாலும், திரும்பவும் அவர்களை பாலும், தேனும் ஓடுகிற கானான் நாட்டுக்கு அழைத்துக்கொண்டதை மோசே நினைவுபடுத்துகிறான் (1-5). வெளிப்படையான அடையாளமாகிய விருத்தசேதனத்தைப் பார்க்கிலும் மனமாற்றம் பெற்ற கீழ்ப்படிதல் நிறைந்த வாழ்வையே அடையாளமாக ஏற்றுக்கொள்கிறார். பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுகிற தூய வாழ்வையே கடவுள் அடையாளமாக ஏற்றுக் கொள்கிறார். பரிசுத்த அவியானவரால் ஏவப்படுகிற தூய வாழ்வையே கடவுள் விரும்புகிறார். (எரே. 31:31-34, கலா. 4:6). கடவுள் நேரடியாகவும், தெளிவாகவும் எளிதாகவும் வெளிப்படுத்துகிறவார். கடவுளின் வாக்குகளை நம்புவதும், கீழ்ப்படிவதும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டதல்ல. இன்றைக்கு இப்பகுதியை தியானிக்கும் உங்களுக்கும் கூட, கடவுளின் சட்டங்களுக்கு முழுமையாக் கீழ்ப்படியத்தக்க மனதிருத்தம் கொள்வதைவி;ட வேறு வழியில்லை. கடவுளுடைய பிள்ளையானால் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய் (20).