சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்: (லூக்.18:1)
இரண்டு புதல்வர்களுடைய தந்தையொருவன் இருந்தான். அவன் தன் மக்களையழைத்து நமது வயலில் ஒரு பெரும் புதையல் இருக்கிறது. உடனே அதைத் தோண்டி எடுங்கள் என்று கட்டளையிட்டான். அவ்விருவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். தங்கமும் வெள்ளியும் நிலத்தில் புதையுண்டு கிடக்கிறது. அகழ்ந்து அவற்றை எடுப்போம் என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அந்த தந்தை கூறியதின் பொருள் அதுவல்ல. அந்தக் கிராமத்தில் தண்ணீர் வசதியில்லாதிருந்தது. மூன்று மைல்களுக்கப்பாலிருந்து நீர் கொண்டு வரவேண்டும். இரு ககோதரர்களும் தினந்தோறும் விடாது நிலத்தைத் தோண்டலானார்கள். தகப்பன் அவர்களை ஊக்குவித்தான். மனந்தளராமல் தோண்டுங்கள். மிகவும் அருமையானதைக் கண்டுபிடிப்பீர்கள் என்று ஆர்வம் புகட்டினான். சில நாட்கள் கழிந்த பின் சகோதரர் இருவரும் களைப்புற்று மனம் சோர்ந்தனர். எல்லாம் வீண், தங்கமும் வெள்ளியும் கிடைத்தால்கூட நாம் தாகத்தால் மடிந்துவிடுவோம். தண்ணீரே தங்கத்தைவிட அரியது என்று புலம்ப ஆரம்பித்தனர். அச்சயம் திடீரென்று ஆழத்திலிருந்து ஒரு நீரூற்று சுரந்தது. சகோதரர்கள் ஆனந்தக் கூத்தாடினர். தந்தையிடம் ஓடிச் சென்று விவரமறிவித்தனர். தண்ணீருக்காக நிலத்தைத் தோண்டும்படி உங்களிடம் நான் கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருக்கமாட்டீர்கள். மற்றவர்கள் உழைக்கட்டும் என்று மறுத்திருப்பீர்கள். புதையலிருப்பதாகச் சொன்னபடியால்தான் உடனே போனீர்கள். பொன்னுக்காக நீங்கள் போனாலும் பொன்னைவிட அரிய பொருளைக் கண்டுபிடித்தீர்கள் என்று அத் தந்தை கூறினான்.
ஜெபம் என்பது நிலத்தைத் தோண்டுவது போன்ற ஒரு பயிற்சி. மனிதனின் ஆன்மீக வாழ்வை அது சிறப்புச் செய்கிறது.