மத்.18:10-20
வழிதவறி அலைவோர்: இயேசுவின் அடியவரில் மிகச் சிறியோரின ஆவிக்குரிய பிரதிநிதிகள் (தேவதூதர்) இராஜாவின் சமுகத்தை எளிதில் அடைகிறார்கள். எனவே, அச்சிறியோரை இழிவாக நடத்துவது ஏன்? (வ. 10) சிதறிப்போன பலவீனமான அடியவரை நாம் எவ்வாறு நடத்துவது என்பதைக் குறித்து வ. 11-14 ல் என்ன கற்கிறோம்? தவறி அலைவோரைத் தேடுவதில் எவ்வளவு அக்கறை செலுத்துகிறோம்?வ. 15-2 – லும் தவறி அலையும், குற்றஞ்செய்யும் அடியவரைக் குறித்தே காண்கிறோம். வ. 15ல் காணப்படும் குற்றம் பாவமல்ல, சகோதரனுக்கு விரோதமான பிழை. நமது கூட்டுறவு, சபை, சங்கங்களில் குற்றத்தைக் கண்டிக்க வேதநெறியைப் பின்பற்றுகிறோமா? நாம் கண்டிக்க அஞ்சாது, வேதநெறியைப் பின்பற்ற கருணை கொண்டுள்ளோமா? வ. 18 – கட்டுப்பாட்டை நிலை நிறுத்த, கட்டவிழ்க்கும், கட்டம் பொறுப்பும் அதிகாரமும், தங்கள் சுய தீர்ப்பைக் கூறாமல், கூட்டுறவின் ஜெபத்தில் ஆண்டவரின் திருவுளத்தை அறிவோருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.