நாள் 24: ஒரு முழுமையான முடிவு மத்தேயு 7:13-29
இயேசு சீஷத்துவதற்திற்கு முழு முயற்சி தேவை என்று தெளிவாகவும் திட்டவட்டாகவும் அறிவித்தார். அவரது போதனையில் “மலிவான கிருபை” என்ற பார்வையை ஆதரிக்கவில்லை. சுய வெறுப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையைச் சேர்ந்தது. இந்த பகுதியில், அவருடைய சத்தியங்களை நாம் பல வழிகளில் புரிந்து கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பி, அன்றாட வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட முரண்பாடுகளை கூறுகிறார்.
வாழ்க்கையின் இரண்டு வாசல்கள் (மத்.7:13-14)
இடுக்கமான வாசல் பரலோகத்தின் நுழைவாயில் அல்ல, ஆனால் வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஜீவபாதையின் ஒரு பாதையின் நுழைவாயில் ஆகும். இந்த இடுக்கமான வாயில் வழியாக, இந்த பூமியில் கிறிஸ்தவர்களாகிய நம்முடைய அனுபவங்கள் இப்படித்தான் தொடங்குகின்றன. விசாலமான வாசல் வழியாகச் சென்று, உலகை அதன் கண்கவர் சோதனையுடன் தேர்வு செய்கிறோம். இயேசு தன்னுடைய வார்த்தையைக் கேட்போர் அவர்கள் ஒரு தேர்வை எடுக்கும்படியாக சவால்விட்டார். அவர்கள் கீழ்ப்படிதலின் வழியைப் பின்பற்றி சுயமறுப்பு மற்றும் அர்ப்பணிப்பை விரும்புகிறார்களா அல்லது விசாலமான வழியை விரும்புகிறார்களா என்பது ஒவ்வொருவரும் முடிவெடுக்கவேண்டியதாகும். இடுக்கமான வாசல் கடினமாக இருந்தாலும் மனந்திரும்புதல் மற்றும் உள்ளான உடைதலின மூலம் இலக்கை அடைந்து நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ள வழிநடத்துகிறது. விசாலமான வாசல் நம்மை அழிவின் பாதையில் கொண்டுசென்று பாதாளத்தில் சேர்க்கிறது.
இரண்டு ஆசிரியர்கள் (மத்.7:15-20)
இடுக்கமான பாதையில் செல்பவர்கள் தவறான தீர்க்கதரிசிகளால் மெய்யான இலக்கிலிருந்து விலக்கி மயக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கவேண்டும். ஆடுகளாக இல்லாமல் ஆடுகளின் தோலைப் போர்த்திக்கொண்டு இருக்க முடியும். மெய்யான தீர்க்கதரிசியை பரிசுத்த வேதாகமத்தின்படி அவருடைய அங்கீகரிக்கப்பட்ட போதனை மற்றும் இயேசுவின் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதால் கண்டுகொள்ளலாம். ஒரு மரத்தை அதன் வகை மற்றும் அதன் மதிப்பின் கனிகளால் அடையாளம் காணலாம். ஒரு கெட்ட மரத்தால் நல்ல கனிகனைத் தரமுடியாததுபோல, நேர்மாறாகவும் தரமுடியாது.
கனி என்பது போதனை மற்றும் வாழ்க்கை என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த சூழலில், தொனி பிந்தையதை நோக்கியுள்ளது. ஒரு ஆசிரியர் தனது நடத்தையைக் குறித்து தீர்மானிக்கப்படுகிறார். அவரைப் பொறுத்தவரை, அவர் தனது எஜமானரின் கோட்பாட்டைக் கொண்டிருக்கிறாரா, அவரது முன்மாதிரியைப் பின்பற்றுகிறாரா என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது. அத்தகையவர் ஆவியின் கனிகளைத் தருவார்கள் (கலா.5:22-23). 23வது வசனத்தில் “அறிதல்” என்ற வார்த்தையின் அர்த்தம் அங்கீகாரம். இங்கே 22வது வசனத்தின் செயல்களைச் செய்வோருக்கும் தமக்கும் இடையில் ஒருபோதும் தனிப்பட்ட உறவு காணப்படவில்லை என்று இயேசு சுட்டிக்காட்டுகின்றார்.
இரண்டு அடித்தளங்கள் (மத்.7:24-29)
இயேசு இந்த வசனங்களை அனைத்து ஜனங்களுக்கும் கூறினார். மத்தேயு 7:24ல் “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ“. நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையின் வேலை, வீட்டைக் குறித்த நாம் நினைக்கும் எண்ணங்கள் மூலமாகவும், நம் செயல்களை சொற்களின் மூலமாகவும் உருவாக்குகின்றோம். நாங்கள் ஒரு பாறையில் அல்லது புதைமணலில் கட்டுகிறோம். வரப்போகும் புயல் நெருங்கும்போது எங்கள் வீடு அசையாமல் நிற்கும் அல்லது இடிந்து விழும்.
பொருத்தமான அடித்தளமும் கட்டுமானப் பொருட்களின் பயன்பாடும் இங்கு கவனிக்கத்தக்கது. ஒரு வீட்டின் வெளிப்புறத் தோற்றம் இரண்டாம் நிலையாக உள்ளது. நம் வாழ்வில் இயேசுவின் பேச்சைக் கேட்டு, அவருக்கு கீழ்ப்படிந்தால், நாங்கள் அசைக்க முடியாத ஒரு பாறையில் கட்டப்பட்டுள்ளோம்.
சுய பரிசோதனைக்கு:
என் வாழ்க்கை நியாயத்தீர்ப்பின் புயலைத் தாங்கக்கூடிய ஒரு அஸ்திபாரத்தின்மேல் உறுதியாக நிற்கிறதா?