நாள் 18: பிரிக்கமுடியாத அன்பு மத்தேயு 5:43-48
கடைசி உதாரணமாக இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தில் புதிய நெறியை தெளிவுபடுத்தி, சீஷர்கள் தம்மை அவதூறாக பேசிய, துன்புறுத்திய, பிரிக்கப்படாத அன்பால் எதிரிக்கு காட்டப்படும் மனித ஆற்றலுக்கு மேலான கட்டளையைத் தெரிவிக்கின்றார்.
வெறுப்புக்குப் பதிலாக பிரிக்கமுடியாத அன்பு (மத்.5:43-47)
இந்த அன்பின் சட்டம் அனைத்து கிறிஸ்தவ நெறிமுறைகளின் சுருக்கமாகும். நம் எதிரியை நாம் நேசிக்க வேண்டும் என்று அது கோருகிறது, நாம் அவரை விரும்பவில்லை என்றாலும் கூட. இந்த அன்பு என்ற வார்த்தையின் அர்த்தம் மனுஷீக காதல் அல்லது சிற்றின்ப காதல் போன்றவற்றைவிட ஆழமான உள்ளடக்கம் உள்ளதாக இருக்கவேண்டும். இன்று அன்பு என்பது உணர்வுபூர்வமாக மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிறது.
இங்கே பயன்படுத்தப்பட்ட கிரேக்க சொல், அன்பு அதைச் செயற்படுத்தும் அன்பைக் குறிக்கிறது, அதாவது அன்பற்ற, அசிங்கமான, வெறுப்பான நேரத்திலும் காட்டப்படுவது அகும். இந்த அன்பு ஒன்றையும் எதிர்பார்க்காமல் கொடுக்கின்ற அன்பு. இது உணர்வோடு மட்டுப்படுத்தப்பட்டதல்ல, ஆனால் விருப்பத்தின் உறுதியான தீர்மானமும் செயல்ப்படுத்துகிறதுமாயிருக்கிறது. அது தகுதியானவர்களை சமமாக உள்ளடக்கியது. பரிசுத்த வேதாகமம் எந்த இடத்திலும் பிறரை நேசித்து சத்துருவை வெறுக்கும்படியாகக் கூறவில்லை என்பதை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும் (மத்.5:43). இந்த அணுகுமுறையை வேதாகமம் ஆதரிக்கவில்லை.
எனக்குப் பிறன் யார்?
ஒரு யூதன் “என் இஸ்ரவேல் தேசத்தான்;” என்று பதிலளிப்பான். இயேசு இந்த கருத்தை இரக்கமுள்ள சமாரியன் உவமையில் நிராகரிக்கின்றார். எனக்குப் பிறன் எனது உதவி தேவைப்படுபவன், அவன் அதற்குத் தகுதியுள்ளவனாக இல்லாவிட்டாலும் கூட.
எனது சத்துரு யார்?
44 வது வசனத்தில் இயேசு அவனைக் குறித்துக் கூறுகையில், உங்களைச் சபிப்பவர், உங்களை பகைக்கிறவர், துன்புறுத்துபவர் என்பதாக கூறுகிறார் (மத்.5:44). அதே நேரத்தில் ஒரு சீடன் இந்த எதிர்மறையான அணுகுமுறைக்கு எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்: “ஆசீர்வதியுங்கள், அன்புடன் ஜெபம் செய்யுங்கள்“. ஆச்சரியமான பிரதிபலிப்பு! இயேசு தனது செயல்களால் தனது போதனையை அடிக்கோடிட்டுக் காட்டினார் (1.பேது.2:21-22). நம்முடைய செயல்களும் நாம் தேவனின் பிள்ளைகள் என்பதை வலியுறுத்த வேண்டும் (மத்.5:45). நம்முடையது பிரிக்கப்படாத அன்பு, நாம் தேவனின் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெளிவாக்குகிறது. ஆனால் நம்முடை அனுதாபங்களும் விரோதங்களும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களைப் போன்று காணப்படக்கூடாது. (மத்.5:46-47)
பூரண சற்குணர் என்பதன் அர்த்தம் என்ன? (மத்.5:48)
இந்த வசனம் இயேசுவின் போதனையை மீண்டும் சுருக்கமாகக் கூறுகிறது. இது பிறரை நேசித்தல் தொடர்பாக விளக்கப்பட வேண்டும். இயேசு தனது உரையில் ஒரு தத்துவ முழுமையையோ முழுமையான பாவமின்மையையோ குறிப்பிடவில்லை. அவர் தேவனின் நிபந்தனையற்ற அன்பை அவர் மனதில் வைத்து, “நீதியுள்ளவர்கள் மற்றும் அநீதியுள்ளவர்கள் மேல் பெய்யும மழையை“ (மத்.5:45) சுட்டிக் காட்டுகிறார்.
பூரண சற்குணர் என்ற வார்த்தை வேறு ஒரு இடத்தில் வளருகின்றவர்களைப் பிள்ளைகளுடன் ஒப்பிடுகிறது. இந்த அர்த்தம் யாதெனில், நமக்கு அளிக்கப்பட்ட காரியத்தில் முதிர்ச்சி அல்லது நோக்கத்தின் நிலையை அடைவது ஆகும். தேவன் தன்மையில் பரிசுத்தர், அவர் நிபந்தனையின்றி நேசிக்கிறவர். ஒரு கிறிஸ்தவர் இந்த அன்பை வார்த்தையிலும் செயலிலும் காட்டும்போது பூரண சற்குணர் ஆகின்றார். பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களில் ஊற்றிய இந்த அன்பு தேவனிடமிருந்து மட்டுமே வர முடியும். நாம் அதைப் பிடித்துக் கொண்டு அதில் உறுதியாயிருக்கவேண்டும் (ரோ.5:5).
சுய பரிசோதனைக்கு:
பிறருடானான எனது அணுகுமுறை என் கர்த்தருக்கு ஏற்றவண்ணமுள்ளதா?