நாள் 8: வனாந்திரத்தில் சோதனை (மத்தேயு 4:1-11)
“முதலில் புறா, பின்னர் பிசாசு.” பிதாவினால் நிச்சயம்செய்யப்பட்டபின்பு, மோசம்போக்கும் சர்ப்பம். “நீர் என்னுடைய நேசகுமாரன“; என்ற ஆறுதலின் வார்த்தைகளுக்குப் பின்பு „நீர் தேவனுடைய குமாரனேயானால்….“ என்ற சவாலின் வார்த்தைகள்.
நேரம் மற்றும் இடம் (மத்.4:1,2)
சிறப்புமிக்க ஆவிக்குரிய செயல்கள் பொதுவாக ஆபத்துகளுடன் இருக்கும். பவுல் இதை மிகவும் வேதனையுடன் அனுபவித்தார். (2.கொரிந்தியர் 12:7). இவை பெரும்பாலும் கடுமையான சவால்களின் காலங்களாகக் காணப்படுகின்றன. ஊழியத்தின் ஆரம்பத்தில் இயேசுவை நோக்கி வந்த சோதனையானது மேசியாவின் ஊழியத்திற்கு ஒரு அக்கினிப்பரீட்சையாக அவருக்கு இருந்தது. அவர் இந்தக் கட்டளைக்குத் தயாராக இருந்தாரா? இந்த சோதனை எளிமை மிக்க ஏதேன் தோட்டத்தில் இல்லாமல், இயேசு பசியோடு இருந்த வனாந்தரத்தில் அரங்கேறியது. இதற்கு முந்தைய வலுவான நாளின் வேறுபாட்டை நாம் தெளிவுபடுத்த வேண்டும்: அநேக ஜனத்திரள் மத்தியில் மற்றும் தீவிர தனிமை. வானம் திறந்தது மற்றும் ஒரு நரக சோதனை. ஆவியினால் அபிஷேகம் மற்றும் இயேசுவை சவால் செய்த ஆவி.
சோதனையின் தன்மை மற்றும் பொருள் (மத்.4:3-10)
இந்த அறிக்கையை இயேசுவே தயாரித்ததாக இந்த நிகழ்வின் தன்மை தெரிவிக்கிறது. வேறு யார் இப்படியான தனித்தன்மை வாய்ந்த விவரங்களை அறிவித்திருக்க முடியும்? சத்துருவின் செயற்பாடுகளுடன் ஒருவரை எதிர்கொள்வது ஒரு ஆவிக்குரிய போராட்டம் மட்டுமல்லாது, ஒரு கடுமையான மோதலுக்குள் கொண்டுசெல்கிறது. சோதனையானது தேவனிடமிருந்து வந்தது, அவர் இதை அனுமதித்தார், இது சத்துருவினால் அல்ல, தேவனுடைய குமாரனை கடுமையான சோதனைக்கு இட்டுச் சென்றான் (எபி.2:18).
இயேசு ஒரு மனிதனாக சோதனையை அனுபவித்தார், ஆனால் தேவனை முழுமையாக நம்பியிருந்தார். அவருடைய தெய்வீகத்தை சார்ந்திருக்கவில்லை. அவர் நமக்காகப் பாடுகளை அனுபவித்ததால், நமக்கு கிடைக்காத வேறு எந்த வழியையும் பயன்படுத்தவில்லை. பிசாசு செய்யச் சொன்ன அற்புதங்களைச் செய்ய அவருக்கு அதிகாரமில்லையா, அப்படிச் செய்திருந்தால் அது ஒரு சத்துருவின் சோதனையாக நடந்திருக்கமுடியாது. அதே சவாலை அவர் சிலுவையில் எதிர்கொண்டார், அவரைநோக்கி: „நீ தேவனுடைய குமாரனேயானால் சிலுவையிலிருந்து இறங்கி வா“. பிசாசு நம்முடைய கர்த்தருக்கே தேவனின் குமாரனானால் என்று சவால் விட்டால், எங்களை தேவனுடைய பிள்ளைகளா என்று எதிர்ப்பது பெரிய காரியமல்ல.
சோதனை வருவது பாவமல்ல. ஆனால் நாம் அதில் ஈடுபட்டு, அதற்கு எங்கள் வாழ்க்கையில் இடமுண்டாக்கினால் அது பாவமாகிறது. இது மூன்று வழிகளில் நம்மை எதிர்கொள்கிறது: ஆசை இச்சைகளினால் சந்தோஷமடைதல், இச்சைகளினால் எடுத்துக்கொள்ளுதல், பெருமையினால் ஒன்றை அடைய நினைத்தல். இந்த எல்லா விஷயங்களிலும் இயேசு பரீட்சிக்கப்பட்டார் (எபி.4:15). பாலைவனத்தில் அவர் பரீட்சைபார்க்கப்பட்டார்.
A) தனக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ள, தேவனைவிட்டு சுயாதீனமாக செயல்படுவதற்கு அவருக்கு வல்லமையிருந்தது.
B) ஆவியானவரின் வழிநடத்தலில்லாமல் சுயத்தில் நடந்துகொள்ள முடியுமாயிருந்தது.
C) சிலுவையின் பாதையில் அல்லாமல், சமரசமாக இராஜ்யத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
சோதனை வெற்றியாக முடிந்தது
இயேசு தனது சொந்த விருப்பத்தை செய்யாமல் சோதனையை எதிர்த்தார், மாறாக பரிசுத்த வேதாகமத்திலிருந்து வார்த்தையின் மூலமாக மேற்கொண்டார். இது சோதிக்கப்படுகிற ஒவ்வொரு நபருக்கும் ஒரு முக்கியமான உண்மை. அவர் தேவனுடைய வார்த்தையை நம்பி, ஒரு பாதுகாப்பு ஆயுதமாக பயன்படுத்தினார். விசுவாசக் கேடயத்தால் சத்துருவின் அக்கினிஅம்புகள் அனைத்தையும் அணைத்தார. உபாகமத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட மூன்று பகுதிகளும் கானான் தேசத்தை இஸ்ரவேலர் கைப்பற்ற வேண்டிய அடித்தளத்தை அமைத்த புத்தகத்திலிருந்து காணப்படுகின்றன. இந்த புத்தகம் குறிப்பாக விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. ஆனால் இயேசு இது தேவனால் ஈர்க்கப்பட்டதாக நம்பினார்.
உங்கள் சிந்தனைக்கு:
சோதனையின் நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவுவார் என்று நான் நம்பி, வார்த்தைகளை நினைவில் கொள்கின்றேனா?