செய்யக்கூடாததை செய்தது பாவமாயிற்று. ஆனால் செய்ய வேண்டியதைச் செய்யாமலிருப்பதும் பாவம்தான். இன்றைய மனிதர் செய்யக் கூடாததைச் செய்து பாவத்தின்மேல் பாவத்தைக் கூட்டுகின்றனர் என்பது ஒரு பக்க உண்மை… மறுபக்கம் இன்றைய மனிதனின் நரக சிட்சைக்குக் காரணமென்ன? அவன் பாவியாக பிறந்ததோ. பாவத்தில் வாழ்வதோ அல்ல….. அவனது பாவத்துக்கான பரிகாரமாக மரித்த இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, பாவ வாழ்வை விட்டு மனந்திரும்பி இரட்சிப்பை இலவசமாக பெற்றுக்கொள்ளாததுதானே.
இங்கு அவன் செய்ய வேண்டியதை செய்யாமல் போவதே பாவம்.
விசுவாசியைப் பொறுத்தவரை….. எதற்காக உலகில் வைக்கப்பட்டுள்ளனர்? உப்பாக வாழ … வெளிச்சம் வீச… சுருக்கதாய் சொன்னால் நன்மை செய்ய.
விசுவாசி நன்மை மட்டும் செய்வதற்காகவே இன்று உலகில் வைக்கப்பட்டிருக்கிறான் என்பது பரலோகத்தின் அறிக்கை. அவன் உப்பாக வாழவில்லையேல், வெளிச்சம் கொடுக்கவில்லையேல் பாவம்.
உப்பே விஷமாகிப் போகுமானால் வெளிச்சமே இருட்டைக் கொடுக்குமானால் எவ்வளவு விபரீதம்? நான் விசுவாசிகள் தீமை செய்வதைப் பற்றிப் பேசுகிறேன்.
நீ தண்டனைக்கு தப்புவாயோ விசுவாசியே?