நாள் 5: அப்பாவி மக்கள் மீது படுகொலை (மத்தேயு 2:16-23)
இயேசுவின் உயிரை மற்ற குழந்தைகளின் மரணத்தினால் மட்டுமே காப்பாற்ற முடிந்தது என்பது ஒரு சோகமான காரியம். ஆனால் இந்த துயரமானது மனிதனின் பாவத்தின் விளைவாகும். சுகபோகமான, தீங்கற்ற, உன்னதமான செயல்கள் சில நேரங்களில் வலிமிகுந்த பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. நம்முடைய கர்த்தரின் வார்த்தைகள், பட்டயத்தையும் அமைதியையும் கொண்டுவந்தது என்பதை தெளிவுபடுத்துகிறது.
அப்பாவிகள் மத்தியில் படுகொலை (மத்.2:16-18)
சாஸ்திரிகள் வேறுதிசையில் சென்றுவிட்டதை அறிந்த ஏரோது மிகுந்த கோபமடைந்தார்.
ஆனால் அவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. எனவே பெத்தலகேமை சுற்றியுள்ள இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரையும் படுகொலை செய்ய உத்தரவிட்டார். எனவே சிம்மாசனத்தில் அவரோடு யாரும் போட்டியிட முடியாதவாறு கவனமாக இருந்தார். ஏரோதுவைப் பொறுத்தவரை படுகொலை ஒன்றும் புதிதல்ல. ஏராளமான அரசியல் கொலைகளுக்கு மத்தியில், அவன் தனது மனைவி, மாமி மற்றும் அவனது மூன்று மகன்களைக் கொலைசெய்தான். இந்த மனிதாபிமானமற்ற அரக்கனுக்கு சிறிய குழந்தைளின் மரணம் பெரிதாகத் தெரியவில்லை. இந்த கொடூரமான நிகழ்வு பெத்லகேம் பெரிய பட்டணமாக இல்லாதபடியால் அதிஷ்டவசமாக சிறிய எண்ணிக்கையிலான குழந்தைகளே பாதிக்கப்பட்டனர். மக்கள் இயேசுவை துரத்துவதற்கு எப்படியான செயல்ககளை மேற்கொள்ளுகிறார்கள்.
யோசேப்பின் நிபந்தனையற்ற கீழ்ப்படிதல் (மத்.2:19-23)
யோசேப்பு வம்சவரலாற்றின் பக்கங்களில் அதிக முக்கியத்துவம் பெறுகிறார். குறிப்பாக தேவனின் சித்தத்திற்குக் அவர் கீழ்ப்படிதல் இந்த தாழ்மையின் பண்புகளில் ஒன்று. தேவன் பேசியவுடன், அவர் தயக்கமின்றி நிபந்தனையின்றிக் கீழ்ப்படிந்தார். அவர் திருமண ஏற்பாடுகளை விட்டு, இலகுவல்லாத விளைவுகளை தம்மீது எடுத்துக்கொண்டார் (மத்.1:24). அவர் குழந்தைக்கு இயேசு என்று பெயரிட்டார் (மத்.1:25). அவர் தனது குடும்பத்தினருடன் எகிப்துக்குத் தப்பிச்சென்றார் (மத்.2:14). அவர் கலிலேயாவுக்குத் திரும்பினார் (மத்.2:21). (இந்த 20ம் வசனத்தை தயவுசெய்து யாத்திராகமம் 4:19 உடன் பார்க்கவும்)
தேவனின் திட்டத்தை எதிர்ப்பது எவ்வளவு அர்த்தமற்றது என்பதை வரலாறு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வால்டேர் என்று நன்கு அறியப்பட்ட பிரெஞ்சு நாத்திகர், அவரது சிறந்த தாலந்துகளை வேதாகமத்தை அலட்சியம்செய்யும்படியான காரியத்தில் செலவழித்தார். பிற்காலத்தில் ஜெனீவாவில் உள்ள அவரது வீடு வேதாகம சங்கத்தின் பொக்கிஷசாலையாக மாறியது. தேவனே இறுதியில் நகைப்பார்.
தெய்வீக எச்சரிக்கைக்குக் கீழ்ப்படிந்த யோசேப்பு (மத்.2:22), ஒரு சிறிய முக்கியமான பட்டணமான நாசரேத்துக்குத் திரும்பினார். இதன்மூலம் அவரது மகன் வெளிப்படையான காரியங்களுக்கு விலகியிருந்து, உலகத்தின் நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள ஏதுவாக இருந்தது. இந்தப் பட்டணம் அசட்டை செய்யப்பட்டிருந்தது, அதாவது நசரேயர்கள் என்ற மோசமான வார்த்தையையினால் இழிவுபடுத்தப்பட்டது, அந்தியோகியாவின் கிறிஸ்தவர்களைப் போலவே. (அப்.11:26).
பழைய ஏற்பாட்டின் மேற்கோள்கள் (மத்.2:6,15,18,23)
மத்தேயு இந்த அத்தியாயத்தை பழைய ஏற்பாட்டின் கருத்துக்களோடு மேற்கோள் காட்டும்போது சில சிக்கல்களை எழுப்புகிறது. ஒரு மேற்கோள் கூட மேசியாவின் பிறப்பில் தீர்க்கதரிசனமாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் சொந்த வரலாற்றை இணைத்துள்ளனர். மத்தேயு 2:23 வார்த்தைகள் பழைய ஏற்பாட்டின் ஏசாயா 11:1 ற்கு ஒவ்வாததாகக் காணப்படுகிறது. ஆனால் எழுச்சியூட்டும் ஆவியின் வழிகாட்டுதலின் கீழ் உண்மையான ஆசிரியரான பரிசுத்த ஆவியானவர், மத்தேயு கிறிஸ்துவின் பிறப்பின் இரண்டாவது தீர்க்கதரிசன விளக்கத்தை அங்கீகரித்தார்.
உங்கள் சிந்தனைக்கு:
தேவனிடமிருந்து வரும் ஆறுதலையும் பலத்தையும் நாம் எடுக்கும்போது, அவரது குறிக்கோள்களுக்கு எதிரான எல்லாவற்றையும் அவர் தடுத்து நிறுத்துகிறார்.