வாழ்க்கை முறையும் தேவ பக்தியும் பின்னிப் பிணைந்தவை. ஏசாயா இதனைத் தெளிவாக விளக்குகிறார். பல நேரங்களிலும் தேவன் நமது வாழ்வில் செயல்பட இடையூறாக இருப்பவை நமது அக்கிரமங்களாகும். தேவன் நம்மை விட்டுத் தூரம் போவதில்லை. நாம்தான் தேவனை விட்டுத் தூரம் போகிறோம்.
* கொடுமை, கொலை (ஏசா 59:3)
* பொய் (ஏசா 59:3)
* நியாயக் கேடுகள் (ஏசா59:3)
* வழக்குகள், நீதி, சத்தியத்தைத் திரித்தல் (ஏசா 59:4,8)
* தீய திட்டங்கள், நினைவுகள் (ஏசா 59:4, 7)
* பிறரிடம் தீமை பரவக் காரணமாகுதல் (ஏசா 59:5.6)
போன்றவற்றை வைத்துக் கொண்டு தேவனிடம் நெருக்கமாக இருப்பது எப்படி? எனவே இவற்றைக் களைந்துவிட்டு வருவோரை ஆசீர்வதிக்க தேவன் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்.
(நன்றி: சொல்லோவிய வேதாகமம்)